
50 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு அரசியல் புரட்சியாளர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதப் போகிறார் என்ற பயம் வந்து விட்டது.
அதனால்தான் ,இந்த ஆட்சியை ஆரம்பத்திலே எப்படியாவது சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட வேண்டும் என்பதுதான் திராவிட கட்சிகளின் நோக்கம்.

இந்த நோக்கம் எப்படியோ உளவுத்துறைக்கு தெரிந்து ,அதை தமிழக முதல்வர் விஜயின் காதுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
மேலும், மக்கள் எதிர்பார்க்கின்ற ஊழலற்ற ஆட்சியை ஜோசப் விஜய் இந்த 50 நாட்களில் மக்களுக்கு இவர் புரிய வைத்துள்ளார். அதனால்தான், இனிய அரசியலில் திராவிட கட்சிகள், திராவிட கட்சிகளின் பாரம்பரியங்கள், கதறிக் கொண்டிருக்கிறது.

இதற்கு அரசியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது ?என்று தெரியாமல், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும், சமூக வலைதளங்களில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மேலும் விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தான் அதிகரித்துள்ளது.
அதனால், இந்த ஆட்சியை எப்படி கவிழ்ப்பது, என்று திட்டம் போட்டு அவர்களுடைய எம்எல்ஏக்களில் யாரெல்லாம் விலை போகக்கூடியவர்கள்? என்பவர்களை செந்தில் பாலாஜியின் ஆட்கள் அவர்களுக்கு விலை பேசி ,ஆட்சி கவிழ்க்கும் சூழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இது உளவுத்துறை மூலம் முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லவே ,அதற்கான முற்றுப்பள்ளி வைக்க, ஏற்பாடுகள் நடந்தேறி வருகிறது.
திமுக ஒருவரை கவிழ்க்க உறவாடியும் கவிழ்ப்பார்கள், இல்லையென்றால், பணத்தாலும் கவிழ்ப்பார்கள். இதுவும் இல்லை என்றால், நயவஞ்சகமாக பேசிய கவிப்பார்கள். ஆக கூடி திமுக மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா?
