
நாட்டில் செய்திக்கு அர்த்தம் தெரியாமல் செய்தித் துறை இருந்து வருகிறது.

அதனால்தான், எது செய்தி? என்று கூட தெரியாமல் ,உதயநிதி மகன் இன்பநதி சட்டமன்றத்திற்கு பார்வையாளராக சென்றால் கூட ,அதற்கு முண்டியடித்து வீடியோ எடுப்பதும் ,போட்டோ எடுப்பதும், இந்த தொலைக்காட்சி பத்திரிகை நிருபர்களின் செயல் பத்திரிக்கை துறைக்கு எதிரானது.
மேலும்,பத்திரிக்கைத்துறை அர்த்தம் தெரியாமல், அது விளம்பர துறையாக மாறிவிட்டதா? இந்த போலி செய்திகளை விளம்பரப் படுத்துவதற்கு தான், செய்தித்துறையில் இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செய்து துறை அதிகாரிகள் வீணடிக்கிறார்களா?

எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருக்க வேண்டுமோ ,அதிலிருந்து இது போலியான பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட பத்
பத்திரிக்கைத்துறை பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறி இருப்பதால் ? இதை செய்தி துறை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் ,இந்த விளம்பர ஊடகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, ஜனநாயகத்திற்கு பயனற்றது.

மேலும், செய்தித் துறை இயக்குனர் அருண் தம்புராஜ் இனிமேலாவது செய்தித் துறையில்,செய்திக்கு முக்கியத்துவம் அளிப்பார?
