
தமிழ்நாட்டின் அரசியலில் என்றைக்கு கருணாநிதி அரசியலுக்கு வந்தாரோ, அப்போதே அரசியலில் அடியாட்களும், கிரிமினல்களும் உள்ளே வந்து விட்டார்கள் .அதன் பிறகு தான், நேர்மையாக இருந்த அரசியல் illegal ஆக மாறி விட்டது .

அதன் பிறகு திமுக அதிமுக என்று மாறி மாறி 50 ஆண்டுகாலத்திற்கு மேல்,அதிமுகவிலும் ,திமுகவிலும் ஊழல் செய்து சொத்துக்களை சம்பாதித்தவர்களுக்கு அந்த சொத்தை, பாதுகாக்க அரசியல் தேவைப்படுகிறது. இவர்களுக்கு எடுபிடி ஆளாக அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய அடியாட்கள் பாதுகாப்புக்கு தேவைப்படுகிறது.

அதே போல் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சொத்து சம்பாதித்த ஒட்டுமொத்த மார்ட்டின் குடும்பத்தினருக்கு அரசியல் தேவைப்படுகிறது. தற்போது கூட சமூக வலைதளங்களில், மாமியார் அதிமுகவின் சட்டமன்ற வேட்பாளர், மருமகன் ஆதார் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற வேட்பாளர், மகன் புதுச்சேரியில் சட்டமன்ற வேட்பாளர்,

இப்படி லாட்டரி விற்பனையில்! அது நல்ல லாட்டரியா? அல்லது கள்ள லாட்டரியா ?என்பது கடவுளுக்கு தான் தெரியும். இப்படி எல்லாம் தமிழ்நாட்டில் மக்கள் அரசியல் தெரியாமல், பணம் இருப்பவன் தான் அரசியல் என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,மனித வாழ்க்கையின் நம்பிக்கை, நேர்மை, நாணயம், உண்மை ,இது எல்லாமே பணத்தால் விலை போகும் கூட்டங்கள் ,போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, உறவுகளுக்குள், ஜாதிக்குள், இவர்களை இவர்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு உதாரணம், ஜாதி அரசியலில், வன்னியர் சமூகத்தை ராமதாஸ் ஏமாற்றி, இன்றைக்கு பல லட்சம் கோடிக்கு அதிபதி, சமுதாயத்துக்கு எதுவும் செய்யவே இல்லை. ஆனால், செய்தது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அக் கட்சியில் உள்ள அரசியல் தெரியாத வைத்துவிட்டுகள்.

அரசியல் தெரியாத மக்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நான் ஜெயிலுக்கு போனேன் .நான் கொடிபிடித்தேன். கூட்டத்திற்கு போனேன் .இதனால் யாருக்கு என்ன நன்மை? மொத்தமா ராமதாஸ் அதன் பலனை அரசியலில் எடுத்துக் கொண்டார்.

தவிர,ஆங்காங்கே இருக்கின்ற உதிரிகள் அந்தந்த கிராமங்களிலும், நகரங்களிலும் ,அவர்கள் இந்த சமுதாயத்தை உறிஞ்சி பொது சொத்துக்களை பங்கு போட்டு ,கொண்டார்கள். இவர்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை. இவர்களால் சமுதாயத்தாற்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் சமுதாயத்தை வைத்து இவர்கள் பயனடைந்தார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு தான் இப்போது அரசியல் தேவைப்படுகிறது.

அதேபோல், திமுக ஆட்சியில் எம்எல்ஏ ,எம்பி ,மந்திரிகள் ,எத்தனை கோடி வைத்திருக்கிறார்களோ, அந்த சொத்துக்களை எல்லாம் ,அந்த பணத்தை எல்லாம் பாதுகாக்க ,ஒவ்வொருவருக்கும் அரசியல் கட்சிகள் தேவைப்படுகிறது.

அதேபோல்,அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலம் வரைக்கும், சம்பாதித்து வைத்திருக்கின்ற பணத்தையும், சொத்தையும் ,பாதுகாக்க அரசியல் தேவைப்படுகிறது. அப்படி என்றால் உழைப்பவன் எப்படி இந்த நாட்டில் முன்னேற முடியும்? உழைப்பவனை அழித்து ஊரை ஏமாற்றுபவன் சொகுசாக, அரசியல் பின்புலத்தில் சட்டத்தை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறான். சட்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

மேலும் ,உழைப்பவனுக்கும், சாமானிய மக்களுக்கும் ,சட்டம் சாதகமாக இல்லை. சட்டங்கள் காலத்திற்கு ஏற்ற மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.தவிர,இவர்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் இந்த சொத்துக்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ, எந்த துறையும் உடனே போய் அதை எடுக்க முடியாது .அதற்கு பல சட்ட போராட்டங்கள் தேட வேண்டி இருக்கிறது நீதிமன்றம் இவர்களை பாதுகாப்பதற்கு வாய்தா போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க நீதிமன்றம் வாய்தா போட்டுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் இவர்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். காவல்துறை துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் பணம் கொடுத்து வேலைக்கு வாங்கி விடுகிறார்கள். இப்போதுதான் கொஞ்சம் மாறி இருக்கிறது.

மேலும் ,இந்த ஊழல்வாதிகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. இவர்கள் பின்னால் அரசியல் அரசியல் கட்சியின் அடியாட்கள், கூட்டமாக சேர்ந்து சமூக ஆர்வலர்களை எதிர்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஒரு அரசியல் கட்சி கூட இந்த ஊழலை எதிர்த்து போராடவில்லை. எல்லாமே சீமானை போல் வாயிலே பேசிவிட்டு இவர்கள் உத்தமர்கள் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையான சமூக ஆர்வலர்களான அறப்போர் இயக்கம் அதன் தலைவர் ஜெயராமன் அவருடைய சமூக அக்கறை மற்றும் சமூக ஆர்வலராக சட்டப் போராட்டத்தில் ஊழல்வாதிகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், எந்தப் போராட்டமும் இல்லாமல் அரசியல் கட்சி கொடிகளை காட்டிக்கொண்டு சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லாமல் பதவிக்கு வர துடிக்கிறார்கள். இவர்கள் இன்னும் தமிழ்நாட்டை ஊழலில் கொண்டு போய் வைத்துவிட்டு போவார்களே தவிர ஊழல் இல்லா நிர்வாகத்தை கொடுக்க தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் தகுதி இருக்கிறதா? இதை சிந்திக்காத வரை உழைப்பவன் முன்னேற்றம் கேள்விக்குறிதான். அதுமட்டுமல்ல,

பிஜேபியின் ஆட்சியில் ,ஊழலை ஒழிப்போம் என்று பெயரளவுக்கு தான் அது இருக்கிறதே ஒழிய, நூறு சதவீதம் அவர்களால் இந்த ஊழலுக்கு சாதகமான, ஊழல்வாதிகளுக்கு சாதகமான, சட்டங்களை இன்னும் களை எடுக்கவில்லை. இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால், உடனே எதிர்க்கட்சி எங்களை பழிவாங்குகிறது.

உழைப்பவனுக்கு எந்த கட்சி? இல்லையா? ஊரை ஏமாற்றுபவனுக்கும், இன்டர்நேஷனல் கிரிமினல்களுக்கும், பிராடுகளுக்கும் தான் அரசியல் கட்சியை தேவைப்படுகிறதா?

இந்த டயலாக் எல்லாம் மக்களிடம் விளம்பரப்படுத்துகின்ற கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இதையெல்லாம் நியாயப்படுத்தும் செய்திகளாக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும்,

தமிழ்நாட்டில் இந்த உண்மையை சொல்லக்கூட, இந்த சமூக நலன் பத்திரிகைகளில் ஒன்று கூட ,தகுதி இல்லையா? இல்லை தைரியம் இல்லையா? இல்லை இவர்களுக்கு அதற்கான அந்த சட்ட நுணுக்கங்கள் தெரியவில்லையா? மேலும்,

தெரிந்தவன் தான் நீதிமன்றத்திலே வழக்கறிஞராக வாதாட முடியும் .அதே நிலைமை தான், சமூகத்தில் நீதி கேட்டு, மக்களிடம் இங்கு, பத்திரிகை பற்றி தெரிந்தவன் தான் பத்திரிகை துறையில், பத்திரிக்கையாளனாக போராட முடியும். அவனுக்கு தான், பத்திரிக்கை சுதந்திரம் தேவை. அவனுக்கு தான் ,அந்த பத்திரிகையின் உரிமைகள் தேவை என்று போராடிக் கொண்டிருக்கிறான்.

மேலும்,எப்படி சாமானிய மக்கள், நடுத்தர மக்கள், இவர்களெல்லாம் தங்கள் உரிமைக்காக போராடுகின்றார்களோ, அதே நிலைமைதான் ,இந்த பத்திரிகைகளுக்கும் ,இருக்கிறது.
எனவே,மக்கள் உண்மையை சிந்திக்காமல், இந்த போலி அரசியல்களை பற்றி தெரிந்து கொள்ளாமல், உழைப்பவன் எந்த காலத்திலும் முன்னேற முடியாது.

மேலும் ,உங்களுடைய விலைமதிப்பில்லா வாக்குகளை உங்கள் பகுதியில் சமூக ஆர்வலர்களாக யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், மக்கள் அது தெரியாமல்,அரசியல் கட்சிகளில் பெரிய கட்சியாக இருக்கட்டும், சிறிய கட்சியாக இருக்கட்டும், அவர்களெல்லாம் அரசியலில் வியாபாரம் செய்ய வந்தவர்களா? அல்லது கொள்ளையடிக்க வந்தவர்களா ?இதை எல்லாம் சிந்திக்காமல் வாக்களித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மேலும் அவர்களுக்கு தெரியாமல்,வாக்களித்துவிட்டு, அவர்கள் சண்டைக்கு வரும்போதும் உங்களை மிரட்டும் போதும், அந்த வழிகளின் வேதனைகள் அப்போது மட்டுமே தெரிகிறது . பிறகு தேர்தல் நேரத்தில் உங்களிடம் கையெடுத்து கும்பிட்டு காலில் விழுந்தால் நல்லவர்களாக பேசினால் மறந்து விடுகிறீர்கள். இது உங்களுடைய அறியாமையா? அல்லது அலட்சியமா? அல்லது சுயநலமா? மேலும்,

அவர்கள் ஊழல் செய்து இவர்கள் சொத்துக்களை சேர்க்கும்போது அலறிக்கொண்டு , ஆத்தமற்ற பேச்சுகளை பேசிக் கொண்டிருப்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் .

தவிர,ஊழலுக்கு எதிராக போராடுகின்ற பத்திரிகைகளுக்கு, கொடுக்க வேண்டிய சலுகை ,விளம்பரங்களை அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கும், வியாபார பத்திரிகைகளுக்கும், அரசாங்கம் கொடுக்கின்றது என்றால்! இந்த அரசாங்கத்தின் நேர்மை என்ன ?அல்லது ஊழல் அரசாங்கமா? அதற்கு ஒத்து ஊதக்கூடிய பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை விளம்பரங்களா? இதுதான் திமுக அரசின் தகுதியா?

எனவே, மக்கள் நீங்கள் விழித்துக் கொள்ளாத வரை ,இந்த போலி அரசியலும் ,போலி அரசியல்வாதிகளிடமும், உழைப்பவன் முன்னேற்றம் என்பது எக்காலத்திலும் இருக்காது என்பதை திட்டவட்டமாக எழுதி வைத்துக் கொள்ளலாம்.

அதனால்தான் ,அரசியலில் ஊழல்வாதிகள், அடியாட்கள், இவர்களுக்கு அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை கொடுத்து, அவர்களை எம்எல்ஏ ,எம்பி ,மந்திரியாக்கி கொண்டிருக்கிறார்கள்.

எனவே,இவர்களுடைய தகுதி தெரியாமல் வாக்களிப்பவர்கள் முட்டாள்கள். இவர்களுடைய தரம் தெரியாமல் வாக்களிப்பவர்கள் அடிமுட்டாள்கள்.

அதனால், உங்கள் வாக்கு உங்கள் முன்னேற்றத்திற்கு இருக்க வேண்டுமா? அல்லது இவர்களுடைய முன்னேற்றத்திற்கு இருக்க வேண்டுமா? என்பதை நீங்களே தீர்மானியங்கள்.