
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் யார் முதல்வர் ?என்பதில் ஒரு பக்கம் சர்வே, இன்னொரு பக்கம் பத்திரிகைகள் ,இன்னொரு பக்கம் ஜோதிடம், இது மூன்றுமே ஒரே கருத்தை யாருமே சொல்லவில்லை.
மேலும்,சர்வே ரிப்போர்ட் ஒரு பக்கம் திமுகவுக்கு ஆதரவான ரிப்போர்ட் ,அடுத்தது அதிமுகவுக்கு சாதகமான ரிப்போர்ட், பத்திரிகைகள் சொல்ல வேண்டியதில்லை. அதிலும் ,இந்திய டுடே போன்ற பல பத்திரிகைகள் கணிப்பு கூட இப்போதுதான் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்று அதாவது தொங்கு சட்டமன்றம் வரும்.

இதை மார்ச் மாத இறுதியிலே மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் முதல் பக்கத்திலே வெளியிட்டுள்ளோம். தவிர, ஜோதிடர்களும், நூற்றுக்கணக்கான பேர் ,எடப்பாடி பழனிசாமி ,ஸ்டாலின் ,விஜய், சீமான், போன்ற நான்கு பேரின் ஜாதகங்களும், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு ?என்பதில் ஆய்வு செய்து, youtube களில் அவர்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

மேலும் ,ஜோதிடம் என்பது ஒவ்வொருவரும் ,குருடன் யானையை தடவிப் பார்த்து ,ஏது பெரியது ?என்று சொல்வது போல் தான் இருக்கும். ஒரு ஜோதிடர் சொன்ன கருத்து ,இன்னொரு ஜோதிடர் சொல்வாரா? என்பது சந்தேகம்தான்.
மேலும், இந்த தேர்தலில் யார் முதல்வர்? என்று எனக்குத் தெரிந்த சிலரிடம் கேட்டு பார்த்ததில், நாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய ஜோதிடர் ராபின் ,இவர் ஒரு கிறிஸ்தவர். இவர் திமுக தான் ஆட்சிக்கு வரும் .குறைந்த எண்ணிக்கையில் வரும் என்று சொல்லி இருக்கிறார். அதுவும் மெஜாரிட்டி இல்லை என்று தான் அவரும் சொல்லி இருக்கிறார்.
இது தவிர, பல youtube ஜோதிடர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் ,விஜய் தான் ஒரு மாற்று சக்தியாக களத்தில் இருப்பார் என்று சொல்லி இருக்கிறார்கள். அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டமன்றத்தை அவர் சரி செய்வார் என்று தெரிவித்திருக்கிறார்கள் . இவர்களெல்லாம் ஜோதிடத்திற்கு பணம் வாங்குகிறா பீஸ் (fees) பார்த்தால் 5000 யில் இருந்து அது எவ்வளவு என்று ரேட் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் ஜோதிட கலையை வியாபாரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாகப்பட்டினம் ராபின் ஜோதிடர், அப்படி இல்லை அவர் அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்பவர் தான்.
அடுத்தது,அதேபோல் உடுமலைப்பேட்டை ராஜேஸ்வரன் என்கிற முன்னாள் ராணுவ வீரர் தற்போது ஜோதிடம் பயின்று கருத்தை வெளியிட்டுள்ளார். அது பற்றி அவரிடமே ஆய்வு செய்து ,சில கேள்விகளை கேட்டு தான் ,இந்த கட்டுரையை எழுதுகிறேன். இரண்டு ஜோதிடர்களும் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள்.

அதாவது,உடுமலைப்பேட்டை ஜோதிடர் ராஜேஸ்வரன் சொல்வது, என்னவென்றால், ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது. எடப்பாடி தான் முதலமைச்சராக வருவார். அவரும் தனி மெஜாரிட்டியாக வர முடியாது. கூட்டணி கட்சிகளின் வெற்றியுடன் தான், முதல்வராக முடியும் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல,
திமுகவின் கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது என்று தான் தெரிவித்துள்ளார். சூழ்நிலையும் அப்படி தான் இருக்கிறது. நானும் அதை தான் கணித்திருக்கிறேன்.
மேலும்,திமுக கிட்டத்தட்ட 90 சீட்டுகள் வரும் என்கிறார். எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட 100 சீட்டுக்குள் வரும் என்கிறார். இது தவிர,விஜய் இரண்டிலிருந்து, நான்கு சீட்டுகள் வரும் என்று சொல்கிறார். ஆனால், 15% ஓட்டுக்களை பெறுவார்.

மேலும்,இன்று அதிமுக, திமுகவைகாட்டிலும் பத்திரிகையாளர் மணி, ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் விஜய்க்கு பணம் கொடுக்காமல் கூடுகின்ற கூட்டம் .ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும் பணம் கொடுத்து கூட்டுகின்ற கூட்டம். இது உண்மைதான் இல்லை என்று மறுக்க முடியாது.
இந்தக் கூட்டத்தை பார்த்து, சில பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சர்வேக்களை போட்டு, விஜய் தான் முதல்வர் என்று கூட சொல்லிவிட்டார்கள். ஏன் ?சில ஜோதிடர்களே சொல்லிவிட்டார்கள்.

அந்த விஷயத்தில் ராபின் ஜோதிடர் சொன்னது, விஜய் இந்த பிறவியில் முதல்வராக முடியாது .அடுத்த பிறவியில் வேண்டுமானால், அவர் முதல்வராகலாம். ஆனால், இப்போது அதற்கான தான, தர்மத்தை செய்து கொண்டு வருகிறார் என்றுதான் அவர் சொன்னார்.
எனக்கு ஓரளவுக்கு ஜோதிடர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை, ஆய்வு செய்து எது உண்மை ?என்பதை என்னால் தெளிவுபடுத்த முடியும். மேலும்,அதற்கு ஜோதிடம் படித்திருக்க வேண்டும் .இல்லை அதைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஜாதகம் சனி திசை ,இப்போது அவருக்கு அஷ்டமத்து சனி, புக்திநாதன் சஸ்டஷ்டகம், அது மட்டுமல்ல ,தசாநாதன் அஷ்டமத்து சனியாக தான் வேலை செய்வார். இது உடுமலைப்பேட்டை ராஜேஸ்வரன் ஜோதிடர் சொன்ன ஜோதிட கருத்து. இதுதான் உண்மையான ஜோதிட ஆய்வு.
அடுத்தது எடப்பாடி பழனிசாமியின் ஜாதகத்தில், இவருக்கு புதன் திசை ,சுக்கிர புக்தி .தசாநாதன் நின்ற வீட்டுக்கு அதிபதி உச்சம். அதனால், எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராக வருவார் என்கிறார்.
மேலும், அவருக்கு செவ்வாய் பார்வை இருப்பதால், மெஜாரிட்டியாக வர முடியாது.கூட்டணியில் தான் வருவார் என்று தெரிவித்துள்ளார். இது தவிர,சீமான் ஒரு சீட்டு கூட வர மாட்டார். அவருடைய எட்டு சதவீத வாக்கு ,4 லிருந்து 5 குள் மாறிவிடும் என்றார். கள நிலவரம் அப்படித்தான் இருக்கிறது.

மேலும்,இங்கே விஜய் ஜாதகம் பற்றி கேட்ட போது, கடக லக்கனம் லக்னத்திலே சந்திரன் ,செவ்வாய் சேர்ந்து, நீச்சபங்க ராஜயோகம் என்று தெரிவித்துள்ளார். அதனால்,தான் அரசியலுக்கு வந்துள்ளார்.
ஆனால், ஒருவருக்கு அரச பதவி அல்லது ராஜாங்க பதவியில் அமர வேண்டும் என்றால் ! சூரியன், சந்திரன் கேந்திர திரிகோணங்களின் இருக்க வேண்டும். மேலும்,பெரிய பதவிக்கு வந்தவர்கள் ,அத்தனை பேருடைய ஜாதகத்திலும் பௌர்ணமி யோகம் 90 சதவீதம் இருக்கிறது.
அடுத்தது சிம்மம், சிம்மாதிபதி அதாவது சூரியன் பாபத்துவம் அடையாமல், குரு, புதன் ,சுக்கிரன் போன்ற கிரகங்களின் சேர்க்கை பார்வை பெற்று ராஜயோக அமைப்பில் வலுவாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் விஜய் ஜாதகத்தை பற்றி ஜோதிடர் ராஜேஷ்வரன் சொல்வது, 12ஆம் இடத்தில் சூரியன், சனி ,புதன், பாபத்துவம் அடைந்து இருக்கிறது. அதாவது தந்தைக்கும் ,மகனுக்கும் உறவு சரி இருக்காது. இது தவிர,தற்போது மனைவிக்கும், இவருக்கும் பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. இது உண்மையான ஜாதகம் தான்.
சில பேர் உண்மையான ஜாதகங்களை வெளியில் விட மாட்டார்கள். எம்ஜிஆரும் அப்படி தான் வைத்திருந்தார். விஜய் ஜாதகத்தில் சூரியன் பாபத்துவம் அடைந்திருக்கிறார்.
மேலும், சிம்மத்தை சனி மூன்றாவது பார்வையாகவும் பார்க்கிறார். இவர் நிச்சயம் முதலமைச்சராக வர முடியாது.இவர் 2026 சட்டமன்ற தேர்தல் அல்ல, 2031 இல் கூட, முதலமைச்சராக வர முடியாது.

அப்போது யாருக்கு தான் வாய்ப்பு இருக்கும்? என்று கேட்டேன். அஜித் 2031 இல் முதலமைச்சராக வருவார் என்று தெரிவிக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் போலி அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து இருப்பதால், மக்கள் இவர்களை விட்டு விட்டு சினிமாக்காரர்களை தேட வேண்டி இருக்கிறது.

ஆனால்,இவர்கள் சொல்கிறார்கள், சினிமாவில் நடித்துவிட்டு, நேராக அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வர கனவு காணுகிறார்கள். இதற்கு யார் காரணம்? நீங்கள் தான் காரணம். உங்களுடைய அரசியல் பணி சரியாக செய்யவில்லை.
அதேபோல் தான், இந்த கார்ப்பரேட் தொலைக்காட்சி ,பத்திரிகை ஊடகங்கள், சமூகப்பணி ஆற்றுவதற்கு தகுதியற்ற ஊடகங்கள். அது வெறும் விளம்பரப்படுத்தும் ஊடகங்களே தவிர ,உண்மையை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றுக்கு கூட தகுதி இல்லை.

மேலும்,தேவையற்ற செய்திகளை போட்டுக்கொண்டு, அரசு செய்தி போடுகிறார்கள் என்று செய்தித்துறையும், செய்தித் துறை அதிகாரிகளும் ,பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,எப்படி அரசியலில் தகுதியானவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் ?என்று மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறதோ ,அதே போல் தான் ,தகுதியான பத்திரிகை ,தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தான் நீங்கள் சலுகை ,விளம்பரங்கள் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

இது இரண்டிலும், போலிகள் அதிகரித்துவிட்டது. அதுவே மக்களுக்கு மிகப் பெரிய போராட்டம் தான். நாட்டில் ஊழல்கள் அதிகரிப்பதற்கு !ஊழல்வாதிகள் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்படுவதற்கு, இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் முக்கிய காரணம். இவர்கள் பேக்கேஜ் செய்திகள் போடும் போதே பத்திரிக்கை துறைக்கு தகுதியற்றவர்கள்.மேலும்,

இனியாவது மக்கள் இந்த லேபிள் பத்திரிகைகளை பார்த்து படிக்கக்கூடிய செய்திகள் அனைத்தும் உண்மை என்று ஏமாறாமல் இருந்தால் சரி. எனவே, மக்கள் உண்மை எதில் வந்தாலும், அது உண்மைதான், என்று நம்புங்கள். சமூக நலன் ஊடகங்கள் ஒன்று, இரண்டு இருந்தால் கூட , அது மக்களின் நம்பிக்கையாக

மேலும்,பத்திரிக்கைக்கு உண்மை தான் தேவையே தவிர, லேபிள் தேவையில்லை என்பதை பத்திரிக்கை துறையும், செய்தித் துறையும் ,பொதுமக்களும் உண்மையை புரிந்து கொண்டால் சரி.