

இல் விழாவில் பொதுமக்களும், ஆன்மீக பெருமக்களும், இதில் கலந்து கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனையும், சீனிவாச பெருமாளையும் ,வணங்கி வழிபட்டனர்.

மேலும்,அகில பாரதிய இந்து மகா சங்கத்தின் தலைவர் வேலா ஸ்ரீயின் மகனுக்கு பிறந்தநாள் விழாவும், ஸ்ரீ ராதை கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவத்துடன் கொண்டாடப்பட்டது.
தவிர, தற்போது பிறந்தநாள் விழா என்றால் !கேக் வெட்டி, ஆடம்பர தோரணங்கள் கட்டி, சினிமா பாட்டுக்களை போட்டு, டான்ஸ் ஆடி கொண்டாடுவார்கள். இதுதான் பிறந்தநாள் என்று தற்போதைய மக்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
ஆனால், இது ஒரு வித்தியாசமாக இருந்தது மட்டுமல்ல, உண்மையான தெய்வீக கலாச்சாரத்தோடு, குழந்தைகளுக்கு அதாவது வருங்கால தலைமுறைகளுக்கு, நம்முடைய இந்து மதத்தின் கலாச்சாரத்தை அவர்கள் மனதில் பதிய வைப்பது மட்டுமல்ல, தெய்வ அருளையும் ,நம் வாழ்க்கையோடு வாழப் பழகிக் கொள்கிறோம்.

அதாவது,தெய்வத்தின் அருளிருந்தால், எல்லா சந்தோஷமும், நிம்மதியும், சகல செல்வங்களும், கிடைக்கும். இது தான் தேவை.
ஆனால், தமிழ்நாட்டின் கலாச்சார சீர் அழிவு, தற்போது சினிமா ,போதை கலாச்சாரம், மற்றும் போலியான கௌரவங்கள்,இது எல்லாம் தமிழர்களின் பாரம்பரியத்தை அழித்து விட்டது.

இங்கு அவன் வாழ்கின்ற வாழ்க்கையும் ,ஒரு சிறப்பான வாழ்க்கையாக வாழ்ந்து, இந்த வாழ்க்கையை அவன் முடித்த பிறகும், அவனுக்காக தேவர்கள் உலகம் காத்திருக்கிறது. ஆனால், பணமே வாழ்க்கை, அதிகாரமே வாழ்க்கை, என்று வாழ்ந்து கொண்டு பேராசை பித்தர்கள் ஆக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், சமூகத்தில் போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,நாட்டில் மக்களையும், சட்டத்தையும் ஏமாற்றுவது போல், கடவுளை அவ்வளவு எளிதில் இவர்களால் ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றினால் இவர்கள்தான் ஏமாந்து இறைவன் அழிவற்றவன், அவன் கொடுக்கும் தண்டனை எப்போது என்று கூட தெரியாது.
அதனால், வாழும்போது மனிதன் எப்படி வாழ வேண்டும்? இறை அருளை தேடி, வாழுகின்ற மக்களின் சந்தோஷம் ,தெய்வீகத்தோடு இரண்டற கலந்தது. அதனால் தான், இந்து மதத்தில் மட்டும் தான் இத்தனை சிறப்புக்கள், விழாக்கள், இந்து மத பண்டிகைகள், செலவு செய்து, அதில் மனித வாழ்க்கையில் ஒரு சந்தோஷம், இந்த பண்டிகை நாட்கள் கொண்டாடும்போது ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.

எனவே,இப்படிப்பட்ட பெருமைமிகு இந்து மத கலாச்சாரம், இன்று அரசியலால் சீரழிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் சரி செய்ய இப்படிப்பட்ட அகில பாரதிய இந்து மகா சங்கத்தின் தலைவர் வேலா ஸ்ரீ முதலில் தன் குடும்பத்திலிருந்து, இந்த கலாச் சாரத்தை ஆரம்பித்து ,அதை சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில், ஸ்ரீ ராதை திருக்கல்யாண வைபவத்தில் யாகங்கள், பூஜைகள், அன்ன தானங்கள், நடத்தி, இந்து மத கலாச்சாரத்தின் பெருமையை சமூகத்திற்கு எடுத்துக்காட்டி இருக்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், அகில பாரதிய இந்து மகா சங்கத்தின் தலைவருமான வேலா ஸ்ரீ