
தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன?

மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா?
இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், மேலும், பிஜேபி அண்ணாமலை, சீமான் போன்றோர் யூடிபர்களாக தான் அவர்களை பார்க்க வேண்டி இருக்கிறது.

என்ன சீமானுக்கு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி, கொடி இருக்கிறது .கட்சி பெயர் இருக்கிறது. மற்றவர்களுக்கு அது இல்லை. ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு ,பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுதான் வித்தியாசம், இரண்டு பேருக்கும், வித்தியாசம்,வேறு ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும்,
ஒரு அரசியல்வாதி என்றால்! இவர்கள் அரசியலில் மக்களுக்கு என்ன பணி செய்து இருக்கிறார்கள்? தினமும் என்ன செய்தார்கள்? இல்லை, ஒரு வாரத்துக்கு ஒரு நாளாவது என்ன செய்திருக்கிறார்கள்? மாதத்துக்கு ஒரு நாளாவது என்ன செய்திருக்கிறார்கள்? அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு தடவையாவது என்ன செய்திருக்கிறார்கள்? வருஷத்துக்கு ஒரு தடவையாவது, என்ன செய்திருக்கிறார்கள்?

தினமும் ஒருவரைப் பற்றி, ஒருவர் ஏதோ ஒரு ஜஸ்டின் இன்பர்மேஷன் (just information )செய்தி சொல்வார்கள் .அந்த செய்தியை சொல்லிக் கொண்டு ,அது ஒருவரை பற்றி விமர்சனமாக கூட இருக்கலாம். இதை வைத்து எப்படி நீங்கள் அரசியல்வாதி என்று நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள் ?

ஒரு கட்சியில் இருப்பவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதிகளா? கொடி பிடிப்பவர்கள் ,கோஷம் போடுபவர்கள், புரோக்கர் வேலை பார்ப்பவர்கள் ,இவர்களுடைய சொந்த வேலையை பார்த்துக் கொள்பவர்கள், இதை வைத்து வியாபாரம் செய்பவர்கள், கிராமங்களில் விஜய் பேனர் வைத்துவிட்டு, கொடி கட்டி ரெக்கார்ட் டான்ஸ் ஆடுகிற பசங்களெல்லாம் அரசியல்வாதியா?

இத்தனை பேரும் அரசியல்வாதி என்றால் !அப்போது அரசியல்வாதிக்குள்ள தகுதி என்ன ? அதுவாவது தெரியுமா? அல்லது பாடி பிட்டா சர்ட் ,வேட்டி கட்டிக் கொண்டு, மீசை இருந்தால், மீசையை காட்டிக் கொண்டு, அரசியல் கட்சியை பின்புலத்தில்,அடியாள் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், இவர்களுக்கு வாக்கபலமாக,நாலு எடுபிடிகள் வைத்திருந்தால் ,அந்த எடுபிடிகளை வைத்துக் கொண்டு, அரசியல் வாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள்,இவனெல்லாம் எல்லாம் அரசியல்வாதி என்றால்!

அப்போது அரசியல்வாதிக்குள்ள தகுதி என்ன? தவிர,இதை பற்றி,எந்த பத்திரிகை, தொலைக்காட்சியாவது, மக்களுக்கு எடுத்து சொன்னால் தானே தெரியும். அவர்களையும் அரசியல்வாதி என்று சொல்லி, ,அவர்களிடமே வாங்கி தின்று கொண்டு பிழைப்பு நடத்தலாம். அவர்களை அரசியல்வாதியாக்கி அரசியல் வியாபாரம் செய்யலாம். மக்கள் உண்மை தெரியாமல், பேசுபவர்கள் எல்லாம் அரசியல்வாதி என்று அவர்களுக்கும் வாக்களித்து ஏமாறட்டுமே.

நம்முடைய பத்திரிகை, தொலைக்காட்சி, வியாபாரம் நன்றாக நடக்கிறது. நாம் பெரிய பத்திரிக்கை, நாம் பெரிய தொலைக்காட்சி ,மக்கள் இதை தான் நம்புவார்கள். உண்மையை யாரும் நம்ப போவதில்லை. அதனால், இவர்கள் பொய் சொன்னாலும், உண்மை சொன்னாலும், நம்முடைய பத்திரிக்கை, தொலைக்காட்சியில் செய்தியாக போட்டுக் கொள்ள வேண்டியது தான். எப்படியும் பணம் கொடுப்பார்கள்.
இல்லையென்றால் அந்தக் கட்சிக்காரர்கள் பார்ப்பார்கள். நமக்கு ஏதோ ஒரு விதத்தில் வருமானம் வருகிறது. அது போதாதா? அரசாங்கம் நம்மை தான் பத்திரிகை, தொலைக்காட்சி என்று அங்கீகரித்து இருக்கிறது. அதுவும் நம்முடைய வியாபாரத்தை தான் அங்கீகரித்திருக்கிறது. இப்போதாவது இந்த உண்மை செய்தி துறைக்கு, இந்த சர்குலேஷன் சட்டம் புரிகிறதா? மேலும், போலியான பத்திரிக்கை பிம்பம் புரிகிறதா? போலி அரசியல் இதுக்குள் இருப்பது தெரிகிறதா? மேலும்,

இது பற்றி மக்களுக்கும் தெரியாது. பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் தெரியாது. தவிர,RNI , and ID ஏதோ ஒரு பத்திரிக்கை பேர் சொல்லிக்கொண்டு இருந்தாலே நாம் பத்திரிகையாளர்கள் தான். இல்லை வாட்ஸப்பில், பேஸ்புக்கில் ஏதோ ஒரு சம்பவம் நடந்த செய்தியை காப்பி அடித்து போட்டுக் கொண்டு, போட்டுக் கொண்டிருப்பவர்களும் ,பத்திரிக்கையாகி விட்டார்கள்.

ஆக கூடி போலிகள் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு பத்திரிக்கை தொலைக்காட்சிகள் சிறிய பத்திரிகைகள் அடித்தட்டு மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்?மக்கள் அதிகாரம் இந்த உண்மைகள் மக்களிடம் போய் சேர வேண்டும். மக்கள் போலிகளிடம் ஏமாறக் கூடாது. இதுதான் எமது பத்திரிக்கையின் நோக்கம்.மேலும்,

அரசியல் என்பது வாய் பேச்சிலோ, பந்தா பேச்சிலோ, வெத்து பேச்சிலோ, இல்லை.மக்களிடம் உண்மையை பேசுவதில் தான் அரசியல்வாதி. மக்களிடம் உண்மையாக இருப்பவர்கள் தான் அரசியல்வாதி. மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பு செய்பவர்கள் தான் அரசியல்வாதி. மேலும்,
எதுவுமே செய்யாமல், பேப்பரில் தன்னை விளம்பரம் படுத்திக் கொண்டு ,தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திக் கொண்டு, யூடியூபில் விளம்பரப்படுத்திக் கொண்டு ,வீடியோ போட்டுக் கொண்டு ,பேனர் வைத்துக் கொண்டு இருப்பவர்கள், அரசியல்வாதியா? என்பதை பொதுமக்கள், இதை படித்து பார்க்கும் போது ,

உங்கள் மனசுக்குள்ளே இவர்கள் யார் ?என்பது தெரிய வருகிறதா ?இல்லையா? உண்மையை புரிந்து கொண்டால், வருங்கால சந்ததிகளுக்கு அரசியல் என்பது ஏமாற்றமாக இருக்காது.

அதுதான் இன்றைய அரசு ஊழியர்கள் முதல் சாமானிய உழைக்கும் மக்கள் வரை, வாழ்க்கையின் போராட்டம் , தங்களுடைய வாழ்வாதார உரிமைக்காக போராடுவது,ஆட்சியாளர்களோடும், அரசியல் கட்சிகளோடும், இருக்கிறது என்பதை இப்போதாவது உணர்ந்து இருப்பார்களா?
ஆசிரியர்.