
தமிழ்நாட்டில் கூட்டங்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. மேலும்,இந்த கூட்டங்கள் பணத்திற்காகவும், கூட்டம் கூடுகிறது. சினிமா மோகத்தாலையும் கூட்டங்கள் கூடுகிறது. இந்த கூட்டங்களை வைத்து தமிழக அரசியல் ஆட்சிக்கான தேர்வு என்று தீர்மானிக்க முடியாது.

தவிர , தனியார் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு, ஊடகங்களின் பொய் செய்திகள், இதையெல்லாம் வைத்து விஜயின் அரசியல் தீர்மானிக்க முடியாது.
மேலும், விஜயின் வாக்கு சதவீதம் 20 என்று பேசுகிறார்கள். விஜய்க்கு பத்து சதவீதத்திற்குள் தான் விஜயின் வாக்கு சதவீதம் இருக்கலாம்.தவிர, விஜய் பொருத்த அளவில் அரசியலில் இன்று அரிச்சுவடி கூட படிக்காதவர். இது அவருடைய கட்சி நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும், கசப்பாக்க கூட இருக்கும்.

ஆனால், உண்மை செய்தி என்னவோ, அதை தான் சொல்ல முடியும். இன்று நான் சொன்னது உங்களுக்கு தவறானதோ அல்லது கசப்பானதோ, எதுவாக இருந்தாலும், நாளை நடக்கின்ற தேர்தலில் உண்மை கண்டிப்பாக இந்த செய்தி அப்போது உங்களுக்கு நிரூபிக்கும். தமிழ்நாட்டின் அரசியல் ஒரு சிக்கலான அரசியல்.

ஏனென்றால், இந்த மக்களுக்கு அரசியல் தெரியாது .அரசியல் வரலாறு தெரியாது. இந்த உண்மைகளை எந்த பத்திரிக்கையிலும், எழுதுவோம் மாட்டார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் 1965 க்கு முன் இருந்த அரசியல் வரலாறு மக்களுக்காக அரசியல். 1965 பிறகு அரசியல் கட்சியினருக்காக அரசியல். இதை ஆய்வுக்காக வேண்டுமானால், கூட எடுத்துப் பாருங்கள்.

1965 க்கு முன் அரசியலுக்கு வந்தவர்கள், கௌரவத்திற்காக சொந்த பணத்தை செலவு பண்ணி இருப்பார்கள். அவர்கள் அரசியலில் எதுவும் சம்பாதித்து இருக்க மாட்டார்கள். ஆனால்,எப்போது சினிமா அரசியலுக்குள், வந்ததோ, அப்போதே மக்களுக்கான அரசியல் தோல்வியடைந்து விட்டது. இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.

அது கருணாநிதி முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா வரை இன்று ஸ்டாலின் வரை வந்துவிட்டது. இவர்கள்தான் கோடீஸ்வரர்களாக ஆகிறார்கள். உழைப்பவன் முன்னேற்றம் கேள்விக்குறியாகி கொண்டே இருக்கிறது. மக்கள் சினிமாவை அரசியலில் கொண்டு வரும்போது, ஊரை ஏமாற்றுபவன் முன்னேறி இருக்கிறான்.

ஒவ்வொருவருடைய சொத்து மதிப்பு அதற்கு சான்று. 1965 க்கு முன் அவர்களுடைய சொத்து மதிப்பு என்ன? என்பதை கணக்கெடுத்து பாருங்கள். இதுதான் உண்மையான விளக்கம். இதுதான் அரசியல் வரலாறு. அதனால், சினிமாவை நம்பி வந்திருக்கின்ற இந்த ரசிகர்கள் கூட்டம் ,வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்று வாழத் தெரியாத கூட்டம்.

ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் கட்சி, இதை இரண்டுமே நம்பி அரசியல் பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அரசியலில் பதவி ,அதிகாரத்திற்கும், கொள்ளையடிக்கவும், அரசியலை ஒரு வியாபாரமாக ஆக்கி இருக்கிறார்கள். இது பற்றிக் கூட தெரியாதவர் விஜய்.
மேலும்,விஜய் சினிமாவில் சம்பாதித்ததை வருமான வரி கணக்கு காட்ட ,சமூக பணிகள் செய்திருக்கலாம். அது வேறு, ஆனால், அரசியல் என்பது மக்களுக்கு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடிய நபர்கள் தான் தேவை. இவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றக்கூடிய அளவுக்கு இருப்பார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?

மேலும்,சினிமா தியேட்டர்களில் படத்தைப் பார்த்துவிட்டு, விசில் அடித்து, கைதட்டுகின்ற ஒரு கூட்டம், அரசியலில் போராடக் கூடிய எண்ணம் இருக்குமா? இது தவிர, இந்த கட்சியில் இருந்து, அந்த கட்சியில் இருந்து, வந்தவர்கள், உதாரணத்திற்கு செங்கோடையினை எடுத்துக் கொள்வோம்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்த வரைக்கும் அவருக்கென்று ஒரு தனி மரியாதை தான். ஏனென்றால் 50 ஆண்டுகாலம் அதிமுகவில், அந்தக் கட்சியில் உழைத்தவர் என்று வைத்துக் கொள்வோம். ஆனால்,
இப்போது விஜய் இடம் போய் செங்கோட்டையன் தலைவர் வாழ்க என்றால், எல்லாரும் சிரிக்க வேண்டிய ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால், ஒரு பக்கம் அவருக்கு வயது, இன்னொரு பக்கம் அவருடைய சீனியர் அரசியல் .இது இரண்டுமே செங்கோட்டையன் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும்.
மேலும்,அதேபோல் தான் நாஞ்சில் சம்பத் ,இவர் ஒரு பேச்சாளர் .ஏதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பார் .எப்படியும் பேசுவார் அவருடைய நிலைப்பாடு அதுதான். அந்த இடத்தில் செங்கோடையனை வைக்க முடியாது. இப்படி ஒரு முரண்பட்ட அரசியலில் சிக்கிக்கொண்டார் செங்கோடையன்.

மேலும், விஜயை நம்பி அரசியலில் வாக்களிப்பவர்கள், அரசியல் தெரிந்தவர்களும், தகுதியானவர்களும் இருக்க மாட்டார்கள். ஒரு பக்கம் இவர் கிறிஸ்துவ மதத்தை சந்தர்ப்பதால், ஜோசப் விஜய், கிறிஸ்தவத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். தவிர,
அரசியலுக்கு எல்லாரும் பேசுவது போல், அரசியலில் எல்லா மதமும் ஒன்று ,எல்லா ஜாதியும் ஒன்று ,இது ஓட்டுக்காக பேசிவிட்டு, போற டயலாக் .ஆனால், உண்மை என்று ஒன்று இருக்கிறது.

மேலும்,அரசியல் என்பது தமிழ்நாட்டில் , தன் சொந்த சமுதாயத்தை கூட ,மதிக்காமல் பதவிக்கு போட்டி போடும் தந்தை ,மகன் தகராறு பாமகவில் இருப்பதை இன்று மற்ற சமுதாயத்தினர் பேசும் அளவிற்கு, அது பேச பொருளாகி இருக்கிறது.
அது விஜய் நிச்சயம் ,கிறிஸ்துவ மதத்தினர் சார்பில் தான் இருப்பார். மேலும்,சினிமாவில் நடிப்பது வேறு, பேசுவது வேறு, நிஜ வாழ்க்கையில் வாழ்வது வேறு, அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டை நிலை நிறுத்துவது வேறு, இத்தனை அரசியலுக்குள் விஜய் இருந்து கொண்டிருக்கிறார் .இதை அரசியல் என்றால் என்ன? என்று தெரியாத தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்,40 ஆண்டு காலம் இந்த கட்சியை நடத்தி பாமக ராமதாஸ் இதுவரை வன்னியர் சமுதாயத்திற்கு செய்தது என்ன? ஒன்றுமே இல்லை. ஏதோ, அந்த கட்சியில் கொடி பிடித்துக் கொண்டு கோஷம் போட்டுக் கொண்டிருந்தவன், கட்சியை பயன்படுத்தி, சமுதாயத்தை ஏமாற்றி சம்பாதித்திருப்பான். அவர்களால் சமுதாயத்திற்கு ஒரு சிறிய நன்மை கூட ஏற்பட்டு இருக்காது.

ஆனால், பெரிய அளவில் பாதிப்புகள், இந்த சமுதாயத்திற்கு இவர்களால் ஏற்பட்டிருக்கும் தவிர, எந்த நன்மையும், இதுவரை இல்லை. அரசியலில், இது ஒரு ஏமாந்த சமுதாயம். தொடர்ந்து ஏமாறாமல் தற்போது, வன்னியர் சமுதாயத்தில், பெரும்பான்மை இன்று புறக்கணித்திருக்கும், அளவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைமை.
ஏன்? இதை சொல்ல அவசியம் என்றால்? இங்கே விஜய் கிறிஸ்தவர்களுக்கா? அல்லது இந்துக்களுக்கா ?என்ன அரசியல் செய்து இந்துக்களுக்காக அர்ப்பணிப்பார்?

மேலும்,இதுவரையில் திருப்பரங்குன்றம் மலை, பிரச்சனை மிகப்பெரிய அளவில், இந்திய அளவில் பேசுபொருளாகிய இருந்தும், இதுவரை வாய் திறக்கவில்லை. இப்படி,இவர்கள் எல்லாம் ஓட்டுக்காக அரசியல் செய்பவர்கள். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், அரசியல் செய்தவர்கள், 1965-தோடு முடிந்துவிட்டது.
அதனால், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உழைப்பவர்கள் குறுகிய சதவீதத்தில் தான் அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். அதிலும், ஒவ்வொரு கட்சியிலும் எத்தனை சதவீதம் தேர்வார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி?
மேலும், விஜய் காங்கிரஸுடன் சேர்ந்தால், அது மெகா ஊழல் கூட்டணி என்று தான் நான் சொல்வேன் . இந்த நாட்டுக்கு ஒரு தேசவிரோத கட்சி என்றால், அது காங்கிரஸ் கட்சி. இந்த காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்.

இது இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி அல்ல, இன்னும், அரசியல் தெரியாத நபர்கள், இதை அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அது தவறு. 1965 க்கு முன் தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆண்டது. சுதந்திரத்தின் தியாக வரலாற்றில் உருவான காங்கிரஸ் கட்சி.
இந்திரா காங்கிரஸ் அதிலிருந்து பிரிந்தது. இது நாட்டை 50 ஆண்டுகாலம் ஆட்சி ஆண்டது. இந்தியாவுக்கு எந்த பெருமையும் முன்னேற்றமும் வரலாறும் இல்லாமல் ஊழல் ஆட்சியை தான் கொடுத்தார்கள் தீவிரவாதத்தை நாட்டில் வளர்த்தார்கள் இது தான் காங்கிரஸ் கட்சியின் வரலாறு.
எனவே ,அரசியல் என்பது சினிமாவை வைத்து தீர்மானிப்பது படித்த சமுதாயமாக இருந்தாலும், அது அரசியலைப் பற்றி தெரியாமல் தீர்மானிக்கிற கூட்டம். ரசிகனாக இருந்தால் சினிமாவை ரசித்து விட்டு போவது தான் நல்லது.

ஆனால், நாட்டுக்கும், உன் வீட்டுக்கும் எப்படிப்பட்ட அரசியல் இருந்தால் நல்லது? என்று தீர்மானிக்க வேண்டிய அல்லது சிந்திக்க வேண்டிய இடத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள்…! ,அதை அவர்கள் புரிந்து கொள்வார்களா?
காலம் உங்களுக்கானது . நாளைய அரசியல் !அடுத்த தலைமுறைக்கானது. இதில் சினிமா அரசியல் வெற்றி பெற்றால் ,உங்கள் வாழ்க்கை தோல்வி என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

எம்ஜிஆர் என்ற மாபெரும் நடிகர் என்றும் மறக்க முடியாதவர்.அவர் அதிமுக என்ற கட்சியை உருவாக்கி, அவர் காலத்திலே, சத்துணவு கொண்டு வந்தார். ஆனால், அவரால் ,ஊழலை ஒழிக்க முடியவில்லை. மதுவை ஒழிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு சிறப்புமிக்க தலைவராலே, தூய்மையான அரசியலை கொடுக்க முடியவில்லை.
ஆனால், விஜய் நான் தூய சக்தி என்று அரசியலில் இவரால் நிரூபிக்க முடியுமா? எம்ஜிஆர் திடீரென்று அரசியலுக்கு வரவில்லை. 40 ஆண்டுகாலம் அரசியலில் எம்எல்ஏ, மற்றும் திமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி விஜய் ஆல் என்ன சாதிக்க முடியும்? விஜயின் அரசியல் எப்படி இருக்கும் ? அரசியல் என்பது தியாகம் ,அர்ப்பணிப்பு,
ஆனால், தற்போது அரசியல் என்பது வியாபாரமாகவும், அரசியல் டயலாக் ஆகவும், சினிமாவைப் போல், ஊடகங்களில் காட்சிப்படுத்துவதை, சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதை, நியாயப்படுத்தி பேசுவதை, எது உண்மை என்பதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் தமிழக வாக்காளர்கள் ,தமிழக இளைஞர்கள்.….!
அதனால் ,அரசியல் படிக்காமல் ,உண்மையை புரிந்து கொள்வது கஷ்டம்.