
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் திருக்குறளை உலக அளவில் 63 மொழிகளில் மொழி பெயர்த்து, திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல,
இந்தியாவின் பொருளாதராம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 14வது இடத்திலிருந்ததை நான்காவது இடத்திற்கு கொண்டு வந்தது பிரதமர் மோடி.மேலும், சிந்தூர் ஆப்பரேஷன் உலக அளவில் இந்தியாவின் பெருமை நிலைநாட்டப்பட்டது. இப்படி ஒரு சிறப்பான ஆட்சியை மோடி கொடுத்து வருகிறார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 10 லட்சம் கோடிக்கு மேல் நிதி அளித்துள்ளார். ஆனால், ஆளும் திமுக அதை குறைத்து மக்களிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றம், அதன் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, உயர்த்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது. அதனால் தான், ராணுவத்தின் வலிமையை பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருந்து ஏவுகணைகள் இறக்குமதி மற்றும் உள்நாட்டு தயாரிப்புகள் ராணுவத்தின் மிகப்பெரிய வலிமையாக இந்தியா மோடியின் ஆட்சியில் பலப் படுத்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 85க்கு மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் ,400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், பல லட்சம் கோடி சாலை பணிகள், இந்த 11 ஆண்டு கால ஆட்சியில், நாட்டுக்கு அர்ப்பணித்த ஆட்சி! பாஜக ஆட்சி. மேலும், தமிழகத்தில் திமுக வலிமையான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நிற்க தயாரா? தவிர, திமுக கூட்டணிக்குள் சலசலப்பு என்பது போகப்போக தெரிய போகிறது.
மேலும், எங்கள் கூட்டணி கட்சிக்கு பல்வேறு கட்சிகள் வரும் வாய்ப்புகள் உள்ளன .அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் இன்னும் நாட்கள் இருப்பதால், அது குறித்து பின்னர் தெரியவரும். மக்கள் வாக்களித்த பின்னர் தான் ,எது வலிமையான கூட்டணி? என்பது தெரியவரும்.
மேலும், மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 4 லட்சம் பேருக்கு அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து, நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது. தவிர, இந்த மாநாடு பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இதில் கட்சி பேதம் இல்லாமல், திமுக ,அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் உள்ள முருக பக்தர்களும் கலந்து கொள்வார்கள். மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது .இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள். இந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை, இந்து என்பது மதம் இல்லை. ஒரு மதத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆட்சிக்கு வருபவர்கள் யார் ?என்பது மக்களுக்கு தெரியும்.
மேலும், கீழடி விவகாரத்தில் உண்மை நிலையை நேரில் சென்று கண்டறிந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். பிரதமர் மோடி காசியிலும், குஜராத்திலும், தமிழ் சங்கமும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் .இவ்வாறு நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.