மக்களின் உயிரை வாழ வைப்பது உணவு !இந்த உணவு தரமானதாக கொடுப்பது அரசின் கடமை அல்லவா? ஐந்தாண்டு காலத்தில்! திமுக ஆட்சியில் ,இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தது உண்டா?

திமுக ஆட்சி ,முடியும் தருவாயில் மக்களுக்கு எது முக்கியம்? என்பது கூட தெரியாமல் ,ஆட்சி நடத்தி விட்டார்கள். ஒரு மனிதனுக்கு உணவு தான் முதல் தேவை .அடுத்தது உடை ,இருக்க இருப்பிடம், இதன் பிறகு தான் மற்றவை .அவ்வளவு முக்கியமான ஒரு உணவு பொருளை மக்களுக்கு எப்படி தரமானதாக தர வேண்டும்? என்பதை திமுக ஆட்சியில் மறந்து விட்டார்கள்.மேலும், சாமானிய ஏழை, நடுத்தர மக்கள் சாப்பிடக்கூடிய ஓட்டல்கள் முதல் பணக்காரர்கள் சாப்பிடக்கூடிய ஹோட்டல்கள் வரை இன்று உணவு […]

Continue Reading

காவல் துறைக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை செய்வது தான் காவல் துறையின் வேலையா ? இதில்,சட்டம் முக்கியமா? அதிகாரம் முக்கியமா?

காவல்துறைக்குள் இருக்கின்ற கருப்பு சட்டங்கள் அகற்றப்படாத வரை சமான்ய மக்களுக்கு ஞாயம் கிடைக்காது. அந்த கருப்பு சட்டங்களால் தான் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது என்ன? சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்கின்ற வேலையா? இவர்கள் எஃப் .ஐ .ஆர், ல் எழுதிக் கொள்வது தான் சட்டமா ? இதில் நியாயமும் இருக்கலாம். அநியாயமும் இருக்கலாம். சட்டம் என்பது ஒரு கத்தி போல் உள்ளது. அந்தக் கத்தி நல்லதுக்கும் பயன்படும் .கெட்டதுக்கும் பயன்படும். அதை பயன்படுத்தக்கூடிய நபரின் கையில் […]

Continue Reading

திமுகவை! தமிழ் கலாச்சாரத்தின் எதிரி என்றார் – பிரதமர் நரேந்திர மோடி .

தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், பேசிக்கொண்டு 50 ஆண்டுகாலம் அரசியல் வரலாறு படைத்த திமுக ஆட்சியை பார்த்து, நேற்று நடைபெற்ற என். டி ஏ கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி இதை தெரிவித்துள்ளார். அவர் சொன்னது உண்மை நிரூபிக்கும் வகையில் தான் ,திமுக ஆட்சியில் நடந்தேறியுள்ளது. அது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். அதாவது திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றுவது தமிழ் மக்களின் தெய்வமான முருகப் பெருமானுக்கு தடை விதித்து .அதற்கு பல காரணங்களை சொல்லி நீதிமன்றம் […]

Continue Reading

விஜய்யிடம் சிபிஐ விசாரணை! மற்றும் அரசியல் நகர்வுகள் இடி ஆப்ப சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டரா?

கரூர் விவகாரத்தில் விஜய் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ இவரை விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த விசாரணையே விஜய்க்கு எதிராக விரும்புகிற சூழ்நிலையை தான் அரசியல் நகர்வுகள் தெரிய வருகிறது. மேலும், சிபிஐ கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்குள்,அதன் அர்த்தங்கள், விசாரணை வளையத்திற்குள் விஜயை கொண்டு வதற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. அதாவது, சிபிஐ விசாரணை என்பது விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் காவல்துறை சொன்ன விதிகளை […]

Continue Reading

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் !வெளியிடுகின்ற அறிக்கைக்கு என்ன உத்திரவாதம்? தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் இது பற்றி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா ?-வாக்காளர்கள்.

நாட்டில் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக அரசியல் கட்சிகள் , தற்போது போட்டி ,போட்டு இலவசங்களையும்,செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் அறிக்கையாக கொடுத்து விடுகிறார்கள். இதை நம்பி வாக்களிக்கும் அரசு ஊழியர்கள் ,பொதுமக்கள், தனியார் கம்பெனி நிறுவனங்கள் , வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள்,இளைஞர்கள், விவசாயிகள் ,பத்திரிகையாளர்கள் இப்படி பல்வேறு தரப்பிலிருந்து இவர்கள் சொல்லும் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்து, அது செயல்படுத்த முடியாமல் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி விட்டு போய்விடுகிறார்கள். இப்படி கொடுக்கின்ற தேர்தல் வாக்குறுதிகள், பொய்யான […]

Continue Reading

ஊழல்வாதிகளின் சொத்துக்கள் உடனடி பறிமுதல் ! மட்டுமே, இதற்கு தீர்வு – மத்திய அரசு கொண்டு வருமா?

அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை உடனடி பறிமுதல் தேவை . ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் ஊழல் செய்த சொத்துக்களை, அவருடைய வாக்குமூலம் ,சட்டமூலம் எதுவுமே கேட்கத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ,அவர் வேண்டுமானால், நான் ஊழல்வாதி இல்லை என்பதை நீதிமன்றத்தில் கொண்டு, போய் வழக்காடி பிறகு அந்த சொத்துக்களை மீட்டுக் கொள்ளட்டும். ஆனால், அரசியலில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வருட கணக்கில் காலதாமதம் ஆகிறது. மேலும், […]

Continue Reading

கேரளாவில் புதிய மாநில ஆதார் அட்டை வைத்து, illegal குடியுரிமைகளை கேரளா அரசு தடுக்க முடியுமா ? – புதிய சட்டம்.

கேரளா இந்தியாவுக்குள் தான் இருக்கிறது என்பதை முதல்வர் பினராய் விஜயன் மறந்துவிட்டாரா? மேலும்,நீங்கள் மாநிலத்தில் எந்த ஆதார அட்டையை கொண்டு வந்தாலும், மத்தியில் ஆளுகின்ற அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறதோ ,அதை நடைமுறைப்படுத்தி தான் ஆக வேண்டும். நாங்கள் குடியுரிமைகளை வெளியேற்ற மாட்டோம். ஒரு நாட்டின் பிரச்சனை இது. கேரளாவின் பிரச்சனை அல்ல, இந்தியாவின் பிரச்சனை. இது கூட தெரியாமல், எப்படி முதல்வராக நீங்கள் எல்லாம் பதவிக்கு வருகிறீர்கள்? என்பது புரியவில்லை. மேலும், ஓட்டுக்காக எங்கிருந்தோ […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால்! அரசு ஊழியர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வரப்படுமா? கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும். – எடப்பாடி பழனிசாமி .

எம்ஜிஆர் பிறந்த நாள் ( 109) ஆன இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 2000 ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தவிர, நகர பஸ்கலில் ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சேலத்தில் பொங்கல் விழா பண்டிகை பாரம்பரிய முறைப்படி […]

Continue Reading

நாட்டில் 75 சதவீதத்துக்கு மேல், இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும், youtube நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் எத வேண்டும், ஆனாலும் பேசி, அரசியல்வாதி ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன? மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா? இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், […]

Continue Reading