
சட்டமன்றத்திலே உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுக்காக உயிரை கொடுப்பது போல் பேசுகிறார்கள்.
இது , தமிழ்நாட்டு மக்களின் வியர்வைகளை உறிஞ்சி, ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்துக் கொண்டதால், இவர்களுடைய மனசாட்சி ஒருவேளை அந்த பாசத்தை தமிழக மக்கள் மீதும் , தமிழ்நாட்டின் மீதும்,பொழிகிறார்களா? அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்களா?

இது ஒருவேளை கருணாநிதி காட்டிக் கொடுத்த அரசியல் யுத்தியா? பேச வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டின் நலனைப் பற்றி பேசவில்லை. இப்போது, உண்மையான எதிர்க்கட்சிகள் என்று காட்டிக் கொள்கிறார்களா? இதில்
ஒரு பக்கம் ஸ்டாலின், இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் , மற்றொரு பக்கம் கனிமொழி, தற்போது,அநியாய தொகுதி வரைமுறையை தான் நாங்கள்,எதிர்க்கிறோம் முறையான தொகுதி வரைமுறையை நாங்கள் எதிர்க்கவில்லை.

இவர்கள் என்னமோ, அந்த காலத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த குடும்பத்தினர் போல் பேசுகிறார்கள். இதையெல்லாம் அரசியல் தெரியாதவன் ஏற்றுக் கொள்ளலாம். அரசியல் தெரிந்தவன் எப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொள்வானா ? தமிழ்நாட்டின் நலனே இவர்களுக்கு முக்கியமாம் .
மக்களுடைய தலையெழுத்து உங்களையெல்லாம் முதலமைச்சராக்கியது ,அவர்கள் தலையெழுத்து சரியில்லை. உங்க குடும்பத்தினரிடமும், திமுக கட்சியி ரிடமும், பட்ட வேதனைகளை நினைத்து, இனியாவது தமிழக மக்களுக்கு! அரசியலில் யார் வேண்டும்? எப்படிப்பட்டவர்கள் வேண்டும் ?என்று சிந்திக்கும் புத்தி வருமா? – தமிழக நலன் விரும்பிகள்.
