முருகன் யாருக்காவது எதிரியா?முருகனுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?மதவாதத்தை முருகன் விரட்டி அடிப்பார் திருமாவளவன். மதவாதம் என்றால் என்ன?

மதவாதத்திற்கு அர்த்தம் தெரியாமல், அரசியலுக்காக மதவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவது சரியா? தவறா? என்பது திருமாவளவனுக்கு தெரியுமா? மதம் என்பது என்னுடைய கடவுள் வழிபாட்டு முறைதான் மதம். இதில் மதவாதம் மதம் பிடித்தவர்களின் வாதமா? அல்லது அரசியலில் மதத்தை கொண்டு வருவது ஏன்? பிஜேபி அரசியலில் மதத்தை கொண்டு வருகிறதா? என்னுடைய உரிமை, என்னுடைய கடவுள் வழிபாடு,வழிபாட்டு முறை, எது?என்பது மதம் விளக்குகிறது.இதில் அரசியலுக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை மதத்திற்கும்,அரசியலுக்கும் அர்த்தம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களா […]

Continue Reading

காஷ்மீரில் கேபிள் ரயில் பாலத்தை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து, வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

473 மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இது புயல், காற்று நில அதிர்வு,போன்ற இயற்கை சம்பவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வலிமையானதாக அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த பாலத்தின் வழியே செல்லும் வந்தே பாரத் தரையிலே பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இந்த ரயில்வே துறையில் இப் பணியினை மேற்கொண்ட பொறியாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவர்களை பாராட்டி,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading

தமிழக அரசு! கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ள அரசாணை.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய்த்துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித்தகுதியில், எஸ்.எஸ்.எல்.சியில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்.எஸ்.எல்.சியில் […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?

பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் நீர்த்து போகுமா ? அல்லது திமுக மீது நடவடிக்கை பாயுமா? – தமிழக மக்கள்.

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு செய்து அதை நீர்த்துப் போக திமுகவின் அரசியல், சாணக்கியத்தனம் என்று சொல்வதா? அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து காப்பாற்ற வழி தேடிக் கொண்டதா? அல்லது அதானி போன்ற ஆட்கள் மூலம் மோடியை சமாதானம் செய்து விட்டார்களா?இப்படியெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் பேச்சு. இருப்பினும்,எது எப்படியோ, மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? – தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால், கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,தாலுகா அலுவலகத்திலும்,அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக இருப்பதில்லை. அதற்கு பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது. என்ன விஷயம் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்றம்,ஒருவருடைய சொத்தில் இன்னொருவர் தள்ளி கல்லை போட்டு […]

Continue Reading

இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயர்ந்து இருந்தாலும், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து இருப்பதாக ஆளுநரின் அதிர்ச்சி தகவல்.

இந்தியாவின் தற்போதைய சிந்துர் ஆபரேஷன் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு, திறமை,ராணுவத்தின் வலிமை ,,உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வியின் தரம்,குறைந்திருப்பதால், இங்கு டாக்டர் பட்டம் பெற்று வெளியில் வருபவர்களின் கல்வியின் தரம் தகுதி குறைந்து இருப்பதாக டி.நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இதை தெரிவித்துள்ளார். தவிர ஆண்டுக்கு 7000 பேர் பிஹெச்டி பேர் பட்டம் பெற்று வெளியில் வருகிறார்கள். அவர்களின் பி எச் டி பட்டம், கல்வி தகுதி […]

Continue Reading

சோசியல் மீடியாக்களில்! பத்திரிக்கை போர்வையில் பொய் செய்திகள்!மக்களை ஏமாற்றும் கூட்டம் – பொதுமக்கள் உஷார்.

இது என்ன பத்திரிக்கையா? இல்ல அல்லகை எடுப்பா? நிதி எப்படி வந்தா என்ன? மாநிலங்களை மிரட்டுறாங்க? போறாங்க, வராங்க? ஐயா சத்யராஜ் இங்க எல்லாம் கஷ்டப்பட்டு, ஏழை எளிய நடுத்தர மக்கள் இந்த கல்வியால் மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. (மோடி! ரகசிய கூட்டம் போட்டு, நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் என்ன? ) மேலும் புதிய கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அதில் இருக்கிறது. அதையெல்லாம் இந்த மாணவ சமுதாயம் படித்தால் தான் […]

Continue Reading

மத்திய அரசு வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு வைக்கும் செக்! வாட்ஸ் ஆப் சாட் சட்டத்திற்கு ஏன்? எதிர்க்கட்சிகள் அலறுகின்றன?

நாட்டில் வரி ஏய்ப்பு என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் செயல். இந்த வரிகளைக் கொண்டுதான் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அப்படிப்பட்ட வரி ஏய்ப்பு சட்டத்திற்கு எதற்க்கு கட்சிகள் அலறுகின்றன? தவிர, அவர்களுடைய சமூக ஊடகங்களும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன? சமீபத்தில் இந்த whatsapp சாட் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 200 கோடி வசூல் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இதில் என்ன தவறு? ஒருவர் […]

Continue Reading