
மக்கள் அதிகாரம் கடந்தாண்டே 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல் என்று செய்தியை வெளியிட்டது. அதையே தான் ஜோதிட ஆய்வாளர்களும், தெரிவிக்கின்றனர். மேலும் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும்? என்பது நிரூபிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.

மக்களிடம் அரசியல் கட்சி தலைவர்களின் செல்வாக்கு இல்லை. ஒவ்வொரு கட்சியும் எதை நம்பி இவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்கள் பிரச்சனைகளில் இருக்கும்போது யாரும் உதவ போராடவில்லை. கட்சிக்காரர்களும் மக்களுக்காக உதவ முன் வருவதில்லை.மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை விட அரசியலில் இவர்களின் எதிர்பார்ப்பு தான் அதிகரித்துள்ளது.

தவிர,பொதுநல சேவைகளில் ஈடுபடுவோர், எந்த அரசியல் கட்சியினரும், மனசாட்சியுடன் செயல்படவில்லை. இவர்கள் நம்பி இருப்பது, கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளை பெரும்பாலும் நம்பியிருக்கிறார்கள்.மைக்ல பேசிவிட்டு போனால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் நம்பி இருக்கும் அரசியல் எதிர்பார்ப்பு . தொலைக்காட்சி மைக்கைகுகளில் பேசுவதை நம்பி இவர்களுக்கு வாக்களிப்பார்களா? செயலில் எதுவுமே இல்லாமல், தொலைக்காட்சி மைக் பேச்சில் என்ன இருக்கும்? இதை மக்கள் சிந்திக்க மாட்டார்களா? இவர்களுடைய பேச்சுக்களை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இதைவிட ஒரு படி மேலே போய் திமுகவினர் பணத்தை நம்பி ,இலவசத்தை நம்பி, பேச்சுக்களை நம்பி, மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கை மட்டுமல்ல, ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறோம் என்ற ஒரு தைரியத்திலும் இருக்கிறார்கள். இவையெல்லாம் தவிடு போடி ஆகப் போகிறது. அதிகாரம் இருக்கிறது. மக்களை எப்படி கூட்டினால்? எப்படி கறி சோறு போட்டால்? எப்படி பணம் கொடுத்தால்? நமக்கு வாக்களிப்பார்கள்? இது எல்லாம் எப்படி சாத்தியமாக போகிறது?
எல்லோரும் பணம் கொடுக்கப் போகிறார்கள். எல்லோரும் கறி சோறு போட போகிறார்கள். அப்போது வாக்களிப்பவன் யாருக்கு வாக்களிப்பான்? இது ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு பதற்றமும், நெருக்கடியும் உள்ள தேர்தல் களம் ஆகத்தான் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் 2026 தேர்தல் இருக்கப்போகிறது.

நான் 2026 தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெறுவேன். நான் இத்தனை சீட்டுகளை ஜெயிப்பேன் என்று எவராலும் தைரியமாக இருக்க முடியாது .இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் மற்றும் கட்சியினரும், சந்திக்கப் போகிறார்கள். இதற்கு காரணம் மனசாட்சி இல்லாமல், ஊழல்! மனசாட்சி இல்லாமல் வன்முறை! மனசாட்சி இல்லாமல் ஆட்சி! இவை அத்தனைக்கும் அரசியல் கட்சியினர் விடை தெரிந்து கொள்வார்கள். மேலும்,பல பேர் கட்சியே வேண்டாம் என்று கூட இனிவரும் காலத்தில் ஓடிவிடுவார்கள்.

விஜய்க்கு வாக்களிப்பவர்களும் அவருடைய சினிமா ரசிகர்களும் இவருடைய அரசியல் என்ன என்பது தெரியாமல் தான் மாற்று அரசியல் என்று சிந்தித்து இருக்கிறார்கள். இந்த மாற்று அரசியலை தூய்மையான அரசியலை விஜய் ஆல் கொடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. இப்போது அவர்களுக்கு புரியவில்லை என்றாலும், பிற்காலத்தில் இந்த இளைய தலைமுறை நிச்சயம் இதை உணரும் என்று நம்புகிறேன்.மேலும், விஜய் அரசியல் அனுபவம் இல்லாதவர் . இதற்கு பலமுறை மக்கள் அதிகாரத்தில் மக்களிடம் உண்மையை விளக்கப்பட்டுள்ளது புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு புரியாது தவிர,

நிஜம் வேறு, நிழல் வேறு,சினிமாவில் வசனம் பேசி நடிப்பதெல்லாம் வாழ்க்கையில் நிஜமாகி விடாது. அவருடைய கற்பனை உலகம் வேறு ,நிஜ உலகம் வேறு. விஜய்க்கு இன்னும் அந்த அரசியல் தகுதி வரவில்லை. சினிமாவில் வசனம் சொல்லிக் கொடுத்து நடிப்பது போலவே, அரசியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய ஜாதக அமைப்பிலும், ஒரு சில ஜோதிடர்கள், இவர் அரசியலில் முதல்வராக வருவார் என்கிறார்கள். இவர் தலை கீழாக நின்றாலும், வரமாட்டார் என்கிறார்கள். சில பேர் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மாற்றி ஓட்டு போடலாம் என்று நினைக்கிறார்களே தவிர, விஜய்யின் அரசியல் தகுதி என்ன என்று நினைத்து ஓட்டு போடுபவர்கள் இல்லை.

இது தவிர, இவருக்கு கிறிஸ்தவர்கள் நமக்கு ஒரு பிரதிநிதி வேண்டும் என்று இவருக்கு வாக்களிக்கலாம். ஆனால், இவரால் நிச்சயம் முதலமைச்சராக ஆக முடியாது. அந்த சினிமா மோகம், மாயை எல்லாம் தமிழ்நாட்டில் எம்ஜிஆரோடு முடிந்து விட்டது. அதுவே மக்களுக்கு அரசியல் ஏமாற்றம் தான். சொல்லுவார்கள் எம் ஜி ஆர் மாஸ் லீடர் அதில் ஒன்றும், மாற்று கருத்து கிடையாது. ஆனால், அவருடைய கட்சிக்காரர்களே எம்ஜிஆர் நினைத்தது போல், நேர்மையான அரசியலை அவர்களால் கொடுக்க முடியவில்லை.
ஆனால், அந்த காலகட்டத்தில், அடிமட்ட தொண்டர்கள் மக்களுக்காக, சமூகத்திற்காக பாடுபட்டார்கள். ஆனால், மேல் மட்டத்தில், குறுக்கு வழியில் சம்பாதித்துக் கொண்டார்கள். அந்த காலமே அப்படி என்றால்! இந்த காலம் எப்படி இருக்கும்? அரசியலுக்கு வருபவர்கள், சிறிய சோம்பு வைத்துவிட்டு, அண்டாவை தூக்கிக் கொண்டு போகலாம் என்று தான் வருகிறார்கள்.சில பேர் அது கூட இல்லாமல் அண்டாவை தூக்கிக் கொண்டு போகலாம் என்று வருகிறார்கள்.இப்படிப்பட்ட அரசியல் கட்சியினர் நோக்கம் மக்களுக்கு புரிந்து விட்டது.

தற்போதைய அரசியல் கட்சிகளின் அரசியல் எங்கு போய் பேச முடியும்? என்றால் கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்களிடம் தான் இவர்களுடைய அரசியல் எடு படும். மற்றவர்கள் அதாவது நான் சொல்வது மனசாட்சி உள்ளவர்கள் ,இவர்களை நம்ப மாட்டார்கள். நம்பிக்கை என்பது எப்போதோ அரசியல் கட்சியினர் அழித்து விட்டார்கள். இவர்கள் குடும்பத்திற்கு சோத்து சேர்க்க கூட்டத்திற்கு ஓடுகிறார்கள் .கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக யாருமே ஓடவில்லை.

மேலும்,சீமான், திருமாவளவன் இன்னமும் அரசியல் தெரியாத மக்களை வைத்துக் கொண்டு, அரசியல் கதை, காலட்சேபம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, தன்னைப் பட்டியல் சமூகத்தின் போராளியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயம் ஆடு,மாடு மேய்ப்பவனிடம் தான் ,அரசியல் செய்ய முடியும். இப்படி அரசியல் என்பது எது? இவர்களுடைய அரசியல் என்ன? இவர்கள் எல்லாம் எதற்காக ஓடி வருகிறார்கள்? எதற்காக அலைகிறார்கள்? எதற்காக பேசுகிறார்கள்? இதையெல்லாம் படித்த சமூகம் சிந்திக்கிறது.

மேலும்,இன்று செல்போன் இவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து, உண்மையை மக்களிடம் எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் இதை புரிய வைக்கிறது. என்னதான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை நம்பி இவர்களுடைய அரசியல் மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தாலும், எங்களைப் போன்ற ஒரு சிறு தீக்குச்சி ஒரு பெரிய வைக்கோல் போரையே பத்த வைக்கும். அதாவது, தீயிட்டு கொளுத்தும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

அதனால் தான் ஸ்டாலின் இந்த பத்திரிகைகளை எல்லாம் அலட்சியம் செய்து, எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்காமல் ஐந்து ஆண்டு காலம் தள்ளிவிட்டார். ஒரு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் எது ?என்பது கூட தேர்வு செய்ய தகுதி இல்லாத ஒரு திமுக அரசின் செய்தித்துறை இயக்குனர் முதல் செயலாளர் வரை, இது பற்றி ஒரு புரிதல் இல்லாமல், தான் கார்ப்பரேட் பத்திரிகையின் நிர்வாகிகள் சொல்லக்கூடிய பேச்சை நம்பி இறுதிவரை இருந்து விட்டார்கள். ஆட்சி, அதிகாரம் போன பிறகு, இவர்கள் நிச்சயம் சிந்திப்பார்கள்.

தேர்தல் களத்தில் எங்களைப் போன்ற பல பத்திரிகைகள் நிச்சயம் திமுகவின் அரசியல் பற்றி, மக்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். சொல்லவில்லை என்றால் அவர்கள் பத்திரிகைகளுக்கு தகுதியானவர்கள் இல்லை. அல்லது பத்திரிகையாளர் என்ற தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள். மேலும், இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று சில ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். இதில், பெரும்பான்மை கிடைக்குமா? என்பது ஒரு சந்தேகத்தில் தான் எனக்கும் இருக்கிறது. ஏனென்றால், இந்த தேர்தல் கணிக்க முடியாத தேர்தல் ஆகத்தான் இருக்கிறது.

ஒரு பக்கம் இந்த மனித கணக்கு, மற்றும் ஜோதிட கணக்கு இது எல்லாவற்றையும் மீறி இந்த பிரபஞ்ச சக்தி என்ன தீர்மானிக்க போகிறதோ!, அதுதான் இந்த தேர்தலின் வெற்றி. அது ஒரு நொடியில் மக்களின் மனநிலையை மாற்றிவிடும். அந்த சக்தி இந்த பிரபஞ்ச சக்தி இடம் தான் இருக்கிறது. அதுதான் தெய்வத்தின் ஆற்றல். இனி அரசியல் களம் என்பது அரசியல் கட்சியினருக்கு, பெரிய போராட்டம் தான்.
இதில் எந்தெந்த கட்சிகள் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்கள்? அடித்துக் கொள்ளப் போகிறார்கள்? பேச்சால் அசிங்கமாக திட்டிக் கொள்ளப் போகிறார்கள்? இது எல்லாம் இந்த 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் எதிர்கொள்வார்கள்.