மக்கள் 500 கோடி முதலீட்டில்! பல தொலைக்காட்சிகள், பொய்யை சொன்னாலும், அதை நம்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின் அறியாமையா? செய்தி துறை! சமூகநலன் பத்திரிகைகளை ஏமாற்றுகிறதா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் பணக்காரனுடைய பேச்சு எடுபடும். ஏழையின் பேச்சு எடுபடாது. என்பது போல, இன்னும் மக்கள் குருட்டுத்தனமாகவே இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால், இப்போது இப்படிப் பட்ட ஆட்சியில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள்? என்பது அவர்களுக்கு மட்டும் தான், மனசாட்சி உள்ளவர்கள் பேசுகிறார்கள்.

அதுவே மனசாட்சி இல்லாத மக்கள் எப்படியும் பேசுவார்கள். அதேபோல் தான், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களிடம் எத்தனை பொய்களை சொன்னாலும், அது உண்மையா? பொய்யா? என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கூட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி டி.ஆர்.பி ராஜா அபரிமிதமான வளர்ச்சி என்று பெருமையாக பேசினார் என்று சன் டிவியிலும் ,கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உண்மை நிலையை பார்த்தால், இங்கே 10 லட்சம் கோடி கடன், இந்த டாஸ்மாக் மற்றும் மணல் வருவாய் இல்லை என்றால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை. அப்படி என்றால், எந்த அளவுக்கு திமுக ஆட்சியை, இது போன்ற பொய்களை சொல்லி தூக்கிப் பிடிக்கிறது?

மேலும்,இந்த பொய்களுக்கு பின்னால், அரசியல்! அதிகாரம்! இருக்கிறது. அதனால் ,என்ன சொன்னாலும், அது அவர்களுக்கு சாதகமானது. அதுவே, உண்மையை சொல்லிவிட்டால், அந்த பத்திரிக்கை மீதோ, தொலைக்காட்சி மீதோ, இவர்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.

இப்படிதான் ஒரு பக்கம், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் உண்மைகளை மூடி மறைத்து பொய்களையும், ஊழல்களையும் நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்களும் தான் மக்களுடைய வரிப்பணத்தில் கோடிக்கணக்கில், சலுகை விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையை மக்களிடம் சொல்ல கூடிய சமூகநலன் பத்திரிகைகளுக்கு எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்கக் கூடாது. மக்களுக்கு உண்மையை தெரிவிக்கக் கூடாது.

இந்த பத்திரிகைகளுக்கு இதையெல்லாம் கொடுத்தால், நம்மோடு போட்டி போடுவார்கள். அது நம்முடைய வியாபாரத்திற்கு தடையாக இருக்கும். இப்படி எல்லாம் கணக்கு போட்டு பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய அரசியல், அதிகாரம் இதையெல்லாம் எதிர்த்து எத்தனை சமூக நலன் பத்திரிகைகள் போராட முடியும்?

இதில் 99 சதவீதம் அவர்களுக்கு ஆதரவாக பிழைக்கத் தெரிந்த ஊடகங்களாக இருந்து கொண்டிருக்கிறது. அதே போல் தான் யூடியூப் சேனல்கள் எத்தனையோ பிழைப்பு நடத்துகிறது. இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்? கேட்க வேண்டியவர்களே ஆட்சியில், அதிகாரத்தில், இருக்கும்போது பொய் சொன்னாலும், அது உண்மை தான். அதனால் மக்கள் உஷாராகி விழித்துக் கொள்ளுங்கள்.

இதே போல் தான் youtuber ரவீந்திரன் துரைசாமி சன் டிவியில் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி இப்போது, என். டி. ஏ பழனிசாமி ஆகிவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.

இவர்கள் எல்லாம் யார்? அதிகமாக கூலி கொடுக்கிறார்களோ ,அங்கே அதற்கு ஏற்றார் போல், கூவிக் கொண்டிருப்பார்கள். அதனால், அதற்காக மக்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. பல பத்திரிகைகளை படியுங்கள் .அதில் எது உண்மை ?என்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் திருடனும் நான், உத்தமன் என்று தான் சொல்வான். அது போல் தான் ,இந்த பத்திரிகைகள், ஊழல்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதை எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பத்திரிகையோ, தொலைக்காட்சியோ, பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் எந்த நோக்கத்திற்காக? இதை சொன்னார்கள்? என்று அவ்வளவு எளிதில் அதை கண்டுபிடிக்க முடியாது.

அதனால், உண்மை எது? பொய் எது? என்று பத்திரிகைகள் வகைப்படுத்த வேண்டிய கால நேரம் வந்துவிட்டது. அதை மத்திய அரசு எப்போது கையில் எடுக்கும்? எப்போது இந்த அரசியல் கட்சி பத்திரிக்கை? வியாபார பத்திரிகை? சமூக நலன் பத்திரிகைகள் மட்டுமே, பத்திரிக்கை என்று வெளிவரக்கூடிய பத்திரிகைகளுக்கு எப்போது அங்கீகாரம்? மத்திய அரசு ஏற்படுத்தப் போகிறதோ,

அப்போதுதான் ,அதற்கு கடுமையான சட்டங்கள் மூலம் ,இதை எல்லாம் மக்களிடம் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில், இவர்களுடைய ஏமாற்றத்தை, தில்லுமுல்லுகளை, உண்மைகள் எது? என்பதை சட்ட ரீதியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .

அப்போதுதான் நாட்டில் பத்திரிக்கை துறையில் போலியான பத்திரிகை பிம்பத்தில், எத்தனை பத்திரிகைகள்? எத்தனை தொலைக்காட்சிகள்? இருக்கிறது என்பது மத்திய அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கு புரிய வரும்.

இதை சொல்வதற்கு கூட தமிழ்நாட்டில் எத்தனை பத்திரிகைகள் இருக்கிறது? விரல் விட்டு தான் எண்ண முடியும். எனவே, மக்கள் உண்மை எது? என்று மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர ,

அதை எத்தனை கோடியில் அதனுடைய மதிப்பு இருக்கிறது? என்று பார்த்தால், பார்ப்பவர்கள் ஏமாளிகள். உண்மை ஒரு சாதாரண பத்திரிக்கையில் வெளி வந்தாலும், அது உண்மைதான். பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிக்கை என்று லேபிளே பத்திரிக்கை இல்லை .அதனுடைய பொய்களும், நியாயப்படுத்தும் விதமும் செய்தி அல்ல. அது பொய் தான்.

அதனால் ,உண்மை எதில் வந்தாலும், உண்மைதான், பொய் சிறிய ஊடகத்தில் வந்தாலும் ,அது பொய் தான் ,பெரிய ஊடகத்தில் வந்தாலும், அது பொய் தான் .இப்போதாவது மக்களுக்கும் , செய்தி துறைக்கும், உண்மை புரிந்திருக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *