
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இவர் பொறுப்பேற்ற மறுநாளே ,காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்காணிக்கத் தொடங்கிவிட்டார் .
அதன்படி காவல் துறையில் யாரெல்லாம் திமுகவுக்கு ஆதரவானவர்கள் அந்த லிஸ்ட்டை எடுத்துவிட்டார். தவிர,அதற்கான மாற்றமும் காவல்துறையில் செய்வார் என்ற தகவல்.
மேலும், காவல்துறையில் இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினமும் 10 மணிக்கு தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் ,ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகள் முதல் அவர் கீழ் உள்ள அதிகாரிகள் வரை, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?
அது சம்பந்தமான வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடர்பு கொள்ளவும் , அது குறித்த விவரங்களை ,அப்போது தெரிவிக்கவும் தகவல் அனுப்பியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,அதன் முக்கிய தலைவர்களும் ,எங்கெங்கே கூட்டம் நடத்துகிறார்கள்? அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ?குறித்த விவரங்கள்? மற்றும் யார்? யாருக்கெல்லாம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது? அனுமதி மறுக்கப்பட்டுள்ளது? அதற்கான காரணங்கள்? குறித்து அனைத்தும் தினமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பு காவல்துறை அதிகாரிகள், டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இது உண்மையிலே இது ஒரு நல்ல சிஸ்டம் தான் ,டிஜிபி சந்திப் ராய் ரத்தோர், தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற பிறகு , காவல்துறையின் நடவடிக்கைகள், அரசியல் தலையீடு இன்றி ,காவல்துறை செயல்பட ,இது மிகவும் முக்கியத்துவமானதாக இருக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.