தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு குதிரை பேரம் முதல் கரூருக்கு விஜய் செல்லக்கூடாது வரை, திமுகவும், அதிமுகவும், பிஜேபியும், இணைந்து நெருக்கடி அரசியல்? ஏன்?

விஜய் ஆட்சிக்கு எந்தெந்த விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம்? என்பதை ஏற்கனவே, மக்கள் அதிகாரம் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அதுதான் நடக்கிறது. மேலும், திமுகவினர் மீது கை வைத்தால், நிச்சயம் அவர்கள் பொய்யை பரப்புவதில் வல்லவர்கள். அடுத்தது இது போன்ற குதிரை பேர புகார்கள் அளித்து ஆட்சிக்கும், நற் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால், இவர்கள் அரசியலில் திட்டம் போட்டு திருடுகிற கூட்டங்கள்,அதை சட்டம் போட்டு தடுத்தால், தடுப்பவனை எப்படி எல்லாம் அவன் மீது அவதூறு பரப்பலாம்? எப்படி […]

Continue Reading

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

Continue Reading

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

முதலில் குதிரை பேரம் என்றால் என்ன?ஒரு நல்ல குதிரையை விலைக்கு வாங்குவது போன்றது தான் குதிரை பேரம் . இங்கே,இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ,அது எப்படி குதிரை பேரத்தில் வருகிறது? அவர்களை ராஜினாமா செய்யச் சொன்னது யார்? அவர்களாக செய்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தில், முக்கிய புள்ளிகள் ராஜினாமா செய்ய சொல்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செய்ய சொல்கிறாரா? இப்படி ஆதாரமே இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ,எப்படி இதை மக்களால் […]

Continue Reading

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஊழல் மற்றும் ஊழல் அமைச்சர்கள் செய்தது ,தமிழக மக்களால் பொறுக்க முடியாத ஒன்று. இதைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் விஜய் திமுகவினரின் ஊழல் பட்டியலை தயார் செய்ய ஐ ஏ எஸ் அதிகாரிகள் குழு அமைத்து ரகசியமாக வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஊழல் செய்த சொத்துக்கள் அதை எப்படி அரசு கஜானாவுக்கு கொண்டு வருவது? அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் திமுகவின் அமைச்சர்கள் மீது கை வைத்தால்! தமிழக வெற்றி கழகத்தினருக்குள், குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறதா ?

திமுக ஆட்சியில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இருப்பினும், மக்கள் அதற்கான ஆதாரத்தை எடுக்க முடியாது. அதை எடுத்து பேசவும் முடியாது. மேலும், பேசுபவர்கள் அதற்கு தகுதியான வழக்கறிஞர்கள், தகுதியான பத்திரிகையாளர்கள், தகுதியான அரசியல்வாதிகள், இவர்கள்தான் பேசுவார்கள். இப்படிப்பட்ட ஒரு அரசியலை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. ஆனால், விஜய் தற்போது திமுக அமைச்சர்களான ஏ.வா .வேலு ,செந்தில் பாலாஜி, இந்த இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கை பதிவு செய்து, […]

Continue Reading

ஹோட்டல் உணவு மட்டன் பிரியாணிகளில் மாட்டு இறைச்சி ! கலப்படமா? பொதுமக்கள் அதிர்ச்சி! இனி பொதுமக்கள் உஷார் .

தற்போதைய ஹோட்டல்களில் பெரிய ஹோட்டல் முதல் சிறிய ஓட்டல்கள் வரை 90% சுத்தமான உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதில்லை. மேலும்,சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற கேண்டின்களில் கூட தரமான உணவுகள் ,சுத்தமான உணவு பொருட்கள் சுவையாக கொடுப்பதில்லை. இவர்கள்,பணத்திற்காக மட்டுமே ஹோட்டல் உணவகங்கள் நடத்துகிறார்கள். யாரும் உணவுப் பொருட்களை இலவசமாக கொடுப்பதில்லை. இருப்பினும், மக்களின் பணத்திற்கு ஏற்ப, தரமான உணவு பொருட்களை கொடுத்தால் போதும். பணமும் கொடுத்து ,இவர்கள் தயாரித்து கொடுக்கின்ற உணவுகளால், மக்களுக்கு இன்று […]

Continue Reading

தமிழ்நாட்டில் இருக்கிற ஏழு கோடியில் ஒருவர் ராகவா லாரன்ஸ் ! அதாவது கோடியில் ஒருவரா?

எத்தனையோ பேர் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். நடிக்கிறார்கள் ,பணம் சம்பாதிக்கிறார்கள் ,சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக ஒரு சேவையை மனப்பூர்வமாக செய்யக்கூடிய ஒரு நபர் ராகவா லாரன்ஸ் . இவர் ஜாதி, மதம் ,கடந்து சேவை செய்பவர். இவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால், அந்த தொகுதி மக்களே மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் நானே மக்கள் அதிகாரத்தில் எழுதி இருந்தேன். ஏனென்றால், அரசியலில் கொள்ளை அடித்த குடும்பங்கள் கூட ,ஒரு ரூபாய் பிச்சைக்காரனுக்கு கூட […]

Continue Reading

மதிமுக வைகோ சொன்னதை வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்த்து விட முடியுமா?

ஒருவர் பேசினார் ,செய்தார் என்பதற்காக, ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? சட்டத்தில் அவ்வளவு ஓட்டையா இருக்கிறது? அப்படி பார்த்தால், ஒருவர் கூட ஆட்சி செய்ய முடியாது. மேலும்,வைகோ சொன்னார் என்று முதல்வர் விஜய், இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொன்னார். இதற்கு யார் சாட்சி? எங்கே ஆதாரம்? ஆனால் ,பத்திரிகைகள் ஒருவர் சொல்லி விட்டார் என்று உண்மை தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தால், அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதி இல்லை. மேலும், இவர்களுக்கு ஒரு ஆட்சி […]

Continue Reading

இரவில் இருசக்கர வாகனங்களில் எல் இ டி விளக்குகள் எதிர்வரும் வாகனங்களை விபத்துக்கு உள்ளாக்குவதால், அது தடை விதிக்கப்பட்டும் ,ஏன் நடைமுறையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களின் எல் இ டி பல்ப் வெளிச்சம் கண்களை கூச்சும் அளவிலும், அதே நேரத்தில் பக்கத்தில் வருவது தெரியாமலும் விபத்துக்கள் தொடர்கிறது. இது இப்போது உள்ள இளைஞர்களுக்கு எதிர்வரும் வாகன போட்டிகளுக்கு இவர்கள் மிரட்டுவது போன்ற தோரணையில் வேகமாகவும் வருகிறார்கள். அதிலும் 50 வயது கடந்தவர்கள் கண் பார்வையில் சற்று குறைவான பார்வை குறைபாடுகளும் இருக்கும். அவர்கள் மெதுவாக சென்றாலும் இவர்கள் அதுவும் ஹெட்லைட் போட்டுக் […]

Continue Reading

ஊழல்வாதிகளுக்கும் ,அரசியல் கிரிமினல்களுக்கும், புகலிடம் திமுக வா? வேறு கட்சிகளுக்கு செல்லாமல், இங்கு வந்து சேருவதன் நோக்கம் என்ன? இங்குதான் இனம், இனத்தோடு சேருகிறதா?

கொள்கை என்பது சட்டத்தை ஏமாற்றி, கொள்ளையடிப்பது, மக்களிடமும் , நீதிமன்றத்திலும்,ஆதாரம் இல்லை என்று அதிகாரத்தால் ,பணத்தால், பேச்சு திறமையால், எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியும்? மேலும்,கொள்கைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எப்படியும் பேசலாம் .கொள்கைக்கு அர்த்தம் தெரிந்தவன் அவன் வாழ்ந்து விட்டு போன பிறகும், இவன் இப்படித்தான் வாழ்ந்தான் என்று ஊர் பேசும் .அதுதான் கொள்கை. ஆனால் ,கொள்ளையடித்து விட்டு, கொள்கையை பேசுபவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்? பதவி வெறிக்கு அலைந்து கொண்டு, அடியாள் வேலைக்கு தகுதியானவர்கள் […]

Continue Reading