முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி கல்வித் துறையில் உலக தரத்திற்கு இணையாக மாற்றம் கொண்டு வர முதல்வர் விஜய்க்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் .

மக்கள் அதிகாரம் இணைய தள பத்திரிக்கையில் ,இதை வலியுறுத்தி தான் ,தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரத்தில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளி யிட்டிருந்தோம். அதாவது, செய்தித் துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தனியார் பள்ளி நிறுவனங்களின் அங்கீகாரம் புதுப்பிப்பதற்கு ஒரு பைசா செலவில்லாமல் நாங்கள் செய்து கொடுத்துள்ளோம் .இதில் யாரும் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். அப்போது தனியார் பள்ளிகளை […]

Continue Reading

வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும், உருவாக்கியவர்கள்! உருவாக காரணமானவர்கள்! இன்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் ஏறி நிற்கும் ராமதாஸ் குடும்பம் மட்டுமே! அரசியலில் பிழைக்க வழி தேடி கொண்டார்களா?

ஏமாந்த சமுதாயத்தின் மேல் ஏறி நிற்கும் டாக்டர் ராமதாஸ் & கோ . 40 ஆண்டுகளுக்கு முன் ,வன்னியர் சங்கம் கிராமங்களில் உருவானது. அது வன்னியர்களிடையே மிகுந்த தாக்கத்தையும் ,எழுச்சியும் ஏற்படுத்தி இருந்தது. அப்போதும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு தான், இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ ,அந்த நோக்கத்தை முதலில் ஆரம்பித்தவர்கள், பேசிக்கொண்டு இருந்தார்கள். பிறகு ,இடையில் வந்து சொருகிய டாக்டர் ராமதாஸ், பொறுப்பேற்ற பிறகு சங்கம் கட்சியாக மாறுகிறது. அப்போது […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை நிறுத்தி மதுராந்தக பகுதியில் விமான நிலையம் அமைக்க தவெக அரசின் தகவலுக்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி .

ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான் அந்த விவசாயத்தை அழித்துவிட்டு நீர்நிலைகளை அழித்துவிட்டு உருவாக்கக்கூடிய விமான நிலையம் மக்களுக்கு தேவையற்றது . அது யாருக்கு தேவை என்றால் பணக்காரர்களுக்கு தேவை சாமானிய பாமர மக்களுக்கு தேவையற்றது. விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இருக்கலாம் ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ,அந்த பொருளாதார வளர்ச்சி தேவையற்றது. திமுக ஆட்சியில் எது எல்லாம் மக்களுக்கு விரோதமானதோ ,அதை தான் கொண்டு வந்தார்கள். இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் […]

Continue Reading

கடந்த திமுக ஆட்சியில்! பல லட்சம் கோடி மதிப்புள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்ட அறப்போர் இயக்கத்தின் வெற்றி! மனித குல வாழ்வின் வெற்றி! அதுவாவது சேகர் பாபுவுக்கு தெரியுமா ?

திமுக ஆட்சியில் தங்களிடம் அதிகாரம் இருக்கிறது எதை வேண்டுமானாலும் மடக்கிக் கொள்ளலாம் எதை வேண்டுமானாலும் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் இதுதான் திமுக ஆட்சியாக இருந்தது. இந்த சதுப்பு நிலங்கள் சதுப்புநில காடுகள் எதற்கு என்று கூட தெரியாத இந்த முட்டாள்கள் பள்ளிக்கரணையில் உள்ள இந்த சதுப்பு நில 2000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதை டாக்குமெண்ட் செய்து அதற்கு அப்ரூவல் வழங்கி சுற்றுச்சூழல் என். ஓ.சி வாங்கி வீடுகள் கட்ட இந்த சதுப்பு நிலம் என்ற ஈர […]

Continue Reading

கடந்த திமுகவின் ஆட்சி ! மிக மோசமான ஆட்சி நடத்தி விட்டு,இனி திமுக சொல்லும் பொய்களை மக்கள் நம்புவார்களா ? – மக்கள் அதிகாரம் .

கடந்த 2026 தேர்தலில் மக்களுக்கு ஏற்பட்ட திமுக ஆட்சியின் வெறுப்பு அரசியலில்! திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதியதாக வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு மக்கள் வாக்களித்து விட்டார்கள். இது மக்கள் அளித்த தீர்ப்பு ,மாற்றத்திற்கான அரசியல். மேலும், விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காததால் ,திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை வைத்து ஆட்சி அமைத்து விட்டார். இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகள் 100% அவரால் நிறைவேற்ற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி குறி தான். காரணம் ,தமிழ்நாட்டின் […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் புதிதாக பொறுப் பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தை இனி குறை சொல்ல முடியுமா? – தமிழகத்தின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு .

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக கட்சி கழகம் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை என்ற வெளிப்படையாக அரசு தணிக்கை செய்த கணக்கு வழக்குகளை வெளியிட்டுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் ,சேர்த்து மாநிலத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு வரும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு (ரூ.67,050 கோடி) வட்டி கட்டவே செலவிடப்படுகிறது. தமிழக அரசின் வருமானத்தில் 66 சதவீதம் செலவுக்கும், அரசு அதிகாரிகளின் சம்பளத்திற்கும் செலவாகி விடுகிறது. மீதி 34 சதவீதம் […]

Continue Reading

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைக்கு லைசன்ஸ் வாங்கும் போது ,லைசன்ஸ் கொடுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் அவருடைய கல்வித் தகுதி என்ன? அவருடைய முதலீடு என்ன? அவர் எப்படிப்பட்ட குடோன் வைத்திருக்கிறார்? அந்த குடோன் பாதுகாக்கப் பட்ட குடோனா? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எதனால், ,இந்த விபத்து ஏற்படுகிறது? என்பது குறித்து எதுவும் அவர்களிடம் ஆய்வு செய்வதில்லை. மேலும், ஒரு பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர் அரை குறை வேலை தெரிந்து கொண்டவுடன், அவர் உடனே […]

Continue Reading

பத்திரிகையாளர்கள்! தலைமைச் செயலகத்திற்குள் செல்வதற்கு, காவல்துறை! செக்யூரிட்டிகளின் கெடு பிடிகள் மோசமாக நடந்து கொள்வது ஏன்? இதை செய்தித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

தலைமைச் செயலகத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்று வருவது காவல்துறையின் செக்யூரிட்டிகளின் கெடு பிடிகள் மோசமாக இருப்பது ஏன்? மேலும், இது பத்திரிக்கை துறையை கேவலப்படுத்துவதாக இருக்கிறது. தவிர ,கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் மீண்டும் தொடருகிறதா ? தலைமைச் செயலகம் மக்களுக்காக இருக்கிறதா? இல்லை, ஆட்சியாளர்களுக்கும், , அதிகாரிகளுக்கும் மட்டுமே, தலைமைச் செயலகம் இருக்கிறதா? மேலும்,மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை சொல்வதற்கு தான் தலைமைச் செயலகம். அதேபோல் பத்திரிகையாளர்கள் தங்களுடைய பத்திரிக்கை துறை சம்பந்தமான கோரிக்கைகளை அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், தெரிவிக்க […]

Continue Reading

ராகவா லாரன்ஸ் நடிகராக இருந்தாலும், சமூக சேவை செய்பவர், இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆசிரியர்.

தமிழ்நாட்டில் அரசியலை கேவலப்படுத்தியவர்கள் ,ரவுடிகளும், சுயநலவாதிகளும் ,ஊழல்வாதிகளும், அரசியல் கட்சி என்ற ஒரு லேபில் வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்க வந்த கூட்டமாகத் தான் அவர்களைப் பார்க்கிறேன். மேலும்,அரசியலுக்கு அர்த்தம் தெரியாமல் வந்து விட்டு, அரசியல் தெரியாதவர்களிடம் பணம் கொடுத்து கொண்டு ஜெயித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்தி , அவருடைய ஊழல்களையும், அராஜகங்களையும் நியாயப்படுத்தி, தமிழ்நாட்டின் அரசியலை மிக கேவலமாக கொண்டு சென்றதில், இந்த கார்ப்பரேட் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு […]

Continue Reading

விரைவில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் தேர்தல் அறிக்கையில் ! – தமிழக முதல்வர் விஜய்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் அறிக்கையில் சொன்ன வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூபாய் 4000 ;டிப்ளமா படித்தவர்களுக்கு ரூபாய் 2500 ;இவர்கள் 29 வயதை கடந்த பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு அரசின் உதவித்தொகை விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ,அதற்கு பட்டதாரிகள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் . அது சம்பந்தமான பதிவு ஐடி கார்டு வைத்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading