
தமிழ்நாட்டில் செய்தி நிறுவனங்கள், தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர்களிடம் தேர்தல் வரை ,செய்திகள் போடுவதற்கு 10 லட்சம், 20 லட்சம் ,30 லட்சம், இப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் ,ஒரு ரேட் போட்டு வாங்கி விட்டார்கள் என்ற தகவல் செய்தியாளர்கள் மத்தியில் பேசப்படும் ,முக்கிய செய்தி.

மேலும்,இது வியாபாரமாகவும், இல்லை ,பத்திரிக்கையாகவும் இல்லை. மக்களை ஏமாற்றக்கூடிய செய்தி நிறுவனங்களாக தான், இந்த பேக்கேஜ் செய்திகள் இருக்கும். காரணம் வேட்பாளர்கள் பேசுவதில் அல்லது அரசியல் கட்சியினர் அல்லது அந்த கட்சியின் தலைவர்கள் பேச்சில் எது உண்மை? என்பதை சொல்வதற்கு தான் பத்திரிகைகள் தேவை. ஆனால்,அவர்கள் எப்படிப்பட்ட பொய் சொன்னாலும், அவர்கள் சொல்வதை அப்படியே மக்களிடம் ,சொல்வதற்கு பத்திரிகைகள் தேவையில்லை.

மேலும்,செய்தி என்பது மறைக்கப்பட்ட உண்மைகளை தான் செய்தி என்று சொல்ல முடியுமே, தவிர, எந்த பொய் சொன்னாலும், அது செய்தி என்று சொல்வதற்கு எப்படிப்பட்ட பெரிய பத்திரிக்கை, தொலைக்காட்சியாக இருந்தாலும், அதற்கு தகுதி இல்லை. தவிர,இவர்கள் அரசியல் கட்சிகளுக்கு சான்றிதழ் கொடுக்க இவர்கள் யார்? அதுதான் மக்களின் கேள்வி?
மேலும், நீ என்ன பேசினாலும் ,அதை பணத்திற்காக அப்படியே பத்திரிக்கையில் அச்சிட்டு, வெளியிடுவது செய்தி அல்ல,

மேலும் ,அதையெல்லாம் ஒரு செய்தி என்று தகுதியான பத்திரிகையாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர்.
மேலும்,பத்திரிக்கை என்றால், என்ன? என்று தெரியாதவர்கள், இதுதான் பத்திரிக்கை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் தான் இதை நம்ப வேண்டும்.
மேலும்,எந்த ஒரு பத்திரிக்கை செய்தி நிறுவனமாக இருந்தாலும், அது மக்களுக்காக கொடுக்கப்படும் உண்மை செய்தியாக இருக்க வேண்டும்.

ஆனால் பணத்திற்காக இவர்கள் வீதி, வீதியாக ஓட்டு சேகரிக்கிறார், மக்கள் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்கள் ,ஆரத்தி எடுத்தார்கள், இதுவா செய்தி? இதனால் யாருக்கு என்ன? பயன்கள்?
மேலும்,ஒரு வேட்பாளர் !அவர் யார் ?அவருடைய கட்சிப் பணி என்ன? சமூகப் பணி என்ன ?அவர் நல்லவரா? கெட்டவரா? இதை சொன்னால் கூட, அது செய்தி என்று கூட ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால்,தொலைக்காட்சிகள் கூட்டத்தை போட்டோ சூட் எடுத்து காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகள் போட்டோ எடுத்து அவர்கள் பேசியதை எல்லாம் செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கவா? இதுதான் தேர்தல் பேக்கேஜ் செய்தியா?
மேலும், ஏற்கனவே, அந்த தொகுதியில், எம்எல்ஏவாக இருந்தவர்கள், முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர்கள், அவர்களுடைய ஊழல்கள் என்ன ?தொகுதி மக்களுக்கு அவர்கள் செய்தது என்ன?

மேலும்,தொகுதி மக்களிடம் அவர்களுடைய அணுகுமுறை என்ன? அவர்களுடைய அரசியல் நேர்மை என்ன? தொகுதி மக்களை இதுவரை எவ்வளவு பேரை சந்தித்தார்? அவருடைய தொகுதியில், செய்த மக்கள் பணி என்ன? இதைப் பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொண்டால்!யார் தகுதியானவர்கள்? யார் எம்எல்ஏவுக்கு தகுதியற்றவர்கள்? என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
ஆனால், அவர்கள் பேசுவதெல்லாம் செய்தி என்று மக்களை ஏமாற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகள், இதுதான் அரசியல் என்று, அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றலாமா? மேலும்,

மக்களுக்கு எந்த உண்மை, வேட்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்? அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது பிட் நோட்டீஸ் அடித்து மக்களிடம் கொடுக்கிறார்கள். அதையும் ஃபோட்டோ எடுத்து, வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ,ஒரு பத்திரிக்கையே தேவையில்லை.

மேலும், இந்தத் தேர்தல் சம்பந்தமான ஒரு விழிப்புணர்வும் ,மக்களுக்கு கொடுக்கவில்லை. இவர்களெல்லாம் பெரிய பத்திரிகைகள் ,பெரிய தொலைக்காட்சிகள், என்று மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான பணம் இவர்களுக்கு சலுகை, விளம்பரங்களாக, இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு ,எப்படி அக்ரிடேஷன் கார்டு மற்றும் நான்காவது தூண் என்று இதையெல்லாம் சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

மேலும்,உண்மையை சொல்ல தகுதி இல்லாத பத்திரிகைகளின் செய்திகளை படித்து மக்கள் ஏமாறப் போகிறார்களா? தவிர, பணத்துக்காக செய்திகளை வெளியிடும் ,பத்திரிகை நிறுவனங்கள், எல்லாம் மக்கள் பெரிய பத்திரிகை என்று இன்னும் எத்தனை காலம்தான் நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்?

மேலும்,சோசியல் மீடியாவில் ,ஓரிரு உண்மை செய்திகள் வெளிவருவது கூட ,இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் இருந்து வெளிவரவில்லை. ஆனால், லேபிள் வைத்துக் கொண்டு பத்திரிக்கை என்றால் ,பாமர மக்கள் ஏமாறுகிறார்கள்.
ஆனால் , பத்திரிக்கை துறையை படித்த எங்களை போன்ற பத்திரிக்கையாளர்கள் பலர் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கின்றனர். மேலும்,

ஒரு செய்தி நிறுவனம் தேர்தலுக்கு எந்தெந்த செய்தி மக்களுக்கு முக்கியமானது? அவர் இதை சொன்னார், இவர் அதைப் பேசினார். இதெல்லாம் யாருக்கு தேவை? இது எல்லாம் ஒரு விளம்பர ஊடகங்களாக இருக்கிறதே தவிர,

செய்தி நிறுவனங்களாக இல்லை செய்திக்கு அர்த்தம் இருக்கிறது .விளம்பரத்திற்கு அர்த்தம் இல்லை .நாட்டில் ஒரு பொருளை விற்கின்ற வியாபார நிறுவனங்கள், அந்த பொருளைப் பற்றி தரம் இல்லை என்றாலும் ,அதை மக்களிடம் தரமானது என்று சொல்லி வியாபாரம் பண்ணுவார்கள் .அந்த நிலையில்தான் இந்த செய்தி நிறுவனங்கள் இருக்கிறது.

மேலும்,இதனால்தான் ஊழல்வாதிகள் மற்றும் ஊழல் கலாச்சாரங்களை கார்ப்பரேட் செய்தி நிறுவனங்கள் மறைமுகமாக ஊக்குவிக்கிறது.அதை பொதுமக்கள் அலட்சியமாக பார்க்கிறார்கள்.

மேலும், இது சம்பந்தமான ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், ,அறப்போர் இயக்கம் சார்பில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், திமுக அரசின் மீது அறப்போர் இயக்க ஜெயராமன் வீடியோக்களை பல துறைகளில் இருப்பதாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மக்களிடம் பேசு பொருளாக இருந்து வருகிறது.
அதில் அவர் சொல்வது,ஒவ்வொரு துறையிலும், ஊழல்கள் மலிந்து கிடக்கிறது. அது பற்றி உயர் அதிகாரிகளும், நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் ,இவர் நீதிமன்றம் வரை பிரச்சனைகளை கொண்டு செல்கிறார். அத்தகைய தகவல்களை கேட்டு பெற்று ,அதை மக்களிடம் அந்த உண்மையை எடுத்துச் சொல்கிறார்.
அவர் சொல்வது, மின்சார கட்டண உயர்வுக்கு என்ன காரணம்? அதில் 400 கோடிக்கு மேல், டிரான்ஸ்பார்மர் மாற்றியதில் ஊழல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அப்படி என்றால் ,இந்த ஊழல் என்பது மக்களை எப்படி பாதிக்கிறது ?என்றால் உடனே மின் கட்டணத்தை ஏற்றி விட்டார்கள் .

அது எதற்கு என்றால் ?மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குகிறது. மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கும் போது, இப்படிப்பட்ட டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கும் போது ஏன்? 400 கோடி ஊழல் அதில் உள்ளே வருகிறது? அந்த ஊழலின் பின்விளைவு ?
மக்களிடம் மின் கட்டண உயர்வு அதிகரிக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும் ,ஊழலின் பின் விளைவு, மக்கள் தலையில் தான் போய் விழுகிறது. ஊழல் எப்படி மக்களை பாதிக்கிறது என்பது இப்போது தெரிகிறதா?

எனவே, மக்கள் விழித்துக் கொண்டால், இந்த ஊழல்வாதிகளிடமிருந்து பிழைத்துக் கொள்ளலாம். மேலும்,இந்த ஊழல்களை நியாயப்படுத்தும் பத்திரிகை ,தொலைக்காட்சிகளிடம் இருந்தும் விழித்துக் கொண்டால் ,நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்.
ஏமாந்தால், இந்த அரசியலால் ,மக்களுடைய வாழ்க்கை போராட்டம் ஆகிறது. எனவே, மக்களுக்கு தேவை விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது பத்திரிகைகளின் கடமை.
மேலும்,கடமையாற்றக்கூடிய பத்திரிகைகள் எது? என்பதை இனியாவது மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா? பொதுமக்களும் புரிந்து கொள்வார்களா?