
வழுவூரில் ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அம்பாளுடன் எழுந்தருளியுள்ள இத்திருத்தலத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இக் கும்ப அபிஷேகத்தை இக்கோயிலின் டிரஸ்ட் தலைவர் மகாலட்சுமி அம்மாள், செயலாளர் பி .ஜே .பி வழுவூர் பாஸ்கர், உறுப்பினர்கள்,ஆர்.எஸ்.எஸ். சீனிவாசன், பாலாஜி, நிர்வாக குழு மேற்பார்வை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சென்னை ஆடிட்டர், மற்றும் கிராம பெரியோர்கள், சிறப்பான முறையில் இக் குட முழுக்கு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
