
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது என்ன என்றால், இனி காவல்துறை ஒருவரை கைது செய்தால், எந்த காரணத்திற்காக? இவரை கைது செய்தோம் என்பதை எஃப் ஐ ஆர் இல் தெரிவிக்க வேண்டும்.

தெரிவிக்காமல் கைது செய்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளே சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். பொதுமக்கள் பல பேருக்கு இந்த உண்மை தெரியாது.

மேலும், அரசியல் கட்சியினர், ஆட்சியாளர்கள், ஒருவரை பழி வாங்க வேண்டும் என்றால், எதற்காக கைது செய்கிறார்கள்? என்பது கூட தெரியாது. அந்த அளவிற்கு காவல்துறை இந்த சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, கொடுக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.Also,If political parties and rulers want to take revenge on someone, why do they arrest them? They don’t even know. To such an extent,
அதற்காக தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு செக் வைத்துள்ளது. ஏனென்றால் இவர்கள் போடுகின்ற எஃப் .ஐ .ஆர் உண்மையானதா? அல்லது பொய்யான வழக்கா? அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்கா? எது ?என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவரும்.

அதுவரைக்கும் ஒருவர் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் வேலையால், எவ்வளவு மன உளைச்சல்? பண விரயம்? தொழில் பாதிப்பு ?இத்தனை கொடுமைகளுக்கும், ஏழை, எளிய நடுத்தர மக்களை நிறுத்துகிறது.

மேலும்,பல அரசியல் கட்சியினர், காவல் துறையினரை வைத்து அரசியல் செய்கிறார்கள். அது மாற்றப்பட வேண்டும். அதாவது ,ஒரு கட்சிக்கு சாதகமாகவும், குறிப்பாக சொல்லப் போனால் ,ஆளும் கட்சியினர் ,இவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்வதற்கு ,காவல்துறை தேவையில்லை.

காவல்துறை எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் சட்டத்தில் மறு வடிவம் தேவை. இப்படிப்பட்ட சட்டங்களால் தான், சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதவி அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய அதிகாரத்தை காவல்துறை மூலம் அதை சாதிக்க நினைக்கிறார்கள்.

காவல்துறையின் வேலை என்ன? சட்டம் ,ஒழுங்கு பிரச்சனையை பாதுகாக்க வேண்டிய முக்கிய இடத்தில் காவல்துறை .ஆனால், ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இருப்பது இன்று காவல்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஏனென்றால், மக்களின் வரிப்பணத்தில் தான் இவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். தவிர, ஆட்சியாளர்கள் வீட்டிலிருந்தோ அல்லது அரசியல் கட்சியினர் வீட்டில் இருந்தோ, காவல்துறைக்கு சம்பளம் கொடுக்கவில்லை. அதனால்,

இந்த சட்டத்தை இவர்கள் தவறாக பயன்படுத்தினால் ,காவல்துறையை தண்டிக்கக் கூடிய சட்டமாக கொண்டு வர வேண்டும் .அப்போது தான் பொய் வழக்கு போட மாட்டார்கள். அரசியல் கட்சியினருக்காக, அவர்கள் சொல்லும் ஏவல் வேலை எல்லாம் செய்ய மாட்டார்கள். செய்யக்கூடாது.
மேலும்,மந்திரிகள், மாவட்ட செயலாளர்கள் ,எம் எல் ஏக்கள், இவர்கள் சொன்னால், ஒருவர் மீது எஃப் ஐ ஆர் போட்டு விடுவார்கள். காவல்துறையின் இந்த கருப்பு சட்டங்களுக்கு, உச்சநீதிமன்றம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .

அப்போதுதான் ஒரு தனி மனித பாதுகாப்பு ,ஏழை நடுத்தர மக்களின் பாதுகாப்பு ,சட்டத்தின் மூலம் அது ஊர்ஜிதப்படுத்த முடியும். ஓட்டு வாங்கும்போது மட்டும், சாமானிய மக்களை 100 தடவை கையெடுத்து கும்பிட்டு, காலில் விழ தெரிகிறது. ஆனால், பதவிக்கு வந்தவுடன் அவர்களை அடக்கி ,அதிகாரத் திமிரில் ஆட்டம் போட சொல்கிறதா?

இந்த ஆட்டத்திற்கா மக்கள் உங்களுக்கு வாக்களிக்கிறார்கள்? இல்லை நீ கொடுக்கிற இந்த ஆயிரம்,500 க்கு ஓட்டு போடுபவனை வேண்டுமானால், அடக்கி வைத்துக் கொள். எல்லோரும் அடங்க வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டில் எல்லா மக்களுக்கும் சுதந்திரம் தேவை. ஏழை, எளிய மக்கள் ,உழைத்து சாப்பிடுகின்ற வர்க்கத்திற்கு, சட்ட பாதுகாப்பு தேவை.

ஊரை ஏமாற்றி , சட்டத்தை ஏமாற்றி ,சாப்பிடுபவனுக்கு சட்ட பாதுகாப்பு தேவையிருக்கும் போது, உழைத்து சாப்பிடுபவனுக்கு சட்ட பாதுகாப்பு அவசியம் தேவையானது. எனவே,

இதை அவசியம் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ,இதை கருத்தில் கொண்டு ,இந்த சட்டங்களுக்கு மறுபடியும் கொடுக்க சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பில் ,இது ஒரு முக்கியமான கோரிக்கை என்பதை வலியுறுத்துகிறோம்.இதை அவசியம் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ,இதை கருத்தில் கொண்டு ,இந்த சட்டங்களுக்கு மறுபடியும் கொடுக்க சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பில் ,இது ஒரு முக்கியமான கோரிக்கை என்பதை வலியுறுத்துகிறோம்.