
தமிழர்களின் தைத் திருநாளில்! சூரிய பகவானின் அருளாசியும், பெற்றோரின் அருள் ஆசியும், இறைவனின் அருளாசியும், பெற விரதம் இருந்து வணங்குகின்ற திருநாள்! தைப்பொங்கல் திருநாள்! மறுநாள் மாட்டுப்பொங்கல்!

நாம் வளர்க்கும் மாடுகள், நம்மை வாழவைக்கும் தெய்வமாக வணங்கி, உழவர்களின் உழைப்பில் விளைந்த நெல்மணியில் பச்சரிசி பொங்கல் !இட்டு,தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தில், பழமை மாறாமல் புதுப் பானையில், பொங்கலிட்டு !நம் முன்னோர்களின் வழிகாட்டுதலோடு வணங்குகின்ற நம்முடைய மகிழ்ச்சி, சந்தோஷம் பாரம்பரியமிக்கது .
இது எந்த நாட்டிலும் ,எந்த மாநிலத்திலும் ,இல்லாத ஒரு பெருமை! தமிழர்களின் பெருமை.
இந்நாளில் உழவர்கள் ,உழைப்பாளர்கள், உறவுகள், நண்பர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், வியாபாரிகள், நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள், பத்திரிக்கை துறை சார்ந்தவர்கள்,
அனைவருக்கும் எமது மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இன் நன்நாளில் அனைவருடைய இல்லங்களிலும், இன்பங்கள் பெருக! இறையருள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.
என்றும் சமூகப் பணியில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை …! 🙏🍀.