
அதிமுக கட்சியை தனக்கு மட்டுமே சொந்தம் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்து செயல்படுவது அதிமுக தொண்டர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்ல, திமுகவை எதிர்க்கவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக .அதை திமுகவின் தயவில் ஆட்சி அமைக்க, ஸ்டாலினுக்கும் இவருக்கும், இருவருக்கும் உள்ள நட்பு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ரகசிய பேரம் நடத்தப்பட்டது.

அது இரு கட்சியினருக்குள் ,உள்ள கருத்து வேறுபாட்டால் ,அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தான் கனிமொழி !அப்படியே எதுவும் நடக்கவில்லை .அது வதந்தி என்று சொல்லிவிட்டார்.
வதந்தியாக இருந்தாலும் அல்லது உண்மையாக இருந்தாலும் சி.வி. சண்முகமும், எஸ் பி வேலுமணியும் 37 எம்எல்ஏ க்களை எதற்கு பாண்டிச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்க வேண்டும் ?
இப்படி இந்த கருத்து வேறுபாட்டால் அதிமுக கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூலுக்கு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அக் கட்சி நீக்குமா? மேலும் ,தொடர்ந்து அதிமுகவின் தோல்விக்கு, எடப்பாடி பழனிசாமி தான் முக்கிய காரணம் என்று சட்டமன்ற உறுப்பினர்களும் ,அக் கட்சியினரும் தெரிவிக்கும் தகவல்.
மேலும், இந்த 36 எம்எல்ஏக்களும், விஜய்க்கு ஆதரவு தர அதற்கான முன்னேற்பாடுகளை சி.வி. சண்முகம் மற்றும் எஸ் .பி. வேலுமணி இதை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்?

மேலும்,பொதுக்குழு கூட்டி முடிவெடுப்பார்களா? அல்லது இந்த 36 எம்எல்ஏக்களும் ,விஜய்க்கு ஆதரவு கடிதத்தை கொடுப்பார்களா? இதைப் பொறுத்து தான் தமிழ்நாட்டின் விஜயின் ஆட்சி !ஸ்திர தன்மையாக இருப்பதற்கு ,ஒரு வலுவான ஆட்சி அமைக்க முடியும்.
மேலும், தமிழக கவர்னர் இன்னும் ஓர் இரு நாட்களில், விஜயை பெரும்பான்மையை சட்டமன்றத்திலே நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதற்குள்36 அதிமுக எம்எல்ஏக்கள் நிலைமை என்ன? என்பது இன்று தெரியும் என்று அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது. முதலில் இவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து விட்டு ,தான் பிறகு அதிமுகவில் பொதுச் செயலாளர் நடவடிக்கைக்கு பிறகு பார்க்கலாம் என்று அதிமுக வட்டார தகவல்.
மேலும், பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் இந்த பக்கம் இருப்பதால் கட்சித் தாவல் தடை சட்டத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி ஆல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கின்றது அதிமுக கட்சி வட்டாரம்.