
விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் ,எதிர்க் கட்சிகளை வைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். இது பலமான கூட்டணியா ?அதுவும் ,நம்ப முடியவில்லை.

மேலும்,ஒரு பக்கம் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும் என்று திருமாவளவன் சொல்கிறார். இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு தன்னுடைய ஊழல் வழக்குகளை, மத்திய அரசு எங்கே எடுக்கப் போகிறது ?அந்த பயமும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.
தவிர,இதற்கிடையில் விஜயை வைத்து நம்முடைய ஊழல் வழக்குகளை எல்லாம் ஆற போடலாம் அல்லது அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம், அதற்கு இவர்களை வைத்து ஏதாவது காய் நகர்த்த முடியுமா? என்பது ஸ்டாலின் திட்டமா?

மேலும்,எடப்பாடி பழனிசாமி நான் வந்தால், முதலமைச்சராக தான் உட்காருவேன் .அந்த நினைப்பிலே அவர் இருந்து கொண்டிருக்கிறார்.
தவிர,இந்த பக்கம் கட்சியும் உடைந்தாலும் கவலையில்லை, இந்த 25 எம்எல்ஏக்கள் போனாலும், கவலை இல்லை. கட்சி என் கையில் இருக்கிறது. நான் அந்த கொடியை கெட்டியாக பிடித்துக் கொள்வேன். என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

மேலும்,இப்போது இந்த 25 எம்எல்ஏக்களும், அதிமுகவிலும் சேர முடியாமல், தவெக விலும் சேர முடியாமல், நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் விஜயை நம்பி போனதற்கு இப்படி ஆகிவிட்டது என்று அவர்கள் ஒரு பக்கம் புலம்புகிறார்கள்.
இந்த நிலையில் அதிமுகவில் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று இரு தரப்பும் போராடிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி 25 எம்எல்ஏக்களில் ஐந்து பேர் தவிர மீதி அத்தனை பேரும் வாருங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறாரம் .

காரணம், அவரை எதிர்த்து யாரும் கேள்வியை கேட்கக் அவர் என்னவோ ஜெயலலிதாவாக கற்பனை செய்து கொண்டாரா? இதனால்,அதிமுகவின் வலிமை ஒவ்வொரு நாளும் மக்களிடம் பேசு பொருளாக மாறிவிட்டது.

தற்போது, அதிமுகவில்,எடப்பாடி பழனிசாமியா? அல்லது இந்த 25 எம்எல்ஏக்களா? பொதுக்குழுவில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? இதில் விஜய் எந்த அளவுக்கு இந்த கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி நடத்தப் போகிறார்? எல்லாமே தமிழக அரசியல் ஒரு போராட்ட களமா? இது திமுகவுக்கு சாதகமா?
