ஊழல்வாதிகளுக்கும் ,அரசியல் கிரிமினல்களுக்கும், புகலிடம் திமுக வா? வேறு கட்சிகளுக்கு செல்லாமல், இங்கு வந்து சேருவதன் நோக்கம் என்ன? இங்குதான் இனம், இனத்தோடு சேருகிறதா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

கொள்கை என்பது சட்டத்தை ஏமாற்றி, கொள்ளையடிப்பது, மக்களிடமும் , நீதிமன்றத்திலும்,ஆதாரம் இல்லை என்று அதிகாரத்தால் ,பணத்தால், பேச்சு திறமையால், எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியும்?

மேலும்,கொள்கைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எப்படியும் பேசலாம் .கொள்கைக்கு அர்த்தம் தெரிந்தவன் அவன் வாழ்ந்து விட்டு போன பிறகும், இவன் இப்படித்தான் வாழ்ந்தான் என்று ஊர் பேசும் .அதுதான் கொள்கை.

ஆனால் ,கொள்ளையடித்து விட்டு, கொள்கையை பேசுபவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்? பதவி வெறிக்கு அலைந்து கொண்டு, அடியாள் வேலைக்கு தகுதியானவர்கள் எல்லாம் திமுகவில் தான் அமைச்சராக முடியும்.

மக்களுக்கு அரசியல் தெரியாமல் திமுக, அதிமுக என்று மாறி, மாறி வாக்களித்து ஏமாந்த ஒரு அரசியல் மாற்றம் தான், இன்று தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! அப்படி இருந்தும், மக்கள் மாறினாலும் இவர்கள் ஏன் மாறவில்லை? இவர்களால் மாற முடியாது. அதனால் தான்,

நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சிகள் இருக்கிறது. ஏன் ?அங்கு செல்லாமல், திமுக மட்டுமே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்? இதுதான் எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் கேள்வி?

மேலும், கடந்த ஐந்தாண்டு கால திமுகவின் ஆட்சியில்!திமுகவின் சாதனை என்ன? ஊழல் சாதனை, சட்டம் ஒழுங்கு சாதனை. போதைப் பொருள் சாதனை, அனைத்து துறைகளிலும் ஊழல் , அது மட்டுமல்ல, ஒவ்வொரு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல,

பார்ட்டி ஃபண்ட் என்று அனைத்து டெண்டர்களிலும், அனைத்து துறைகளிலும் வசூல் செய்த பல கோடி ஊழல் பணம், குறித்து வழக்கு விசாரணை வரவுள்ளது. இதனால்,திமுக தலைமையே, கலக்கத்தில் உள்ளது.

அப்படி ஒரு நேர்மையற்ற ஆட்சியை கொடுத்த திமுக இன்று மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் , மாற்று அரசியல் கட்சியினர், அதை மட்டும் ஏன்? தொடர்ந்து மீண்டும், மீண்டும் அதில் சேர்கிறார்கள்? ஏனென்றால், தற்போது அதிமுகவில் இருந்தும், மதிமுகவிலிருந்தும், ஏன் காங்கிரஸில் இருந்த செல்வப் பெருந்தகை, தற்போது தனது சகாக்களுடன் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி திமுகவை மக்கள் வெறுத்து ஒதுக்கினாலும், அந்த கட்சி தான் நாம் எவ்வளவு ஊழல் செய்தாலும், நாம் எவ்வளவு பிராடு செய்தாலும், எவ்வளவு கிரிமினல் வேலை செய்தாலும், நம்மை காப்பாற்ற கூடிய ஒரே கட்சி திமுக தான் ,என்று இவர்கள் எல்லாம் நம்பி இருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கைக்கு காரணம்? இவர்களுடைய அரசியலா? அல்லது தங்களை நேர்மையாக காட்டிக் கொள்ளும், இவர்களுடைய பேச்சுத்திறமையா? அல்லது இதற்கு பின்னால், இவர்களுடைய கார்ப்பரேட் ஊடகங்களின் திறமையா? இப்போது எல்லாமே அடிபட்டு போயிருக்கிறது, என்பது இவர்களுக்கு இன்னும் ஒருவேளை புரிந்ததோ ,புரியவில்லையோ, தெரியவில்லை.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் ‌‌இவர்களுடைய ஊடகப் பொய்களையும், இவர்களுடைய youtube பொய்களையும் ,இவர்களுடைய அரசியல் பொய்களையும், மக்கள் நம்ப மாட்டார்கள்.

திமுகவின் அரசியல் !இனி மக்களிடம் 0 சுழிக்கப் பட்டுள்ளது. மக்கள் அரசியல்வாதிகளின் பொய்களை இனி நம்ப மாட்டார்கள். செயல்பாடு சரியாக இல்லை என்றால், எந்த கட்சியினரையும் ,நம்ப மாட்டார்கள். இனி மக்கள்தான் எஜமானர்கள், என்பதை தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு, தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள்.

இதுவாவது, இவர்களுக்கு இந்த மாற்றத்திலிருந்து ,இந்த ஊழல்வாதிகளுக்கு புரிந்திருக்கிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *