நாட்டில் அரசியல் கட்சிகள்! அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றுவது அரசியலா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் மக்களை ஊடகங்கள் மூலம் செய்திகளை வெளியிட்டு, தொலைக்காட்சி மைக்குகளில் பேசி விட்டு போவது இன்றைய ஷோ காட்டும் அரசியலா? பேசுபவன் யெல்லாம் தன்னை பெரிய அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டு, அந்த நினைப்பிலே பேசிக் கொண்டிருக்கிறான். மேலும், அதே கற்பனையில் கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகளும், நிருபர்களும் அதை கற்பனையில் அவர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஏமாளி யார் என்றால்? அதை வாங்கி படிப்பவன்,அந்த செய்திகளை படித்து ஏமாறும் அப்பாவிகள், இவர்கள்தான் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். பாட்டாளி […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.

ஜூலை 06, 2025 • Makkal Adhikaram விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது […]

Continue Reading

நாட்டில் ஓட்டுக்கு அர்த்தம் தெரியாமல்! இருக்கின்ற மக்களிடம் ரூபாய் 500 கொடுத்து அவர்களின் அதிகாரத்தை விலைக்கு வாங்கி ஜெயிப்பது ஜனநாயகத்தின் தோல்வியா?

நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் அவர்களுடைய வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி, ரூபாய் 1000,500 க்கு அவர்களின் அதிகாரத்தை விலைக்கி வாங்கி, வெற்றி பெற்றால்,அது ஜனநாயகத்தின் தோல்வி. இதனால் நாட்டில் வறுமை ஒழிந்து விடாது பொருளாதாரத்தில் அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாது. ஆனால், இந்த அற்ப ஆயிரம், ஐநூறுக்காக இவர்களுடைய வாக்கு அதிகாரத்தை, பயன்படுத்தி நாட்டில் ஊழல்வாதிகள் தான் அரசியல் கட்சிகளில் ஆதாயம் அடைகிறார்கள். அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு,,ஆயிரம் […]

Continue Reading

தமிழகமே அதிரும் அளவுக்கு பாஜக தமிழிசை சௌந்தரராஜன் கேட்டு கேள்வி என்ன தெரியுமா?

பாஜக தமிழிசை சவுந்தர்ராஜன் காவல்துறையைப் பார்த்து ஒரு சரியான கேள்வி கேட்டார்கள்? இந்தக் கேள்வி தமிழகமே அதிரவைக்கும் என்று நினைக்கிறேன். காளி கோயிலில் வேலை செய்து வந்த அஜித் குமார் அப்படியே திருடி இருந்தாலும், அந்த நகையின் மதிப்பு சுமார் 4.5 லட்சம், அதற்கு இத்தனை அடி அடித்த காவல்துறை,, தமிழ்நாட்டில், ஒன்பது அமைச்சர்களுக்கு மேல் ஆயிரக்கணக்கில் கோடிகளை திருடியிருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை அடி காவல்துறை அடிப்பீர்கள்? சரியான கேள்வி?

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ், அன்புமணியின் குடும்ப கட்சியா? வன்னியர்கள் கேள்வி?

வன்னியர்களில் அடி முட்டாள்களாக இருந்தால், ராமதாஸ் பின்னால் போவார்கள். இல்லை தன்னுடைய சுயலாபத்திற்காக போவார்கள். இல்லை இந்த ஆயிரம், ஐநூரை நம்பி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் வன்னியர் சமூகத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இன்று சுமார் மூன்று கோடி வன்னியர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என 10.5% இட ஒதுக்கீடு பிரச்சனையை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்தும், நீதிமன்றத்தில் அதற்கான தரவுகள் திமுக ஸ்டாலின் ஆட்சியில் கொடுக்காமல் போனதால், அந்த வழக்கு தோல்வியானது. […]

Continue Reading

திமுக ஐடி விங்கினரை ஏ.பி.ஆர்.ஓக்கலாக பணி நியமனம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

செய்தி மக்கள் தொடர்பு துறை! தமிழ்நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும், அது அந்த அரசியல் கட்சி துறையாக செயல்படுவது அரசியல் கட்சியினரை நியமனம் செய்கின்ற தவறு. இந்த தவறுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தோம். பிறகு தான் இந்த ஏ பி ஆர் ஓ (APRO) நியமனம் டிஎன்பிசி யில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்த விதி தளர்த்தப்பட்டு, திமுக ஐடி விங்கினரை கொண்டு வந்து சேர்ப்பது செய்தித் துறையாக இருக்காது. அது […]

Continue Reading

காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, யாரையாவது அடித்து துன்புறுத்தினால், அவர்கள் மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர்,மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட மாஜிஸ்திரேட் இடம் பொது மக்கள் புகார் செய்தால்! உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

அஜித் குமார் என்ற கோயில் காவலாளியை காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, அடித்து, துன்புறுத்தி, உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட மேஜிஸ்திரேட், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் (044 – 24951495) இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், அந்தந்த மாவட்ட எஸ்பி இடமும், தொலை பேசி எண்ணில் தொடர்பு […]

Continue Reading

மடப்புரம் காளியம்மன் தீய சக்திகளுக்கு சரியான தண்டனை கொடுத்த, அஜித் குமாரின் சாவு! திமுக ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய சம்பவமா?

மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அந்தப் பகுதியில் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த தெய்வ சக்தி மிகுந்த கோயிலில் வேலை செய்யக்கூடிய அஜித் குமார் காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது பிரேத பரிசோதனைகளால் தெரியவந்துள்ளது. இங்கே காவல்துறை அதிகாரம்,சட்டம் நம் கையில் இருக்கிறது என்று நினைத்தது.நான் என்ன எழுதினாலும்,அது தான் சட்டம். அவர்களுடைய நினைப்பே எந்த அளவிற்கு தவறானது என்பது இந்த சம்பவம். மேலும், ஒரு தெய்வ சன்னதியில் தெய்வம் இருக்கிறதா? இல்லையா? […]

Continue Reading

கடந்த சில தினங்களாக திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சம்பவங்கள் தொடர்வதால்,பொதுமக்கள் அதிர்ச்சி! காவல்துறையின் நேர்மை,ஆய்வுக்கு உட்படுத்துவாரா தமிழக முதல்வர்?

திருபுவனம் கோயில் காவலாளி இறப்பு முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆன நிலையில்,, கிருஷ்ணகிரி பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டுள்ளான். அவன், எதற்காக கடத்தப்பட்டான்? ஏன் கொலை செய்யப்பட்டான்? என்று எந்த விபரமும் இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மேலும், பையனின் உறவினர்கள் அந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை பொதுமக்களை களைத்து சென்றது. காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம்? […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது. இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், […]

Continue Reading