தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், நடத்திக் கொண்டிருக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமை மக்களுக்கு புரியவில்லையா?

நாட்டில் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற ஊழல்களுக்காக விசாரிக்கக் கூடாது. அதிகாரம் இல்லை. இப்படி மக்களை முட்டாள் ஆக்குவதற்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார? எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பது ஏன்? மேலும்,நீதிமன்றம் எதற்காக இருக்கிறது? ஊழல்களை விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்வதற்கு இருக்கிறதா? இல்லை ஊழலை விசாரிப்பது தவறு. அதனால், மக்கள் ஆதரவு ஸ்டாலினுக்கு குறைந்து விடும். அதற்கு ஏதாவது மூட்டு கட்டை போடுவதற்கு நீதிமன்றங்கள் இருக்கிறதா? இதற்கு அடுத்தபடியாக பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதைப் பற்றி […]

Continue Reading

அமித்ஷாவின் அரசியல்! கலக்கத்தில் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி!

மதுரைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா,ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு. மற்றொரு பக்கம் திமுகவின் ஊழல் பற்றியும், நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் நிதி உதவிகள் நேரடியாக மக்களுக்கு சென்றடையாமல், அதிலும் திமுக ஆட்சி என்றாலே, ஊழல்,ஊழல், ஊழல். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் செய்வதறியாது,இந்த திமுக ஆட்சியின் வெறுப்பில், வேதனையில் இருந்து வருகிறார்கள். தவிர, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல்,90 சதவீதம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் EVM மிஷின் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரு கூட்டம் சொல்வது உண்மையா? நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

சிவகங்கை பகுதியில் மக்களுக்காக போராடும் கட்சி என்று மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டு இந்த இவிஎம் மிஷினில் வாக்களிப்பது தவறு. பழைய வாக்கு சீட்டை பயன்படுத்தி தான் தேர்தல் நடத்த வேண்டும். இப்படியெல்லாம் மக்களிடம் பிரச்சாரத்தை கொண்டு போனால், பாமர மக்களுக்கு எது உண்மை?எது பொய்?என்பதை தெரியாது. மேலும், இவர்கள் செய்யும் இந்த பிரச்சாரம், மக்களிடம் எளிதில் தங்களை விளம்பர ப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு பிரச்சாரம் செய்வது போல் தெரிகிறது. மேலும், இந்த விளம்பர அரசியலுக்காக […]

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல்!இதில் கருத்துக்கணிப்பு என்பது ஒரு பொய்யான தகவல்.

தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு கணிக்க முடியாத தேர்தல் கருத்துக்கணிப்பு. இதில் பல ஊடகங்களும்,தனியார் நிறுவனங்களும், கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இவர்களுடைய கருத்துக்கணிப்பு எப்படி என்றால்?கூட்டணி அரசியல் கட்சிகளை வைத்து கருத்து கணிப்பு நடத்தி பார்க்கிறார்கள். இங்கே கூட்டணி கட்சிகளுக்கு, அந்தந்த கூட்டணியில் இருக்கக்கூடிய அந்தந்த கட்சி உறுப்பினர்களும்,,நிர்வாகிகளும் அவர்களுடைய குடும்பங்களும் தான் அதிக அளவில் அதற்கு வாக்கு வங்கியாக இருக்கும். என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது கடினம். இது கொஞ்சம் […]

Continue Reading

காஷ்மீரில் கேபிள் ரயில் பாலத்தை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து, வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

473 மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இது புயல், காற்று நில அதிர்வு,போன்ற இயற்கை சம்பவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வலிமையானதாக அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த பாலத்தின் வழியே செல்லும் வந்தே பாரத் தரையிலே பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இந்த ரயில்வே துறையில் இப் பணியினை மேற்கொண்ட பொறியாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவர்களை பாராட்டி,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading

பிஜேபியில் அண்ணாமலை அரசியல் தகுதி என்ன ? தலைமை அரசியல் எப்படி இருக்க வேண்டும்?

பிஜேபியில் அண்ணாமலையின் அரசியல் ஒரு விளம்பர அரசியல்! அதன் மூலம் பிஜேபி கிராமங்களுக்கு சென்றடைந்தது. அதிலும் ஒரு படி மேலே, என்ன நடந்தது? என்றால்,அண்ணாமலை ஏழை மாணவர்களிடம் பேசி கட்டியணைப்பது,தாய்மார்களை கட்டியணைத்து பேசுவது, ஒரு சில கட்சிக்காரர்களின் இழப்புக்கள்,கல்யாணம் போன்றவற்றுக்கு சென்றது, இதுதான் அண்ணாமலையின் அரசியல். இதிலே அண்ணாமலை அரசியல்வாதியாக செயல்பட்டார?இல்லை காவல்துறை அதிகாரியாக செயல்பட்டார? இது இரண்டிற்குள் அவருடைய அரசியல் தெளிவற்ற அரசியல். நான் அண்ணாமலையை முதன் முதலில் கமலாலயத்தில் மாநில தலைவராக பொறுப்பேற்ற போது […]

Continue Reading

நீதியரசர் கற்பக விநாயகம், தமிழில் கவிதை, இலக்கியம்,ஆன்மீகம், அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு படைப்பாளி…!

இந்தப் படைப்பாளியின் அழகில் வடித்த ஒரு கவிதை! அழகு தமிழில் அற்புத படைப்பானது. அது மனித வாழ்க்கையில் அழகிற்கு அர்த்தம் சொல்லும் கவிதை…! இது அழகின் கவிதையா? அல்லது கவிதையின் அழகா? எது என்பது நம் உணர்வில் அது அழகு வடிவில் கலக்கும் போது இந்த கவிதையின் அழகு எப்படி?என்பதை படித்து அதன் அழகு சுவையை பருகுவோமா? ஆடும் பொழுது மயில் அழகுஓடும் பொழுது மான் அழகுதாவும் பொழுது முயல் அழகுகூவும் பொழுது சேவல் அழகுபாயும் பொழுது […]

Continue Reading

தமிழக அரசு! கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ள அரசாணை.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய்த்துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித்தகுதியில், எஸ்.எஸ்.எல்.சியில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்.எஸ்.எல்.சியில் […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமூக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறதா? இது ராமதாஸின் குடும்ப சொத்தா? அல்லது சமூக நோக்கத்திற்கானதா? சமூகம் சிந்திக்குமா ?

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவிய நோக்கம் என்ன? அதுவாவது இந்த மக்கள் சிந்திப்பார்களா? இல்லை சமுதாயத்தையே தாங்குகிறார் போல் பேசுவதையும், நடிப்பதையும் பார்த்து 40 ஆண்டு காலத்திற்கு மேல் ஏமாந்தது போதாதா? இனியும் தொடர்ந்து ஏமாறும் கூட்டம் சமூக நலனுக்காக அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய சொந்த நலனுக்காகவும், அவர்களை இந்த சமுதாயத்தை ஏமாற்றி ஓட்டு வாங்கி,தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ள இருப்பார்களே ஒழிய,இந்த வன்னிய சமுதாய மக்களுக்காக இருக்க மாட்டார்கள். இப்படி இந்த இட ஒதுக்கீடை […]

Continue Reading

இளமையின் வேகம்! அறிவை அலட்சியம் செய்யும்.இது ஒரு புறம் என்றால்,அரசாங்கம் இந்த கூட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்காமல் நடத்தியது தான் ,பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உயிரிழப்பு.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வெற்றி விழாவிற்கு சென்ற இளைஞர்கள் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்போதே அறிவுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். அவர்களுக்கு தெரியும் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. ஆனால், கல்வியறிவு வேற, இறைஞானம் வேற, இந்த இறை ஞானம் உள்ள குழந்தைகள் நிச்சயம் அந்த இடத்திலிருந்து வெளியேறி இருப்பார்கள். அவர்கள் இந்த கேளிக்கை, போலியான மகிழ்ச்சி, இதில் எல்லாம் ஆர்வம் காட்ட மாட்டார்கள். […]

Continue Reading