
அரசியல் என்பது அதானி அம்பானிக்கு மட்டும் தான் அரசியலா? இல்லை ,விமானத்தில் ஏறி பரப்பவர்களுக்கு மட்டும்தான் அரசியலா? இல்லை உங்களைப் போன்ற அரசியல் கொள்ளையர்கள் விமான நிலையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பத்து மடங்கு உயரும் என்று திட்டமிட்டு வாங்கி போட்ட கனவு திட்டம் வீணாகிவிட்டதா? அதனால் ,அது அர்ப்ப அரசியலா?

மேலும்,ஏழை ,நடுத்தர விவசாயிகள் ,கூலி தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ,பூர்வீக கிராமங்களை இழந்து, அவர்களை எல்லாம் காலி செய்து விட்டு, அதானி அம்பானியுடன், இவர்களும் வியாபாரம் செய்வதற்கு அங்கே பரந்தூர் விமான நிலையம் அமைக்க வேண்டும். அதுதான் உயர்வான அரசியல், உதயநிதிக்கு!

அதுவும் ஏன் சும்மா கேட்கிறாரா? ஏற்கனவே,அதானி கொடுத்த அட்வான்ஸ் திருப்பி கேட்கிறாரோ என்னவோ ,யாருக்கு தெரியும்? அதனால் , இது அர்ப்ப அரசியலா? இந்த உண்மை அரசியல் வட்டாரத்திற்கு நன்கு புரியும்.
