
பா . ரஞ்சித்துக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? அதனுடைய அரிச்சுவடி ஏதாவது தெரியுமா? ஜாதி அரசியலை பேசிக்கொண்டு, இருக்கும் உனக்கு மருத்துவத் துறையை பற்றி என்ன தெரியும்?

நீட் தேர்வு பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? அதையாவது கொஞ்சம் கேட்டு தெரிந்து கொள். மேலும் தலித் சமூகத்திலே எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் ?என்று கேட்டு ,விட்டு இந்த பா.ரஞ்சிஜித் பேசினால், நன்றாக இருக்கும்.
மேலும்,நாட்டில் மாணவர்களை வைத்து அரசியல் செய்ய, இப்படி ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இந்த பிரச்சினையை அரசாங்கம் அதாவது மத்திய அரசும் சரி ,மாநில அரசும் சரி, இப் பிரச்சனையை உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .
நீதிமன்றத்தில், நீதிபதிகள் இந்த நீட் தேர்வு பற்றி ஆய்வு செய்து மக்களுக்கும் , மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், தேவையற்ற கலவரங்களை இது போன்று தூண்டி விடுபவர்கள் ,யாராக இருந்தாலும், அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்வது சரியானது.
