இந்தியாவில் உள்ள வெளி மாநில வாக்காளர்களை வாக்காளர்ப் பட்டியலில் சேர்க்க தமிழகத்தில் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் வேலைக்கு வந்த பீகார், ஒரிசா ,குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இங்கே பல ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள். அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வாங்கி இருக்கிறார்கள். இப்போது அதை வைத்து இங்கு வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுக்குமா ?அல்லது தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி இதை செயல்படுத்துவார்களா? நடிகர் கருணாஸ், சீமான் போன்றோர் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், வேறு […]

Continue Reading

செய்தித்துறை! மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டிய துறை! மத்திய ,மாநில அரசு இதை முக்கிய கவனத்தில் கொண்டு இனியாவது பத்திரிக்கை துறையில் ,மாற்றம் கொண்டு வருமா? – Makkal adhikaram .

செய்தித் துறையில் ஒரு வரைமுறை இல்லாத ஒழுங்குபடுத்த படாத துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது செய்தித் துறை மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? யாருக்கு அது முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்று கூட தெரியாமல் செய்தித் துறை செயல்பட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவிக்க கூடிய பத்திரிகைகள் ,மக்களுக்காக இல்லாமல் ஆட்சியாளர்களின் சுயநலங்களுக்காகவும், அவர்களின் கட்சி சுயநலத்திற்காகவும், அரசு செய்தியை முன்னிறுத்தி, இத்தனை உள்ளடி வேலைகளும் பத்திரிகையின் சர்குலேஷன் சட்டங்கள் மூலம் செய்தித்துறை தகுதியான பத்திரிகைகளுக்கு […]

Continue Reading

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் – எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இந்த டிராமா அரசியல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இந்த டிராமா அரசியலில் இருந்து வெளிவர வேண்டும். மக்களைக் காப்போம் என்று சொல்லிவிட்டு, உங்களை காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை காத்து கொள்ள தான் அரசியலுக்கு வருகிறார்கள். மக்களை காக்க யார் வருகிறார்கள்? மக்களை மக்கள் காத்துக் கொண்டால் தான் உண்டு. ஆனால், மக்களை அரசியலில் அதிகாரம் வந்தவுடன் மிதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். மேலும்,திமுகவும் இதுபோல் ஸ்டிக்கர் வாசகங்களை […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.

ஜூலை 06, 2025 • Makkal Adhikaram விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

ஈரானில் உள்ள இந்தியர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் வேலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் சுமார் 10,000 பேருக்கு மேல் உள்ளவர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? என்பது பெரும் சவாலான விஷயம் என்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் வழியாக வான் வழியாக, தரை வழியாக வருவது இன்னும் அந்த சிக்கல் இருந்து வருகிறது. அதனால், ஆர்மேனியா துர்மேனியாஸ்தான் நிலம் வழியாக தான் வெளியேற வழி உள்ளது. அந்த வழியாக இந்தியா வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் ஈரானில் உள்ள இந்தியர்களின் […]

Continue Reading

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

உயிரிழந்ததாக தகவல். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வருமான விபத்து குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விமான விபத்து ஆண்டுக்கு சுமார் 4,5 முறைக்கு மேல் நடந்து விடுகிறது. விமானத்தில் மக்கள் பயணிக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு போவது போல் ஆகிவிட்டது. ஒரு பக்கம் மனித வாழ்க்கை போராட்டம் என்றால் இன்னொரு பக்கம் இந்த விபத்துக்கள் மிகப்பெரிய […]

Continue Reading

நெடுஞ்சாலைத்துறை தேனி மாவட்டத்தில் NH – 85 ல் பொதுமக்களின் சாலை ஓர நிலங்களை எடுக்கும்போது எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடுப்பது சட்டப்படி சரியா ?

பொதுமக்களின் நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை போடும்போது, அவர்களிடம் சட்டப்படி அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் .அந்த அறிவிப்பு நோட்டீஸில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு?அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு ?ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்? என்பதை அதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், எதுவுமே இல்லாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் அணைக்கரைப்பட்டி முதல் தர்மத்துப்பட்டி வரை பொது மக்களின் நில எடுப்பு பிரச்சனை, பொதுமக்கள் மத்தியில் கவலையும், வேதனையும், வயிற்றெரிச்சலும் அதிகாரிகள் மீதும், ஆளும் கட்சியினர் மீதும், […]

Continue Reading

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மாவின், வீட்டில் 100 கோடிக்கு மேல் பணம் இருந்தது உச்சநீதிமன்ற நீதிபதியின் விசாரணையில் உறுதியானதால், அவர் மீது நாடாளுமன்றத்தில் நடவடிக்கை உறுதி.

நாட்டில் நீதிபதிகள் ஊழலுக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். ஊழல்வாதிகளோடு கைகோர்த்துக்கொண்டு, தீர்ப்புகளை அவர்களுக்கு சாதகமாக சொல்லிக் கொண்டிருந்தால், நீதித்துறைக்கு அர்த்தமில்லாமல் ஆகிவிடும். சட்டம் கேலிக்கூத்தாகிவிடும். 140 கோடி மக்களின் உணர்வுகள், கேவலப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது நீதிபதிகளின் தீர்ப்பு தேச நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் எதிர்காலம்,பொருளாதார முன்னேற்றம்,வருங்கால இளைய தலைமுறைகளின் வளர்ச்சி,அவர்களது கனவு, எல்லாமே இதில் அடங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நீதித்துறையின் தீர்ப்புகள் ஊழல் பின்னணி […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.

தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]

Continue Reading