
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக கட்சி கழகம் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை என்ற வெளிப்படையாக அரசு தணிக்கை செய்த கணக்கு வழக்குகளை வெளியிட்டுள்ளது. மேலும்,
பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் ,சேர்த்து மாநிலத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுக்கு வரும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு (ரூ.67,050 கோடி) வட்டி கட்டவே செலவிடப்படுகிறது. தமிழக அரசின் வருமானத்தில் 66 சதவீதம் செலவுக்கும், அரசு அதிகாரிகளின் சம்பளத்திற்கும் செலவாகி விடுகிறது.
மீதி 34 சதவீதம் தான் அரசின் வருவாயில் திட்டங்கள் செலவிடப்பட வேண்டும். இதில் கடந்த திமுக ஆட்சியில் வாங்கிய கடன்களுக்கு வட்டி 28 சதவீதம் போய்விடுகிறது. மீதி இருப்பதில் என்ன செய்ய முடியும்?

இதில் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் தவெக அரசின் தேர்தல் அறிக்கையை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன், தமிழ்நாட்டின் நிதிநிலை வெள்ள அறிக்கை ஜோசப் விஜய் வெளியிட்டு விட்டார். இதில் எதிர்க்கட்சிகள் தோற்றுவிட்டன. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெற்றி பெற்று விட்டார்.

அதாவது திமுக அரசின் முந்தைய 2021 ஆட்சியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை பற்றிய கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. இதை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தலைமைச் செயலகத்தில் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார். மேலும்,
இதில் மிகக் குறைந்த நிதி நிலை தான் தமிழகத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது மக்களுக்கும் பெரும்பாலும், விவரம் அறிந்தவர்களுக்கும் ,தெரிஞ்ச விஷயம் தான். இப்போது இந்த நிதி நிலையை பற்றி மக்களிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது? அது தான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. மேலும்,
இதை எப்படி சரி ?செய்து, மக்களுக்கான திட்டப் பணிகளை எப்படி ?செய்ய முடியும் ?என்பதுதான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். தவிர,மக்கள் செய்த தவறு,கொள்ளையடிப்பவன் இடம் சாவியை கொடுத்ததற்கு ,அவன் எப்படி உத்தமனாக இருப்பான்? அவனுக்கு என்ன தெரியுமோ அதைத்தான் செய்வான். மேலும்,

உதாரணத்துக்கு சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பரசன் விஜய் பற்றியும், அவரது கட்சியினர் பற்றியும் பேசியது, ஒரு அமைச்சருக்கான தகுதியா? இவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்து விட்டு, மந்திரி ஆனால், எப்படி பேசுவார்? இதை கூட நான் சொல்லவில்லை. எதிர் கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
மேலும், படிச்ச ஜெனரேஷனை ஏமாத்த முடியாது. படிக்காதவர்களை ஏமாற்றிக் கொண்டு, அரசியல் செய்தார்கள். இனி இப்படி பட்டவர்களுக்கு மக்கள் இனி வாய்ப்பு அளிப்பார்களா?
தவிர, மக்களுக்கு தேவை, நல்லாட்சி! அதை யார் ?கொடுத்தாலும் வரவேற்பார்கள். மேலும், தமிழகத்தின் நிதி நிலையை பெருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ?அதுதான், தற்போதைய முதல்வரின் கடமை .
