
நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டு மக்களுக்கானது. இந்த தேசத்திற்கானது, சமூக நலனுக்கானது. தவிர,இதற்கு எதிராக செயல்பட்டாலும், அல்லது மக்களுக்கு எதிராக செயல்பட்டாலும், இந்த தேசத்திற்கு எதிராக செயல்பட்டாலும், அது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும்,அரசு நிர்வாகத்தின் தவறுகளை, அரசாங்கத்தின் தவறுகளை, சுட்டிக்காட்டாமல் பத்திரிக்கை, தொலைக்காட்சி என்று அவர்களின் அரசியல் கருவியாகவும், அரசாங்க கருவியாகவும், செயல்பட்டால், அது பத்திரிகை அல்ல .

அது பத்திரிகையின் போர்வையில் வெளிவந்து கொண்டிருக்கும், போலி பத்திரிகைகள். இந்த போலி பத்திரிகைகள், பல கார்ப்பரேட் ஊடகமாகவும், பத்திரிகைகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், மக்களுக்கு பத்திரிகை என்றால் என்ன? என்று புரியாது. தெரியாது.

மேலும்,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து, இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டப் பேரவையில் ,பிப்ரவரி 19 /2026 ல் , தேசிய மாநாட்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் தன்வீர் சாதிக், அரசு விளம்பரங்களுக்காக மட்டுமே இயங்கும் பேய் (Ghost) செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் என்ற தலைப்பில் காஷ்மீரி டைம்ஸ் வெளியிட்ட செய்தியை அவையில் படித்த போது அவை சிரிப்பலைகள் எழுந்துள்ளது.

மேலும்,இது காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், இதே நிலைமை தான். சொல்லப்போனால் ,தமிழ்நாட்டில் இன்னும் அதிகமாக தான் இந்த நிலைமை இருந்து வருகிறது.
ஏனென்றால், ஒரு சமூக நலனை ,மக்கள் நலனை, சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட தமிழ்நாட்டில் இல்லையா? என்ற கேள்வி? எங்களுக்கெல்லாம் எழுகிறது. மேலும்,

காஷ்மீரில் தன்வீர் பிரசாத் என்ற சட்டமன்ற உறுப்பினர், இந்த உண்மையை சட்டமன்றத்தில் வெளியிடும்போது ,இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த உண்மை இவர்களுக்கு தெரியாதா? மேலும், இவர்கள் சமூக நலனும் ,மக்கள் நலனும் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களா? இப் பிரச்சனையை தொடர்ந்து மக்கள் அதிகாரம் இந்த செய்தியை எமது இணையதளத்திலும் ,பத்திரிகையிலும் வெளியிட்டு வருகிறது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் தன்வீர் சாதிக் சட்டமன்றத்திலே வாசித்த அந்த பத்திரிகையின் பெயர்கள் என்னவென்றால்,பிஷ் ஐ (Fish eye ), லேக் வியூ ( Lake view) , பர்கி (Bargi),சினார் ((Chinar), பேகௌஃப் ஷங்க் (Bekhouf),(ஜம்போ Jumbo), பூமி (Bhumi),தீஸ்ரி இங்க் (Teesri Ankh ), தீஸ்ரி துனியா ( Teesri Duniya) இது ஜம்மு காஷ்மீரில் அளவுக்கு அதிகமாக அரசு விளம்பரங்களை பெறக்கூடிய பத்திரிகைகள். இந்த பத்திரிகை செய்திகளில் தகவல் தொடர்பு துறை அதாவது செய்தித் துறையின் எழுத்துப்பூர்வமான செய்திகளை மட்டுமே வெளியிட்டு, வந்த செய்தித்தாள்கள். சுருக்கமாக சொன்னால், இந்த பத்திரிகைகளுக்கு மட்டும் தான் சலுகை, விளம்பரங்கள் என்று காஷ்மீர் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகைகளாக மக்களின் வரிப்பணத்தை மறைமுகமாக சுரண்டும் பத்திரிகை மோசடி வேலை.

அதாவது ஆட்சியாளர்களிடம் விலை போன பத்திரிகைகளுக்கு தான் இந்த சலுகை, விளம்பரங்கள், அவர்களின் ஊழலுக்கு ஒத்து ஊதக்கூடிய பத்திரிகைகளுக்கு தான் ,இந்த சலுகை, விளம்பரங்கள், இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு தான் அங்கீகாரம் என்றால், இது பத்திரிகை சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான ஒன்று.

இதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த பத்திரிகை துறையின் அவலங்களை மக்களிடம் எடுத்து வைத்திருக்கிறது. மேலும்,அதற்கு அரசாங்கம் சர்குலேஷன் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. இதைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் இன்று வரை அந்த துருப்பிடித்த சட்டங்களை பயன்படுத்தி வருகிறார்கள். காலத்திற்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இப்படி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டு கருவியாக விளம்பர கொள்கைகள் தீர்மானித்து வைத்துள்ளனர். மேலும், இந்த விளம்பரக் கொள்கைகள் ,பத்திரிகைகளுக்கு தேச நலனும், சமூக நலனும், மக்கள் நலனும், முக்கியத்துவமான கொள்கையாக இல்லை.
அதாவது, பத்திரிகைகள் இவர்களுடைய அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இயங்க வைப்பது தான் ,இதன் நோக்கமாக உள்ளது . பத்திரிகை சுதந்திரம் என்பது பேச்ச அளவில் தான் உள்ளது. மேலும், பத்திரிகைகளின் நோக்கம் ,அதன் செயல்பாடுகள், மக்களுக்கான அதன் தேவைகள், மக்களின் எதிர்பார்ப்புகள், இதற்கான பத்திரிகைகள் இல்லை .

நடந்த நிகழ்வுகள், சம்பவங்கள், இந்த செய்தியை பெரிய செய்தி என்று பல பத்திரிகை செய்தியாளர்கள், பத்திரிகைகள் வெளியிட்டு, வருகிறது. இதனால், மக்களுக்கு என்ன பயன்? என்று கூட தெரியாது. அதுமட்டுமல்ல, இந்த சலுகை, விளம்பரங்களை பெற்ற பத்திரிகைகளின் செய்தியாளர்களுக்கு, இந்த பத்திரிகைகள், செய்தி துறையின் கட்டுப்பாட்டில் இயங்குவது கூட அவர்களுக்கு தெரியாது . ஏதோ ஒரு அரசு அடையாள அட்டையை ,தொங்க விட்டுக் கொண்டு, பத்திரிக்கை வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பந்தாவாக சுற்றி திரிவார்கள் .

அப்படி என்றால் ,ஊழலுக்கு எதிராக போராடுகின்ற பத்திரிகைகள் எத்தனை ?சமூக நலனுக்காக போராடுகின்ற பத்திரிகைகள் எத்தனை? மக்கள் நலனுக்காக போராடுகின்ற பத்திரிகைகள் எத்தனை? விரல்விட்டு கூட எண்ண முடியாது . ஆனால்,அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்ற பத்திரிகைகள், இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிக்கு ஆதரவான பத்திரிகைகள்,தவிர, வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகள், இவை அனைத்தும் கார்ப்பரேட் ஊடகங்களாக இன்று அரசின் சலுகை, விளம்பரங்கள், பெறக் கூடிய பேய் ஆக இருந்து வருவதாக காஷ்மீரி டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும், போலியான சர்குலேஷன் பிம்பத்தைக் காட்டி, இந்த சலுகை, விளம்பரங்கள் அதுவும் தினசரி என்ற பெயரில் மோசடி வேலை அனைத்து மாநிலங்களிலும் தொடர்கிறது. இந்த பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகள், குப்பைக்கு சமமான செய்திகள், இதனால், மக்களுக்கு எந்த பயனும் இருக்காது. ஆனால் அதுவும் பத்திரிக்கை என்று அதற்கு சலுகை, விளம்பரங்கள்.

என்ன மக்களின் வரிப்பணம் தானே, இவர்கள் வீட்டில் இருந்து கொடுத்தால், பரவாயில்லை. அவைகள் நம்முடைய விசுவாச பத்திரிகைகள் .அதனால், இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள். இப்படி இருந்தால் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை நான்காவது தூண் என்று எப்படி இதை சொல்ல முடியும்? மேலும் ,உண்மைகள் எப்படி மக்களிடம் இந்த பத்திரிகைகள் கொண்டு போய் சேர்க்கும்?

இது தவிர,ஆட்சியாளர்களின் சொந்த கட்சி பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், இவையெல்லாம் பத்திரிகைகள் என்று அரசாங்கம் ஆனால் தகுதியான பத்திரிகைகளை அங்கீகரிப்பதில்லை.

மேலும்,பொது ஒழுக்க நெறிகளை மீறும் பத்திரிகை இதழ்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் என்று அக்டோபர் 2025இல் ஒரு கண்காணிப்பு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதாவது போலி பத்திரிகைகள், பத்திரிகையாளர்களை தடுப்பதாக கூறி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது பத்திரிகையாளர்களின் ஆதார் பான் கார்டு 6 மாத சம்பள பட்டியல் மற்றும் சமூக ஊடக விவரங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் . இதை யார் செயல்படுத்துவது? அரசாங்கம் தானே இதுவரை இந்த சட்டவிதி கிடப்பில் போடப்பட்டுள்ளது.மேலும்,
தற்போது தமிழ்நாட்டில் பத்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கும் பத்திரிகைகளுக்கு மட்டுமே, இப்படிப்பட்ட இந்த சலுகை, விளம்பரங்கள், மீண்டும் அரசாங்கம் சமூக நலன் பத்திரிகைகளை ஆதரிக்காமல், கார்ப்பரேட்டை மையப்படுத்தி தான் பத்திரிகைகள் என்று இந்த சர்குலேஷன் சட்டம் சொல்கிறது. மேலும் இந்த சட்டம் 10,000 பிரதிகள், அச்சடித்தால், எவ்வளவு சலுகை, விளம்பரங்கள் கொடுப்போம் என்பதை அதையும் தெளிவாக குறிப்பிடவில்லை.
ஆனால், இந்த சட்டங்கள் செய்தியின் தரத்தை, சமூக நோக்கத்தை ,அதைப்பற்றி எல்லாம் முக்கியத்துவம் ஆக வலியுறுத்தவில்லை. தவிர, சர்குலேஷன் என்பது பணம் .பணம் இருப்பவர்கள் பத்தாயிரம் என்ன? ஒரு லட்சம், ஒரு கோடி கூட அடிக்கலாம். இந்தப் பத்திரிகையின் செய்திகளால், மக்களுக்கு என்ன பயன்? அதைப் பற்றி செய்தித் துறை தீர்மானிக்கவில்லை.

இப்படி தவறான சட்டங்கள் மத்திய, மாநில அரசின் செய்தித் துறை சட்டங்களாக இருந்து வருகிறது. இதுவே, பத்திரிக்கை துறையில் போலிகளை உருவாக்க ,முக்கிய காரணமாக இருக்கிறது . இந்த போலிகள் தான், அரசாங்கத்தின் சலுகை, விளம்பரங்களை தற்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,பத்திரிகையின் நோக்கம், மக்களுக்கான நோக்கம் ,எதுவும் தேவையில்லை. இவர்களுடைய பத்திரிகை வியாபாரம் ,அரசியல் வியாபாரம், நடக்கிறதா? அதற்கு எந்தெந்த பத்திரிகைகள் ஒத்துழைக்கிறது? அதுதான் அங்கீகாரம் பெற்றது . இப்பதாவது மத்திய, மாநில அரசுக்கு இந்த உண்மைகள் புரிகிறதா? பொதுமக்களுக்கு புரிகிறது. நீதித்துறைக்கு புரிகிறது. மத்திய மாநில அரசின் உளவுத்துறைக்கு போகிறது .ஆனால், செய்தித் துறைக்கு மட்டும் ஏன் புரியவில்லை? என்பது தான் சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் கேள்வி?