விவசாயிகளின் தானிய யோஜனா திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தானிய யோஜனா திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ,இது பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது : முதற்கட்டமாக 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம். மேலும் இந்த திட்டம் 2025 – 26 முதல் ஆறாண்டு காலத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 24 ஆயிரம் கோடி செலவில் […]

Continue Reading

உபநிஷதங்கள், வேதங்கள் படிப்பதிலும் இயற்கை வேளாண்மை செய்வதிலும் நேரம் செலவிடப் போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா .

அரசியலில் ஓய்வு பெற்ற பிறகு தனது நேரத்தை உபநிஷதங்கள் வேதங்கள் படிப்பதிலும் இயக்க வேளாண்மை செய்வதிலும் தனது நேரத்தை செலவிட போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதை அகமதாபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று மக்களுக்கு இந்த ரசாயன உரங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் தைராய்டு கேன்சர் போன்ற பல நோய்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணம் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.

ஜூலை 06, 2025 • Makkal Adhikaram விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

நாட்டில்! சட்டங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். இதில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகள் விமர்சனத்திற்கு ஏன் உள்ளாகிறது? அரசியல் தலையிடா?பணமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  நாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அது பொதுமக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்ற எம்பிக்கள் வரை விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.அதாவது ஒன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஒன்று சட்டம் தெரியாமல்,கட்சிகளின் பின் புலத்திலிருந்து  அந்த கட்சியின் சிபாரிசின் பேரில், நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அது பெரும்பாலும் விமர்சனத்திற்கு அந்த தீர்ப்புகள் இருந்து வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்ற கருத்து.  மேலும், அப்படிப்பட்டவர்களை நீதித்துறை நியமனங்கள் நிறுத்தப்பட […]

Continue Reading

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் போராட்டம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வு மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்துவாரா?

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கொடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள். இன்று விவசாயம் என்பது மிகவும் கடினமாகவும் போராட்டமாகவும் இருக்கின்ற நிலையில் ஒரு பக்கம் வேலையாட்கள் இல்லாமல் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இது போன்ற நெல்லுக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு அரசாங்கம் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த விவசாயிகள் குடும்பத்தில் திருமணத்திற்கும் துக்கத்திற்கும் பணம் இல்லாமல் வேதனைப்படுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?

பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]

Continue Reading

தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? – தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால், கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,தாலுகா அலுவலகத்திலும்,அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக இருப்பதில்லை. அதற்கு பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது. என்ன விஷயம் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்றம்,ஒருவருடைய சொத்தில் இன்னொருவர் தள்ளி கல்லை போட்டு […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு துணைவேந்தர்கள் நியமன உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் ரவியிடம் இருந்த அதிகாரத்தை பறிக்க, சட்டமன்றத்திலே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அவர் அதை கிடைப்பில் போட, ஸ்டாலின் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அது சட்டமாக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்,இடைக்கால தடை விதித்துள்ளது.

Continue Reading