
அரசியலும் ,அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் ,மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது. காரணம், ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியலில் நேர்மை என்பது முக்கியம் .

அந்த நேர்மையை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இழந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, இன்று அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து நிர்வாகிகளும், அர்ப்பணிப்பும் , நேர்மையும், அவர்களிடம் இல்லை.

இது சமூகத்தில், இவர்களுடைய சுயநலம், எதிர்பார்ப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகளை விட, அதிகமாக இருக்கிறது. தற்போதைய அரசியல் கட்சிகளில், பொதுநலத்திற்கும், சுயநலத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

சீமான் மாதிரி ஆட்கள், திருமாவளவன் மாதிரி ஆட்கள், இவர்கள் எல்லாம் ஒரு கூட்டத்தை கூட்டி உட்கார வைத்துக் கொண்டு, அந்த மேடையிலே அரசியல் நடிப்பு நாடகத்தை நடத்திக் கொண்டு, அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டு, அந்தக் கூட்டம் அதற்கு கைதட்டிக் கொண்டு, ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு, இவர்கள் யோகியர்களாக பேசிக்கொண்டு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் தான் தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இன்று ஒரு அரசியல் கட்சி கூட தனித்து நின்று ஜெயிக்க முடியாத அளவுக்கு இவர்களுடைய தகுதி, தரம் குறைந்துவிட்டது. மேலும், 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுகவும் ,திமுகவும் இன்று கூட்டணி இல்லாமல், ஜெயிக்க முடியாது என்ற நிலைமைக்கு இவர்களுடைய கட்சி நிலைமை உள்ளது.

இதுவே இப்படி என்றால் ,மற்ற கட்சிகளின் நிலைமை எப்படி இருக்கும்? இப்போதாவது, அரசியல் கட்சிகள் அவரவருடைய கட்சியின் தகுதி? மக்கள் செல்வாக்கு? இவர்களின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு? மக்களிடம் அந்த, அந்த கட்சியின் செல்வாக்கு என்ன?

மேலும், அந்தந்த கட்சியினர் மக்களுக்காக செய்த சமூக சேவை என்ன? இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் இன்று அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

கேட்டால் நான் மாவட்டம், வட்டம், ஒன்றியம், இவர்களுடைய பாக்கெட்டில், இவர்களுடைய கட்சித் தலைவர் போட்டோவை வைத்துக்கொண்டு ,பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இதைத் தான் பார்க்க முடிகிறது.மேலும்,

இல்லையென்றால், ஒவ்வொரு ஊருக்கு மத்தியிலோ, வெளியிலோ கூட்டமாக போட்டோ போட்டு,அதை ,கட்சியின் டிஜிட்டல் பேனரில், தங்கள் முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இவர்களுடைய அரசியலா?
அது மட்டுமல்ல,இவர்கள் கட்சிக் கொடியை பிடித்துக் கொண்டு, கத்திக் கொண்டு கூட்டமாக வருவார்கள் . கூட்டத்தை பார்த்து ,அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா? மேலும்,

அரசியல் என்றால், கூட்டத்தில் வாழ்க, ஒழிக, கையெடுத்து கும்பிட்டு, காலில் விழுவதுதானா அரசியல்? அதனால்தான் இப்போது திமுக மந்திரிகள் ஒவ்வொருவரும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஏறிக்கொண்டு, ஊழல் வழக்காடி கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி இருந்தால் ,எந்த அரசியல் கட்சி மீது , இந்த மக்களுக்கு நம்பிக்கை இருக்கும்? மேலும், மக்களை ஏமாற்றுவதற்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை. ஆனால், மக்களை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு நல்லது செய்யவும் அரசியல் கட்சிகள் தேவை.

தவிர ,இன்று அதிமுக எம் ஜி ஆர் தலைமையில் இருந்த போது,கூட்டணி அரசியலை ஒரு நாளாவது எதிர்பார்த்தாரா? மேலும், கருணாநிதியாவது கூட்டணி அரசியலை எதிர்பார்த்தார்.

ஆனால் ,எம்ஜிஆர் ஒரு நாளும் கூட்டணி அரசியலை எதிர்பார்த்து தமிழ்நாட்டில் அரசியலை கொண்டு செல்லவில்லை. இதுதான் அரசியல் கட்சித் தலைவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை எத்தனை அரசியல் கட்சி தலைவர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கிறார்கள்?

ஆனால்,தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் மீது வைக்காமல், தமிழ்நாட்டில் உள்ள கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்கைகள் மீது நம்பிக்கை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் செய்யவில்லை. இவர்கள் மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் .இல்லை என்றால்! மக்கள் எப்படி இவர்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள்? அதற்கு பதிலாக இவர்கள்

கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளின் மைக்கைகள் மீது நம்பிக்கை வைத்து, அரசியல் செய்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல். இந்த அரசியலை ,நேர்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் ,எவரும் செய்ய மாட்டார்கள்.

இது போலியான அரசியல் கட்சித் தலைவர்கள் தான் இப்படி மைக்கைகளை நம்பி அரசியல் செய்துக் இதற்குப் பெயர்தான், மக்களை ஏமாற்றும், போலி அரசியல்.

இது போலியான பத்திரிக்கை பிம்பம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. இப்போது இந்த உண்மை அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் புரிகிறதா?

பெரிய தொலைக்காட்சி பெரிய பத்திரிக்கை என்பது இந்த போலி பத்திரிகை பிம்பத்தால், மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமே என்பதை பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு புரிந்து இருக்கிறதா? மேலும்,
இன்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கூட்டணி இல்லாமல், தமிழ்நாட்டில் அரசியல் என்பது கேள்விக் குறியானது எதனால்? என்பதை புரிந்து கொள்வார்களா?

தவிர, தமிழ்நாட்டில் ,ஒவ்வொரு அரசியல் கட்சியும், அவர்களுடைய பலம் என்ன? அவர்களுடைய தகுதி என்ன? அவர்களுடைய அரசியல் கட்சியினர் தகுதி என்ன? அவர்களுடைய அர்ப்பணிப்பு என்ன? சமூக செயல்பாடுகள் என்ன? இதைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது ஆய்வு செய்து இருக்கிறதா?

இனியாவது இந்த அரசியல் கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்துக் கொள்ளுமா? – ஆசிரியர்.