வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும், உருவாக்கியவர்கள்! உருவாக காரணமானவர்கள்! இன்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் ஏறி நிற்கும் ராமதாஸ் குடும்பம் மட்டுமே! அரசியலில் பிழைக்க வழி தேடி கொண்டார்களா?

ஏமாந்த சமுதாயத்தின் மேல் ஏறி நிற்கும் டாக்டர் ராமதாஸ் & கோ . 40 ஆண்டுகளுக்கு முன் ,வன்னியர் சங்கம் கிராமங்களில் உருவானது. அது வன்னியர்களிடையே மிகுந்த தாக்கத்தையும் ,எழுச்சியும் ஏற்படுத்தி இருந்தது. அப்போதும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு தான், இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ ,அந்த நோக்கத்தை முதலில் ஆரம்பித்தவர்கள், பேசிக்கொண்டு இருந்தார்கள். பிறகு ,இடையில் வந்து சொருகிய டாக்டர் ராமதாஸ், பொறுப்பேற்ற பிறகு சங்கம் கட்சியாக மாறுகிறது. அப்போது […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை நிறுத்தி மதுராந்தக பகுதியில் விமான நிலையம் அமைக்க தவெக அரசின் தகவலுக்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி .

ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான் அந்த விவசாயத்தை அழித்துவிட்டு நீர்நிலைகளை அழித்துவிட்டு உருவாக்கக்கூடிய விமான நிலையம் மக்களுக்கு தேவையற்றது . அது யாருக்கு தேவை என்றால் பணக்காரர்களுக்கு தேவை சாமானிய பாமர மக்களுக்கு தேவையற்றது. விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இருக்கலாம் ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ,அந்த பொருளாதார வளர்ச்சி தேவையற்றது. திமுக ஆட்சியில் எது எல்லாம் மக்களுக்கு விரோதமானதோ ,அதை தான் கொண்டு வந்தார்கள். இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் […]

Continue Reading

கடந்த திமுக ஆட்சியில்! பல லட்சம் கோடி மதிப்புள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்ட அறப்போர் இயக்கத்தின் வெற்றி! மனித குல வாழ்வின் வெற்றி! அதுவாவது சேகர் பாபுவுக்கு தெரியுமா ?

திமுக ஆட்சியில் தங்களிடம் அதிகாரம் இருக்கிறது எதை வேண்டுமானாலும் மடக்கிக் கொள்ளலாம் எதை வேண்டுமானாலும் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் இதுதான் திமுக ஆட்சியாக இருந்தது. இந்த சதுப்பு நிலங்கள் சதுப்புநில காடுகள் எதற்கு என்று கூட தெரியாத இந்த முட்டாள்கள் பள்ளிக்கரணையில் உள்ள இந்த சதுப்பு நில 2000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதை டாக்குமெண்ட் செய்து அதற்கு அப்ரூவல் வழங்கி சுற்றுச்சூழல் என். ஓ.சி வாங்கி வீடுகள் கட்ட இந்த சதுப்பு நிலம் என்ற ஈர […]

Continue Reading

கடந்த திமுகவின் ஆட்சி ! மிக மோசமான ஆட்சி நடத்தி விட்டு,இனி திமுக சொல்லும் பொய்களை மக்கள் நம்புவார்களா ? – மக்கள் அதிகாரம் .

கடந்த 2026 தேர்தலில் மக்களுக்கு ஏற்பட்ட திமுக ஆட்சியின் வெறுப்பு அரசியலில்! திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதியதாக வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு மக்கள் வாக்களித்து விட்டார்கள். இது மக்கள் அளித்த தீர்ப்பு ,மாற்றத்திற்கான அரசியல். மேலும், விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காததால் ,திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை வைத்து ஆட்சி அமைத்து விட்டார். இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகள் 100% அவரால் நிறைவேற்ற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி குறி தான். காரணம் ,தமிழ்நாட்டின் […]

Continue Reading

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைக்கு லைசன்ஸ் வாங்கும் போது ,லைசன்ஸ் கொடுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் அவருடைய கல்வித் தகுதி என்ன? அவருடைய முதலீடு என்ன? அவர் எப்படிப்பட்ட குடோன் வைத்திருக்கிறார்? அந்த குடோன் பாதுகாக்கப் பட்ட குடோனா? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எதனால், ,இந்த விபத்து ஏற்படுகிறது? என்பது குறித்து எதுவும் அவர்களிடம் ஆய்வு செய்வதில்லை. மேலும், ஒரு பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர் அரை குறை வேலை தெரிந்து கொண்டவுடன், அவர் உடனே […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் !மாற்றங்களை நோக்கி போகும் நிலை ஏன் ? தகுதியான அரசியல் கட்சி எது? யார் தகுதியானவர்கள்?

அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான […]

Continue Reading

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்ர ஆன்மீக சொற்பொழிவு .

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் டெல்லியில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்ர ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவு இறை ஞானத்தை மனிதன் எப்படி அடைய முடியும்? இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பேரறிவாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம் கற்பக விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும்,சங்கத்தின் துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். என். சாமுண்டீஸ்வரி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் […]

Continue Reading

மாரிதாஸ் கைது! மாரிதாஸ் பேசியதற்காக கைதா? அல்லது உண்மையை பேசியதற்காக கைதா? அல்லது அது பொய்யான தகவலா? இதில் ஏன் கைது?

சமூக ஊடகங்களில் பேசுவதோ, அல்லது பத்திரிக்கை துறையில் உண்மைகளை சுட்டிக் காட்டுவதோ, ஆட்சியாளர்கள் தவறாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்கு தான் மாரிதாஸ் கைது பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் நினைக்க வேண்டி இருக்கிறது. மேலும் ,மாரிதாஸ் ஒரு பொது பிரச்சனை தான் பேசி இருக்கிறார். யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது அவர்கள் குடும்ப விஷயத்தில் எதுவும் பேசவில்லை. அவர் பேசியது உண்மையா? பொய்யா? என்பதை ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், அதை விசாரிக்க வேண்டும். தவிர,பொய்யாக […]

Continue Reading

நாட்டில் அரசியல் ! கேலிக் கூத்தானதால்! மக்களின் வாழ்க்கை! இளைஞர்களின் எதிர்கால கனவு! எல்லாமே கேள்விக்குறியாக காரணம் என்ன? – செல்போனா ?

மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான். மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், […]

Continue Reading