
தூத்துக்குடி மாவட்டம் ,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பீனிக்ஸ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் ,அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இருப்பினும், இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தரப்பில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல், செய்யப்பட்டது.மேற்படி ஜாமீன் மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது ,
விசாரணைக்கு ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வாதாடினார். இதில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.