
தமிழக அரசு அரசு ஊழியர்கள், பணிச்சுமை, ஊதிய உயர்வு, பென்ஷன் இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு இப்பொழுது கையை விரிக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால், நர்ஸ் வேலைக்கு ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட நர்சுகளுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் மனம் உடைந்த நர்ஸ் பணியாளர்கள் சங்கம் இந்த பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்று விட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டில் என்ன கேள்வி கேட்கிறார்கள்? என்றால், இவர்களுடைய உழைப்பை தமிழக அரசு சுரண்டி வேலையை வாங்கிக்கொண்டு, இன்று சம்பளம் இல்லை என்றால் யார் ஏற்றுக் கொள்வார்கள்?
இதைவிட ஒரு முக்கிய கேள்வி கேட்டிருக்கிறது? இலவசத்தை கொடுக்க பணம் இருக்கிறது. சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? இனிமேலாவது அரசு ஊழியர்கள் விஷயத்தில் தமிழக அரசு சரியான முறையை கையாளுமா?
இந்தப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை செல்வது ,தமிழக அரசுக்கு தான் கேவலம் .