
தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.
மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் காட்டி, மக்கள் ஏமாற துணை போய் கொண்டு இருக்கிறார்கள் . தவிர திமுகவின் ஐடி விங், மற்றும் பணத்திற்கு விலை போகும் யூடியூபர்கள் அனைவருக்கும் திமுக ஒரு விலையை கொடுத்து வைத்திருக்கிறது.
மேலும்,திமுக ஆட்சி ஏற்பட்ட நாளிலிருந்து அவர்கள் செய்த செயல்பாடுகள் என்னென்ன ?என்பதை பட்டியல் போடுங்கள். அடுத்தது ,அந்த செயலுக்கு எந்த அளவுக்கு, அதில் ஊழல் இருந்தது? என்பதை அதையும் பட்டியல் போடுங்கள்.

இதில் எது அதிகம்? என்பதை படித்த இளைஞர்கள், அரசியல் தெரிந்தவர்கள், சிந்தியுங்கள். செய்ததை விட, சாப்பிட்டது தான் அதிகம். இவர்கள் உழைத்து விட்டு போபவர்கள் அல்ல, பிடுங்கிக் கொண்டு போபவர்கள். அதாவது மக்களுடைய பாக்கெட்டில் என்ன இருக்கிறது? என்று கூட ஆராய்ந்து பார்ப்பார்கள்.
அரசியலில் கிரிமினல்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பாதுகாப்புக்கு ஒரு அரசியல் கட்சி என்றால், முதலில் திமுக . மற்ற கட்சிகளிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை காப்பாற்ற மாட்டார்கள் ஆனால், இவர்கள் அவர்களை காப்பாற்றி ,மக்களுக்கு எந்த கொடுமை நேர்ந்தாலும் பரவாயில்லை என்று அதையும் நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருப்பவர்கள் திமுகவினர்.

மேலும், இந்த வித்தை எல்லாம் யாரிடம் செல்லுபடியாகும்? அரசியல் தெரியாதவர்களிடம் செல்லுபடியாகும். மேலும், இவர்கள் கொடுக்கின்ற காசுக்கு செய்தி போடுகின்ற பத்திரிகை, தொலைக்காட்சிகளிடம் அது செல்லுபடியாகும்.மேலும்,
மத்திய அரசு செய்த திட்டங்களை எல்லாம் இவர்கள் செய்தார்கள் என்று அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ,மக்களே நீங்கள் விழித்துக் கொள்ளாத வரை உங்களை திமுக என்ற தீய சக்தி கெட்டியாக பிடித்துக் கொள்ளும். உண்மையை படியுங்கள். சிந்தியுங்கள்.

மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் ,தற்போது நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்களின் ஊழல் வழக்குகள்? குற்ற பின்னணிகள் என்ன? என்பதை ஆய்வு செய்து வாக்களியுங்கள்.

அரசியல் கட்சி என்பதை விட ,வேட்பாளர்களின் தகுதி என்பதுதான் மிக மிக முக்கியமானது. அந்தத் தகுதி, அவர்களுடைய அரசியல் நேர்மையாக இருக்க வேண்டும்.

அது இவர்களுடைய பேச்சால் வாக்காளர்களை ஏமாற்றும் வல்லமையாக இருக்கக் கூடாது.மேலும்,
திருடனும் ,கொள்ளையடப்பவனும் உத்தமன் என்று தான் நீதிமன்றத்திலே போய் சொல்லுவான் . அதே போல் தான், இந்த ஊழல்வாதிகளும் ,எங்களை விட உத்தமர்கள் யாரும் இல்லை என்று பேசுகிறார்கள்.

மேலும்,நாங்கள் செய்த சேவையை வேறு யாரும் செய்யவில்லை என்று அதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்கள் ஏமாந்தால், உங்களை அடியோடு வீழ்த்துவதற்கு தயாராக இருக்கிறார்கள். அதனால், மக்கள் உஷாராகி, இந்த அரசியல் கட்சியினரிடமிருந்து விழித்துக் கொள்ளுங்கள். மேலும்,

இவர்கள் யார்? இவர்களின் தகுதி என்ன? இவர்கள் என்ன சமூகப் பணியாற்றி இருக்கிறார்கள்? இதுதான் மக்கள் வாக்களிக்கும் முன் சிந்திக்க வேண்டியது…..! வாக்காளர்கள் ஒவ்வொருவரின் கடமை .