
செய்தித்துறை இன்னும், திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் சம்பந்தமான செய்திகளை இணையதளத்தில் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்து வரும் இணையதளம் மக்கள் அதிகாரம் என்பது பத்திரிக்கை வட்டாரத்திற்கும், செய்தி துறைக்கும், பொது மக்களுக்கும்,நன்கு தெரியும். இருப்பினும்,

தேர்தல் சம்பந்தமான செய்திகளை தேர்தல் நேரத்தில், செய்தி சேகரிக்க மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில், எல்லா பத்திரிகைகளுக்கும் கொடுக்கின்ற அதே தேர்தல் நேர அரசின் அடையாள அட்டைக்கு மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவை பெற முடியாது என்று திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வின் தெரிவித்துவிட்டார். நான் மறுநாளே சென்னையில் உள்ள தேர்தல் அலுவலக ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை சந்தித்து இது சம்பந்தமான எனது புகார் மனுவை கொடுக்க சென்றேன்.

அப்போது அங்கு பிஆர்ஓவாக இருந்த சத்தியசீலன் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஐடி கார்டு தானே அதை நான் கொடுக்கச் சொல்கிறேன் என்று அவர் கேரண்டி கொடுத்து, என்னை தேர்தல் ஆணையரை சந்திக்க விடாமல் அனுப்பினார்.
நானும் அவருடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து வந்து விட்டேன். இரு தினங்களாக அவருக்கு போன் செய்தால் ,போன் எடுக்கவில்லை. இன்று காலை, திருவள்ளூர் மாவட்ட பி .ஆர்.ஓ அலுவலகத்தில் சென்று இது சம்பந்தமான தேர்தல் அடையாள அட்டை கேட்ட போது, நாங்கள் அனுப்பி வைத்து விட்டோம், அவர்கள் கொடுக்கவில்லை என்று பி, ஆர். ஓ வின் டிரைவர் முருகன் என்னிடம் தெரிவித்தார்.

இவர்களுக்கு எல்லாம் பத்திரிகை பற்றி படிக்காமல் ,அரசியல் கட்சி பின்னணியில், அரசியல் கட்சிகளுக்கு பி ஆர்.ஓ.வாக போக வேண்டியவர்கள் எல்லாம் செய்தித் துறையில் அரசியல் பின்புலத்தில் பி.ஆர்.ஓ வாக வந்து, அதனுடைய நாலேஜ் என்ன ?என்று கூட தெரியாமல் வந்து, அதிகாரம் கையில் வைத்துக் கொண்டு, எங்கள் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இவர்கள் திமுக ஆட்சி வந்தால் ,திமுக கட்சிக்காரர்களாகி விடுகிறார்கள். அதிமுக வந்தால், உடனே அதிமுக கட்சிக்காரர்களாக மாறி விடுகிறார்கள்.
உண்மையிலே, இந்த பிரச்சனையை நீதித்துறையில் கொண்டு போய் இவர்களையெல்லாம் உட்கார வைத்து, அங்கே பத்திரிகைகளை பற்றி கேட்க வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தில் தமிழகம் முழுதும் உள்ள மொத்த பி.ஆர்.ஓ களையும் வர வைத்து, நான் கேட்கின்ற கேள்விக்கு இவர்கள் அங்கே பதில் சொன்னால், பி ஆர் ஓ வாக இருப்பதற்கு எத்தனை பேருக்கு தகுதி இருக்கிறது? என்பது நீதிபதி முன்னால் தெரிந்து விடும்.மேலும்,
நான் இப்போதும் , இது சம்பந்தமாக,எமது நீதி அரசர் ஒருவரிடம் இது பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவரும் டெல்லியில் இது சம்பந்தமாக வழக்கறிஞர்களுடன் விவாதிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும்,இந்த வழக்கை சுமோட்டாவாக எடுக்க வேண்டும் என்று தான் நான் அவரிடம் தெரிவித்திருக்கிறேன்.

ஏனென்றால், இந்த பத்திரிக்கை துறைக்குள் அரசியல் கட்சி தலையீடு அதிகரித்து, இவர்கள் யார் பத்திரிக்கை? என்று சொல்கிறார்களோ, அதுதான் பத்திரிக்கை என்ற நிலைமைக்கு பத்திரிக்கை துறை மிகக் கேவலமாக ஆகி விட்டதா?

மேலும்,செய்தித் துறையில் தமிழக அரசின் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படாதவர்கள் தான் தற்போதைய செய்தி துறையில் இருக்கக்கூடிய 99 சதவீத பி.ஆர்.ஓ கள். இவர்களெல்லாம் அரசியல் கட்சி பின்புலத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டு, அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கு பி .ஆர்.ஓ களாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

செய்தியின் தரம் தெரியாது .செய்திக்கு அர்த்தம் தெரியாது. பத்திரிகையின் தரம் தெரியாது அதன் நோக்கமும் தெரியாது .இவர்கள் எல்லாம் பிஆர்ஓ என்றால் யார் ஏற்றுக் கொள்வான்?
அதனால்தான், தகுதியான பத்திரிகைகளும் ,தகுதியான பத்திரிகையாளர்களும், அவர்களுக்கு உரிய அரசின் சலுகைகள், அங்கீகாரங்கள் மறுக்கப்படுகிறது. இது பத்திரிக்கை துறைக்கு ஆபத்தானது .நாட்டின் எதிர்காலத்திற்கும், சமூக நலனுக்கும் எதிராக செயல்படக்கூடிய செய்தி துறையை நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது.

மேலும்,பத்திரிக்கைத்துறை என்பது அரசியல் கட்சிகளின் ஆதரவில் பிழைப்பு நடத்தும் கூலி கூட்டமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. போலியான பத்திரிக்கை பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி, கார்ப்பரேட் பத்திரிக்கை வியாபாரமாக மாற்றி இருக்கிறார்கள்.
இதை சமூக நலன் பத்திரிகைகள் ,இவர்களுடன் போராடி இதை உடைத்து ஆக வேண்டும். இவர்கள் கார்ப்பரேட் உடன் கைகோர்த்துக்கொண்டு அந்த பத்திரிகைகளுக்கு தான் சலுகை விளம்பரங்கள் என்று தீர்மானித்து ஏஜெண்டுகள் மூலம் கமிஷன் பெற்றுக் கொண்டு, மிகப் பெரிய ஊழல், தமிழக செய்தி துறையில் நடந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்று தான் எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கு மறுக்கப்படுகிறது.

மேலும், இது சம்பந்தமாக அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் இடமும் பேசியிருக்கிறேன் .தேர்தல் முடியட்டும் இதற்கெல்லாம் ஒரு தீர்வு நிச்சயம் உண்டு.
மேலும்,இப்போது கூட சென்னையில் இருந்து மத்திய அரசின் செய்தி துறை அலுவலகத்தில் (PIB) இருந்து ஒரு செய்தியை அவசரமாக போட வேண்டும் என்று கேட்டார்கள் .உடனடியாக அதையும் வெளியிட்டு இருந்தோம்.
ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில், திமுக கட்சி பத்திரிக்கையாக செயல்படக்கூடிய பத்திரிகைகளுக்கு மட்டும்தான் ,இங்கே பத்திரிகையின் அங்கீகாரம் சலுகை, விளம்பரங்கள் எல்லாம் கொடுக்கப்படுகிறது.
அதனால் பத்திரிகைகளை எல்லாம் திமுக கட்சி பத்திரிக்கையாக நடத்தினால் தான் செய்தி துறையில் பத்திரிகை என்று சொல்வார்கள் என்பதை பொதுமக்களுக்கும் பத்திரிக்கை துறை சார்ந்தவர்களுக்கும், தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மறைக்கப்பட்ட ஒரு உண்மை .
அதனால் ,தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக் திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து இப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று இச் செய்தியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .
Therefore, I request through this message that the Election Commissioner Archana Pat Nayak should take immediate action against the Thiruvallur District PRO Ashwin and find a solution to this problem – Editor MAKKAL ADHIKARAM.