
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு மிக, மிக ,அவசியமானது. அதை தேர்தல் ஆணையம் எப்படி சமாளிக்கப் போகிறது?
மேலும், மத்திய உளவுத்துறை ரிப்போர்ட், மற்றும் மாநில உளவுத்துறை ரிப்போர்ட் ,மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ,இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், இது பற்றிய உண்மையை நிச்சயம் தெளிவுபடுத்த வேண்டும்.
ஏனென்றால் தமிழ்நாட்டின் சட்டமன்ற பிரச்சனை கேள்விக் குறியாக உள்ளது. போதைப் பொருளும், கஞ்சாவும், மது கடைகளும் பழக்கத்தில் இருப்பதால், திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றால், உடனே இந்த கூட்டத்தை வைத்து திமுக ஆங்காங்கே, கலவர பூமியாக தமிழ்நாட்டில் ஆக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல், அதிமுகவும் வேடிக்கை தான் பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் ஒன்று அதிமுக வரவேண்டும், இல்லை என்றால், திமுக வரவேண்டும். இப்படிதான் இருவருக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தமாக இருந்து வருகிறது.
தற்போது இதற்கு மாற்றாக ஒரு (மூன்றாவது) கட்சி தமிழக வெற்றி கழகம் வருகிறது என்றால், அதை இவர்களால் ஜீரணிக்க முடியாது. நிச்சயம், தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் கலவரங்கள் ஏற்பட ,அதிக வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையராக உள்ள அர்ச்சனா பட் நாயக் அவர்களை சுற்றி என்ன? நடக்கிறது என்பதையே அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அதிகாரிகளோ அல்லது உளவுத்துறை ரிப்போர்ட்டோ இருப்பதாகத் தெரியவில்லை. இவர் மிகவும் மெத்தனமாக இருக்கிறார்.

இங்கே மிகவும் ஷார்ப்பான(வெரி இன்டெலிஜென்ட் very intelligent) ஐஏஎஸ் தேவை.மேலும், தமிழக முழுதும் ,தேர்தல் சம்பந்தமான புகார்கள், அரசியல் கட்சிகள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவரைப் பார்க்க நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் எல்லாம், தேர்தல் ஆணையருக்கு இருக்கக் கூடாது.

மேலும்,எந்த ஒரு விஷயமும் அவர்களுடைய கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் ,அவர்கள் தேர்தல் வருகின்ற காலத்தில் ,என்னென்ன நடக்கும்? என்பதை அதற்கு தகுந்தவாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும்,தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளில் உள்ள கிரிமினல்களை சமாளிப்பது ,அவ்வளவு சாதாரண, எளிதான விஷயம் அல்ல. இந்த விஷயத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இது சம்பந்தமான கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும்.

இல்லையென்றால், அவருக்குத்தான் இதில் மைனஸ் ,அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும், இது வாழ்வா? சாவா? என்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலில் இரண்டு கட்சியும், தோல்வியை தழுவினால், இரண்டுமே உடையும், வாய்ப்பும் உள்ளது.

அதனால், தமிழ்நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க, இந்திய தேர்தல் ஆணையம் துணை ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்பு படை அவசியம் தேவைப்படும் என்பது எமது பத்திரிக்கை சார்ந்த கணிப்பு .