நாட்டில் பல சட்டங்கள் திருத்த வேண்டி உள்ளது ‌‌. அந்த சட்டங்கள் திருத்தாத வரை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு அரசியல்! போராட்டம் தான், என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் ,அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான், அது பொருந்தும். அந்த காலம் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்த காலம், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த காலம், இப்போது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், சுயநலமாக தான் மட்டுமே வாழ்வது எப்படி? அரசியலில், அரசியல் கட்சிகளை பயன்படுத்தி, எப்படி கொள்ளையடிப்பது? அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், மூலம் மக்களிடம் நியாயப்படுத்துவது எப்படி? மேலும்,அது சட்டப்படி சம்பாதித்தது என்று சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது, பல […]

Continue Reading

இந்தியாவுக்கு எத்தனையோ பிரதமர்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால், மோடி இடத்தை யாராவது பிடிக்க முடியுமா ?

இந்தியாவுக்கு வந்த பிரதமர்களில் மோடி இடத்தை யாரும் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர். அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான், மற்றும் பல முஸ்லிம் நாடுகளின் அன்னிய நாட்டு தலையீடுகளை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் மோடி. அவருடைய அரசியல் சாணக்கியத்தனத்தில் ஐந்து சதவீதம் கூட ராகுல் காந்தி இருக்க மாட்டார். ஏன்? காங்கிரஸ் கட்சியிலே, ஒருவர் கூட கிடையாது. அந்த அளவுக்கு இந்த நாட்டின் மீது, இந்த தேசத்தின் மீது பற்று வைத்துள்ளவர் […]

Continue Reading

புதிய தலைமைச் செயலகம் தேவை தானா? – மக்கள் அதிகாரம் .

புதிய தலைமைச் செயலகத்திற்கு 1200 கோடி செலவு செய்வது கட்டுவது தேவைதானா? என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில், கடந்த மாதத்தில் வெளியிட்ட செய்தி. மேலும்,தற்போது அதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .ஒரு பக்கம் மீனவர்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியாக இருக்கின்றனர். அது குறித்த உளவுத்துறை ரிப்போர்ட்டும், முதல் விஜய்க்கு சென்றுள்ளது. இன்னொரு பக்கம், சீமான் திமுக அதிமுக உள்ளிட்ட பல அரசியல் எதிர் கட்சிகள் கூட்டாக சேர்ந்து மீனவர்களுடன் கைகோர்த்துக் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை !

மக்கள் அதிகாரம் புதிய பொலிவுடன் டிஜிட்டல் மீடியாவாக இணையதளத்தில் வரும் திங்கள் முதல் வெளிவர உள்ளது. இதற்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தவிர ,தமிழக முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ,நிருபர்கள் தேவை. தகுதி உள்ள நிருபர்கள் தொடர்பு கொள்ளவும். மேலும், நிருபர்கள் சமூக ஆர்வலர்கலாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், மக்கள் அதிகாரம் சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய நிருபர்கள் தேவை. […]

Continue Reading

இயற்கையோடு! வாழ்ந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? இயற்கையை அழித்து வாழ்ந்தவன் எப்படி வாழ்கிறான்?

மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. இயற்கையோடு வாழ்ந்த, மனிதன் சந்தோஷமாக வாழ்ந்தான் . இயற்கையின் கொடூர தாக்குதல்கள் எதுவும் அவன் சந்திக்கவில்லை. அது பற்றிய பயமும் இல்லை . இப்போது வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ,உள்ளுக்குள் பயம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர,அவனுக்கு உணவும் இயற்கையாக இருந்தது. இப்போது அந்த இயற்கை உணவு என்பது மாறி நஞ்சு உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். குடிநீர் முதல் […]

Continue Reading

நாட்டில் உழைப்பவன் தன்னுடைய சொந்த நிலத்தை கூட அனுபவிக்க முடியாமல், போராடுகிறான். உழைக்காமல் சட்டத்தை ஏமாற்றி பிழைக்க! அரசியல் கட்சியின் பெயரை சொல்லி போராடுவது! நாட்டில் எப்படிப்பட்ட அரசியல்? அது பொதுநல அரசியலா ?

மக்கள் இன்று பல ஆயிரக்கணக்கான சொந்த நிலப் பிரச்சனையில், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அத்தனைக்கும் காரணம், அரசியல் பின்னணி கொண்டவர்களால் ஏற்படுகின்ற மிகப் பெரிய பிரச்சனை! மேலும் ,இன்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கோர்ட் ,போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், என்று ஏறி ,இறங்கி கொண்டிருக்கிறார்கள். தவிர,நேற்று முன்தினம் ஒரு பெரியவர் ஒருவர் தலைமைச் செயலகம் சென்று புகார் மனு அளித்துவிட்டு ,பஸ்ஸில் வரும்போது என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார். […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள்! காங்கிரஸ் கட்சி! நாட்டின் தேச விரோத கட்சியா? அரசியல் வரலாறு மறைக்க முடியுமா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அரசியலை படிக்கும் இளைஞர்களும், பொதுமக்களும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் ! காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் சுதந்திரத்திற்காக போராடியது உண்மை தான். அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த தியாகிகளின் கட்சி அது . அதற்குப் பிறகு தான் இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சி உடைத்து உருவாக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ் என்ற கட்சி. ஆனால், இதையும் காங்கிரஸ் கட்சி என்று இன்றும் ,அரசியல் தெரியாதவர்கள், அரசியல் வரலாறு தெரியாதவர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சுதந்திரத்திற்கு முன் வரலாற்றில் […]

Continue Reading

மகான்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று . அவர்கள் வாழும் காலத்திலும் சரி! ஜீவசமாதி அடைந்த நிலையிலும் சரி !அவர்களுக்கு இறப்பே கிடையாது. சரீரம் இன்றி இன்றும் வாழ்கிறார்களா?

இந்த உலகத்தை வழிநடத்துவது மகான்களும், சித்தர்களும் வழி நடத்துகிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் !சக்தி !இயக்கம் !அனைத்தும் மகான்களும், சித்தர்களும்,கிரகங்களும், பூமியை ஆள்கிறது. அதனால்தான் இன்றைய இயற்கையின் பேரிடர் எப்படி எல்லாம் மனித வாழ்க்கைக்கு எதிராக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா? இன்றைய மனித வாழ்க்கை போலியான வாழ்க்கையில் சந்தோஷம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பதவி அதிகாரம் மனித வாழ்க்கையின் ஆணவமாக மாறிவிட்டது. பல கோடிகள் உல்லாச வாழ்க்கை சொத்து சுகங்கள் எல்லாமே தவறான […]

Continue Reading

மனசாட்சி இல்லாத திமுக மந்திரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே எப்படியும் பேசுவது அரசியல் என்று இவர்களுக்கு கைவந்த கலை – முதல்வர் விஜய்.

திமுக இன்று நேற்று அல்ல ,எப்போது அண்ணாதுரை மரணம் எழுதினாரோ அதோட உண்மையான திமுகவின் நோக்கம் போய்விட்டது .இது யாருக்கு தெரியும் என்றால்? ஆரம்ப காலத்தில் திமுகவின் கட்சியினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மேலும், இது கருணாநிதி திமுக !இதுவும் எம்ஜிஆர் ,என்ற ஒரு உன்னதமான தலைவர் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த திமுக ! இந்த உண்மையின் வரலாறு ,உண்மையான திமுக அரசியல் ,கட்சியினருக்கு இந்த உண்மை தெரியும். மேலும்,எப்போது அண்ணாதுரை இறந்து விட்டாரோ, இந்த கட்சியை […]

Continue Reading

60 வருட பாரம்பரியத்தை உடைத்து அதிமுக, திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த வாய்ப்பு இறைவன் அளித்த வாய்ப்பு – இரு அரசியல் கட்சியினருக்கு இது புரியுமா? இயற்கையை அழித்த பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை எப்போது? – மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை […]

Continue Reading