நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக பிஜேபி இருந்தும் தற்போது ஆளும் 2 மாநில இடைத்தேர்தலில் தோல்வி எதனால்?-பிஜேபி இதை சரி செய்து கொள்ளுமா ?

பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பீகாரில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கன்ஷியாம் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும்,பிஜேபி மக்கள் செல்வாக்கை இழந்து உள்ளதா?பிஜேபி நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக இருந்தும், இடைத்தேர்தலில் தோல்வி என்பது அக்கட்சியின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. இது எதனால்? மக்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய தலைவர்கள் அதில் இருப்பதால் தான், இன்று பிஜேபிக்கு ஒரு செல்வாக்கு இருந்து வருகிறது. […]

Continue Reading

வாழும் காமராஜராக இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு! பிறந்தநாள் வாழ்த்து -தமிழக முதல்வர் விஜய் .

புதுச்சேரி மாநிலத்தில் வாழும் காமராஜராக இருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தை தமிழக முதல்வர் விஜய் போனில் தெரிவித்துள்ளார். மேலும்,இன்று மக்களை எளிதில் சந்தித்து, குறைகளை கேட்கும் ஒரே முதலமைச்சர், முதல்வர் ரங்கசாமி . அவரை புதுச்சேரியில் நானும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் . மேலும்,ஒரு முதல்வர் மக்களிடம் இவ்வளவு எளிமையாக அணுகக் கூடியவர்கள் ,இந்த காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் இருந்தார்கள். அதனால் தான், இவரை வாழும் காமராஜர் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த பெண் ஆட்சியரில்! சூப்பர் பவர் ஆட்சியாளராக கவிதா !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட, ஒரு சில மாதங்களிலே, இவர் பல டிரான்ஸ்பர்களை பல்வேறு துறைகளில் போட ஆரம்பித்து விட்டார். அது பொது மக்களிடம் வந்த புகாரா? இல்லை நேரடியாக வந்த புகார? என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர் இடம் மாற்றத்தை கொண்டு வந்தால் தான், இந்த மாவட்ட நிர்வாகம் சரி செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து இருக்கிறார். மேலும்,தற்போது கூட, 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றி இருக்கிறார். இந்த இடமாற்றம் காரணத்தோடு […]

Continue Reading

தமிழக அரசின் நாளை நடைபெறும் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் .

தமிழக அரசின் பட்ஜெட்டில் நாளை வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விவசாயிகள் ,குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழவர் உரிமை அட்டை, விவசாயிகள் அனைவருக்கும், வழங்க உள்ளதாக தகவல் . மேலும் , விவசாயிகளுக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும், வெற்றி கழகம் என்ற பெயரில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500 ,கரும்பு டன்னுக்கு […]

Continue Reading

உதயநிதிக்கு ஒரே கேள்வி? திமுக ஆட்சி சிறப்பாக செய்திருந்தால் ஏன் ?மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை? – எப்படியும் பேசுவது திறமையா?

திமுக இன்று அல்ல, என்று தொடங்கப்பட்டதோ ,அப்போதே இந்த பேச்சு வித்தை தான், மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இதை இவர் தாத்தா வழியாக ,பரம்பரையாக தமிழக மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, மக்களிடம் எப்படி? தன்னை நேர்மையானவனாகவும், உத்தமனாகவும் ,காட்டிக் கொண்டு பேச வேண்டும் என்று அரசியல் பேச்சை வழி, வழியாக காட்டுகிறார்கள் . மனசாட்சியோடு பேசுபவர்கள், தன்னை யோக்கியனாக, நியாயமானவனாக, காட்டிக் கொண்டு பேச மாட்டார்கள். எதார்த்தமாக பேசுவார்கள். விஜய் ஒருபோதும் உதயநிதி போல், […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Continue Reading

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனைக்காக பொதுக்கூட்டத்தில் பேசிய, உதயநிதி திரிஷாவை வைத்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு – கைது செய்ய நடவடிக்கை .

பொதுக்கூட்டங்களில் பேசும்போது அரசியல் கட்சியினருக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை. அரசியல் சார்ந்த விமர்சனங்கள் ,அது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசுவது ,அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. மேலும், உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசிய பேச்சில் திமுகவை கைது செய்வதில் தான் முதல்வர் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்று பேசிய உதயநிதி, கூட்டத்தில் அவர்களுடைய கட்சியினர் திரிஷா த்ரிஷா என்று கத்துவது, கேட்கிறது. அப்போது உதயநிதி […]

Continue Reading

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்! தமிழகத்திற்கு கபினி அணையிலிருந்து நீர் திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .

கர்நாடக கபினி அணையிலிருந்து வெளிவரும் உபரி நீர், தமிழகத்திற்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று மாலை அல்லது இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வெளியேற்றியுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை தான், கர்நாடக அரசு நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நியாயமான முடிவை எடுத்து நீர் மேலாண்மை […]

Continue Reading

தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக மாற்ற ஆலோசனை செய்வது , நிதி நெருக்கடியா ?

தமிழக அரசு ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் ,ஓய்வூதிய பலனை உடனடியாக கொடுக்க முடியாமல் ,நிதி நெருக்கடியில் திணறி வருகிறது. இதை சமாளிக்க இரண்டு ஆண்டு ஓய்வு பெரும் வயதை உயர்த்தினால், நிதி நெருக்கடியில் இருந்து சமாளிக்கலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல். மேலும்,இது இதற்கு நிரந்தர தீர்வு அல்ல, இதனால், அரசு ஊழியர்களின் செயல் திறன் வேகம் குறைந்து விடும். 60 வயதுக்கு மேல் ஒருவர் சுறுசுறுப்பாக வேலை செய்வது மிகவும் கடினம். ஏற்கனவே […]

Continue Reading