
தமிழக தேர்தல் ஆணையம் இன்று முதல் தனி நபர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ தேர்தல் பரப்புரையில் ஈடுபட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,
மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார்.

இது தவிர ,அரசியல் கட்சிகளின் சின்னங்களை சமூக வலைதளத்திலோ, சோசியல் மீடியாக்களிலோ , பேஸ்புக் ,வாட்ஸ் அப் குழுக்களிலோ,வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தால், அவர்களுடைய அக்கவுண்ட் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், பொதுமக்கள் சமூக வலைதளத்தில் மற்றும் சோசியல் மீடியாக்களில் தேர்தல் சின்னங்களை வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது.