கலைமகள் தந்த பிள்ளைகளை, ஒருவரை விட்டு, ஒருவர் பிரிய கூடாது என்று! அவளே அழைத்து விட்டாலா?

நடிகர் பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜுடன் கோவாவில் நடைபெற்ற குஷ்புவின் மகள், திருமணத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பியதும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே தனியார் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அவருக்கு இரங்கல் தெரிவித்து அரசு மரியாதை உடன் உடல் அடக்கம் செய்ய அறிவித்துள்ளார்.மேலும், கலைத்துறையில் கலைமகள் தந்த பாரதிராஜா, பாக்யராஜ் […]

Continue Reading

செந்தில் பாலாஜியின் விளக்க அறிக்கை என்ன என்றால்! திமுகவின் சாதனைகள்! தவெகவின் வெள்ளை அறிக்கை – ஊழலை நியாயப்படுத்தும் ஊழல்வாதிகள் .

செந்தில் பாலாஜி சொன்னதை பார்த்து, தகுதியான பத்திரிக்கையாளர்கள் இவருடைய திறமையை என்ன என்று பாராட்டுவது? மேலும்,செந்தில் பாலாஜி தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை, திமுகவின் சாதனை! உண்மையிலேயே இவர் மறைமுகமாக ஊழல் சாதனையை சொல்கிறார? என்ற கேள்வி தான் ,எனக்குள் எழுந்தது. நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், இது போன்ற கார்ப்பரேட் அரசியல்வாதிகளின் பின்னால் கை கோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி ?மக்களிடம் நல்லவர்களாக, மக்களுக்காக உழைப்பவர்களாக ,தியாகிகளாக, பேசிக் […]

Continue Reading

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும், கார்ப்பரேட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை சாமானிய மக்களின், சமூக நலனுக்கு ஏன்? கொடுப் பதில்லை?

ஒரு நாட்டின் வளர்ச்சி !சாமானிய மக்களின் வளர்ச்சி! ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சி! அதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி!ஆனால், எந்த ஆட்சி வந்தாலும், அது மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கார்ப்பரேட்டை டெவலப்மெண்ட் செய்வதில் தான், நோக்கமே தவிர, சாமானிய மக்களின் பத்திரிக்கையோ, அல்லது தொழிலையோ, முன்னேற்றுவதற்கு முயற்சி எடுப்பதில்லை. மேலும் ,பேசுவது மட்டுமே ,சாமானிய மக்களுக்காக பேசுவார்கள். ஏன் ?மோடியும் அப்படித்தான் பேசியிருக்கிறார். விஜயும் அப்படி தான் பேசி இருக்கிறார். இப்போது முதல்வர் விஜய்க்கு, […]

Continue Reading

சேஷாத்திரி சுவாமிகளின் அனுகிரகம் எளிதில் கிடைத்து விடுமா?

சேஷாத்திரி சுவாமிகளின் அனுக்கிரகம் அவரை பின் தொடர்ந்து செல்லும் போது தான், அந்த அனுகிரகம் படிப்படியாக நம்மை பாதுகாத்துக் கொள்ளும். வாழ வைக்கும், நாம் நினைத்ததற்கு மேலாக கொடுத்து அழகு பார்க்கும். மேலும்,சேஷாத்திரி பிராமணர் சமூகத்தில் பிறந்தாலும் ,அவருடைய நடவடிக்கைகள் எதுவுமே பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவில் அப்போதும் இருந்ததில்லை. இப்போதும் இருந்ததில்லை. ஏனென்றால் அவருடைய உருவம் அப்படி இருந்தது. அந்த காலத்தில் இவர் வாழும்போது பிராமணர்களின் ஆதிக்கமும் ,அவர்களுடைய ஆச்சார ,அனுஷ்டானமும், எதுவுமே சேஷாத்திரி கடைபிடித்ததில்லை. […]

Continue Reading

முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி கல்வித் துறையில் உலக தரத்திற்கு இணையாக மாற்றம் கொண்டு வர முதல்வர் விஜய்க்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் .

மக்கள் அதிகாரம் இணைய தள பத்திரிக்கையில் ,இதை வலியுறுத்தி தான் ,தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரத்தில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளி யிட்டிருந்தோம். அதாவது, செய்தித் துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தனியார் பள்ளி நிறுவனங்களின் அங்கீகாரம் புதுப்பிப்பதற்கு ஒரு பைசா செலவில்லாமல் நாங்கள் செய்து கொடுத்துள்ளோம் .இதில் யாரும் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். அப்போது தனியார் பள்ளிகளை […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை நிறுத்தி மதுராந்தக பகுதியில் விமான நிலையம் அமைக்க தவெக அரசின் தகவலுக்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி .

ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான் அந்த விவசாயத்தை அழித்துவிட்டு நீர்நிலைகளை அழித்துவிட்டு உருவாக்கக்கூடிய விமான நிலையம் மக்களுக்கு தேவையற்றது . அது யாருக்கு தேவை என்றால் பணக்காரர்களுக்கு தேவை சாமானிய பாமர மக்களுக்கு தேவையற்றது. விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இருக்கலாம் ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ,அந்த பொருளாதார வளர்ச்சி தேவையற்றது. திமுக ஆட்சியில் எது எல்லாம் மக்களுக்கு விரோதமானதோ ,அதை தான் கொண்டு வந்தார்கள். இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் […]

Continue Reading

கடந்த திமுக ஆட்சியில்! பல லட்சம் கோடி மதிப்புள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்ட அறப்போர் இயக்கத்தின் வெற்றி! மனித குல வாழ்வின் வெற்றி! அதுவாவது சேகர் பாபுவுக்கு தெரியுமா ?

திமுக ஆட்சியில் தங்களிடம் அதிகாரம் இருக்கிறது எதை வேண்டுமானாலும் மடக்கிக் கொள்ளலாம் எதை வேண்டுமானாலும் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் இதுதான் திமுக ஆட்சியாக இருந்தது. இந்த சதுப்பு நிலங்கள் சதுப்புநில காடுகள் எதற்கு என்று கூட தெரியாத இந்த முட்டாள்கள் பள்ளிக்கரணையில் உள்ள இந்த சதுப்பு நில 2000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதை டாக்குமெண்ட் செய்து அதற்கு அப்ரூவல் வழங்கி சுற்றுச்சூழல் என். ஓ.சி வாங்கி வீடுகள் கட்ட இந்த சதுப்பு நிலம் என்ற ஈர […]

Continue Reading

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைக்கு லைசன்ஸ் வாங்கும் போது ,லைசன்ஸ் கொடுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் அவருடைய கல்வித் தகுதி என்ன? அவருடைய முதலீடு என்ன? அவர் எப்படிப்பட்ட குடோன் வைத்திருக்கிறார்? அந்த குடோன் பாதுகாக்கப் பட்ட குடோனா? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எதனால், ,இந்த விபத்து ஏற்படுகிறது? என்பது குறித்து எதுவும் அவர்களிடம் ஆய்வு செய்வதில்லை. மேலும், ஒரு பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர் அரை குறை வேலை தெரிந்து கொண்டவுடன், அவர் உடனே […]

Continue Reading

பாரதிராஜாவின் இறப்பு! தமிழ் சினிமா உலகத்தின் இழப்பு – ஒரு சாமானியனின் படைப்பு .

பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் வந்த காலத்தில் சினிமா என்ற நிழல் உலகத்தில் இளைஞர்களை சினிமா மோகத்தில் ஈர்த்தவர் . மேலும், கிராமிய ரசனைகளை சினிமாவில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவருக்குப் பின் எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் ,அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை. ஏன்? அவர் மகனாலே கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. எனவே, ஒரு கலையின் படைப்பாற்றல், கலைஞன் […]

Continue Reading