
தமிழக முழுதும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.

மேலும்,விலை மதிப்பற்ற வாக்குகளை ரூபாய்,2000,3000,5000, க்கு விற்பனை செய்கிறார்கள். அதன் விளைவு ,ஐந்தாண்டு காலம் நம்முடைய வாழ்க்கையும் அவர்களுடைய சந்ததிகள் எதிர்கால வாழ்க்கையும் போராட்டம் ஆவது பற்றியும், அவர்களின் முன்னேற்றம் தடைபடுவது பற்றியும் கவலைப்படுவதில்லை.
இதிலே குடித்து விட்டு கூட வந்து வாக்களிக்கிறார்கள். இப்படி எல்லாம் ஜனநாயகத்தின் உரிமை மற்றும் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் வாக்களித்துக் கொண்டிருப்பது வேதனையான ஒன்று.

இதற்காக சமூக ஆர்வலர்கள், சமூக நலன் இயக்கங்கள் , சமூக நலன் பத்திரிகைகள்,போராடி வருகிறது. மேலும்,இந்தப் போராட்டத்தில் அறப்போர் இயக்கத்தின் போராட்டம், மிகவும் முக்கியத்துவம் அவர்கள்,மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத போராட்டத்தை ஒரு அதிகார அமைப்பை எதிர்த்து, திமுக அமைச்சர்களின் ஊழல்களை ,மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

மேலும்,இது சாதாரண வேலையும் அல்ல, எளிதான காரியமும் அல்ல. இந்த தேர்தலில், மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, வாக்களிக்கிறார்கள். எத்தனையோ மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தால், இந்த பண பட்டு வாடாவை தடுக்க முடியவில்லை.
எதிர்க்கட்சிகள் ஏதாவது கையும் களவுமாக பிடித்து, ஒப்படைத்தால் காவல்துறையும் ,தேர்தல் ஆணையம் சேர்ந்து வழக்கு பதிவு செய்வார்கள்.
இருப்பினும் அதற்கு எந்த நடவடிக்கையும் இருக்காது. தேர்தலுக்கு அர்த்தம் தெரியாமல் ,தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு தொகுதியில் எவ்வளவு பெரிய தொகை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யுங்கள். தேர்தலுக்கு ஒரு நாள் முன், பரப்புரை நிறுத்துவது போல ,தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன்னரே அரசியல் கட்சிகள் பரப்புரையை நிறுத்த வேண்டும் .

மேலும்,பத்து நாட்களுக்கு முன் பணத்தை கொடுத்தால் மக்கள் கொடுத்ததை மறந்து விடுவார்கள். அதனால் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். இந்த வேலையாவது தேர்தல் ஆணையம் செய்கிறதா? அதுவும் செய்யவில்லை. மேலும்,

பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் ஆணையத்திற்கு பல ஆலோசனை செய்திகள் ,இந்த தேர்தலை நேர்மையான முறையில் ,நியாயமான முறையில், நடத்த ஆங்காங்கே ட்ரோன்கள் பறக்க விடுங்கள், ரகசிய கேமராக்கள் வையுங்கள், பணப்பட்டுவாடாவை தடுக்கலாம் என்று எவ்வளவோ செய்திகள் வெளியிட்டும், இதையெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை.

இனனனன வருங்காலத்திலாவது தேர்தலில் எப்படி நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் ஒரு வரைமுறை படுத்துங்கள். பணம் கொடுப்பதை தடுக்க என்ன வழி? என்பதை முதலில் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல் வியாபாரமா ? தேர்தலை வியாபாரமாக ஆக்கிவிட்டால், அரசியலும் வியாபாரமாக தான் இருக்கும். அது மக்களுக்கு தெரியவில்லை. அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்.

கார்ப்பரேட் பத்திரிகைகள், பத்திரிக்கை துறையை வியாபாரம் ஆகிவிட்டார்கள். அதனால் தான் சமூக நலன் என்பதற்கு அர்த்தமில்லாமல் இன்று எல்லோரும் வாழ்க்கை என்பதை போராட்டத்தின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்கவில்லை.

மேலும்,அதன் விளைவு தான் ,இந்த அரசியல் கட்சியினரால் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். வியாபார அரசியலை தடுக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் கடமைக்கு தேர்தல் நடத்தக் கூடாது.

பண பட்டுவாடா செய்தால் உடனடியாக அங்கே தேர்தலை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து தேர்தல் என்பது அரசியல் கட்சிகளின் பண வியாபாரமா?

அரசியல் கட்சிகளின்,ஊழல் பணத்திற்கு, கருப்பு பணத்திற்கு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டுமா?தேர்தல் ஆணையம் இதற்கு பதில் சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு தேர்தல் ஜனநாயகத்தின் தேர்தல் என்று சொல்ல முடியுமா?
இதைத் தடுக்காமல் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் தேர்தல் என்று சொல்வதற்கு அர்த்தம் இல்லை. இது அரசியல் கட்சிகளின் பணநாயகத்தின் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க முடியாமல் தேர்தல் நடத்துவது வீண்.
மேலும், அறப்போர் இயக்கம் மயிலாப்பூர் ,ஆலங்குளம் தொகுதியில் பண பட்டுவாடா அதிகளவில் செய்துள்ளதால், அதை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்து,தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தவிர, கோவை தெற்கு தொகுதியில் ,பணம் பட்டுவாடா அதிக அளவில் நடந்துள்ளதால், அதையும் ரத்து செய்ய அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். தேர்தலாணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறதா? தேர்தல் ஆணையம்? வாக்காளர்களின் சந்தேகம்.