
சங்கீதா ,விஜய்யிடம் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்ததால், இந்த மனு பல ஆண்டுகளாக வாய்தா வாங்கி, வந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்ற கட்டாயத்தில் ,நீதிமன்றத்தில் வரும் போது, இருவருக்கும் நேரில்,ஆஜராக விளக்கு அளிக்கப்பட்டது.மேலும்,
நீதிமன்றம் நேரில் ஆஜராகாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம், ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் திடீரென்று நேற்று சங்கீதா வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். இவர் வழக்கை வாபஸ் பெற்றதனால், விஜய் தெரியாமல், சட்டப்படி இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது.
அது இந்து முறைப்படி கல்யாணம் பண்ணி இருந்தாலும் ,அல்லது கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் பண்ணி இருந்தாலும், சட்டப்படி செல்லாது. மேலும்,
இந்து மற்றும் கிருத்துவ சட்டப்படி, முதல் மனைவி இருக்கும் போது, இன்னொரு மனைவி சட்டப்படி விவாகரத்து செய்யாமல், இன்னொருவரை திருமணம் செய்ய முடியாது.
மேலும், இவர் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிறார். அப்படி தவறான முறையில், இவர் திருமணம் செய்தால் ,,பதவிக்கே ஆபத்து. அது ஒரு புறம், மற்றொருபுறம், மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய இமேஜ் ,அதாவது மதிப்பு, மரியாதை தரம் தாழ்ந்து ,பேசும் அளவுக்கு வந்துவிடும். இதை மக்கள் பேசுவதை விட, அரசியலில் எதிர்கட்சிகள் அதிகம் பேசுவார்கள். மேலும்,

இந்த விஷயத்தில் விஜய்க்கும் வேறு வழியில்லை, சங்கீதாவுக்கும் வேறு வழி இல்லை,இது தவிர, இவருக்கு மகனும், மகளும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில், அந்த இருவருக்கும், இவர்களுடைய அப்பா வேறு ,ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார் என்ற ஒரு அவமரியாதை அந்த பிள்ளைகளுக்கு போய் சேரும்.
அது மட்டுமல்ல,வாழ்க்கையில் ஒரு பக்கம் சட்டம் ,இன்னொரு பக்கம் கலாச்சார வாழ்க்கை நெறிமுறைகள், இவை அத்தனையிலும், மக்கள் மத்தியில் இவர் பேசப்படுவார்.
இப்போது அதிலிருந்து இவர் வெளிவந்துள்ளது ஒரு நல்ல குடும்பத்திற்கான உதாரணமாக திகழலாம். பிறகு, இவர்களுடைய வாழ்வியல் முடிவு, ஒத்து வாழ்வது, இருவருடைய மனதைப் பொருத்த தனிப்பட்ட விஷயம் . இதில் யார்? விட்டுக் கொடுத்து போனாலும், ,இவர்களுடைய சந்ததிகளுக்கு அது வெற்றி .
