தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சமூகநலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ‌.

நாட்டில் பத்திரிக்கை துறை முக்கியமான துறையாக இருந்தாலும் இன்று வரை மத்திய, மாநில அரசு அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறை! காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டிய மத்திய மாநில ,அரசின் செய்தி துறை சமூக நலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், கொடுக்க வேண்டும். அதாவது சர்குலேஷன் சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான ஒரு சட்டம். சர்குலேஷனில் எவ்வளவு விற்பனை […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனைக்காக பொதுக்கூட்டத்தில் பேசிய, உதயநிதி திரிஷாவை வைத்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு – கைது செய்ய நடவடிக்கை .

பொதுக்கூட்டங்களில் பேசும்போது அரசியல் கட்சியினருக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை. அரசியல் சார்ந்த விமர்சனங்கள் ,அது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசுவது ,அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. மேலும், உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசிய பேச்சில் திமுகவை கைது செய்வதில் தான் முதல்வர் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்று பேசிய உதயநிதி, கூட்டத்தில் அவர்களுடைய கட்சியினர் திரிஷா த்ரிஷா என்று கத்துவது, கேட்கிறது. அப்போது உதயநிதி […]

Continue Reading

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்! தமிழகத்திற்கு கபினி அணையிலிருந்து நீர் திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .

கர்நாடக கபினி அணையிலிருந்து வெளிவரும் உபரி நீர், தமிழகத்திற்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று மாலை அல்லது இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வெளியேற்றியுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை தான், கர்நாடக அரசு நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நியாயமான முடிவை எடுத்து நீர் மேலாண்மை […]

Continue Reading

மத சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா என்பது தவறான முடிவு. இதை மறுபரிசலனை செய்வாரா? – தமிழக முதல்வர் விஜய் .

இந்து கோயில் சொத்துக்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மிராசுதார்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள், எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்கள் .இந்த சொத்துக்களை அவர்களுடைய பரம்பரை வம்ச வழிகள் கூட அனுபவிக்க முடியாது . ஆனால்,அந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு ,அந்த கோயிலுக்கு பராமரிப்பது, அதற்கான செலவுகளை பார்த்துக் கொள்வது, இதற்காக அவர்கள் எழுதி வைத்துவிட்டு போனார்கள் . ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 3000 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் பட்டா போட்டு தருகிறேன் […]

Continue Reading

இவிஎம் மெஷின் கொளத்தூரில் தோற்ற போது தான், அது வேலை செய்யவில்லையா? ஜெயித்தபோது வேலை செய்கிறதா?மக்களை பேசியே அதி மேதாவிகள் போல் முட்டாள் ஆக்குவதில் திமுகவுக்கு கைவந்த கலையா?

திமுக மற்றும் அதன் ஊடகங்கள், யூடியூப் ஊடக வாய்கள் ,அதிமேதாவிகள் போல் பேசிக்கொண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று கனவு காணக் கூடாது . நீங்கள் இன்னும் அதிகமான பிராடு என்றுதான் மக்கள் உங்களை நினைக்கத் தோன்றும். மேலும் , நீங்கள் என்னதான் நாங்கள் யோக்கியன், எங்களை விட திறமைசாலிகள் இல்லை, நியாயமானவர்கள் என்று நீங்களே சொல்லிக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது. இதை வைத்து அரசியல் செய்தால், நிச்சயம் மானங்கெட்டு, இன்னும் இருக்கிற கொஞ்சநஞ்சம் […]

Continue Reading

நாட்டில் ஊழலுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வராத வரை ஊழல்வாதிகளின் பின்னால் இயங்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போன்ற மாணவர் அமைப்புகளை கட்டுப்படுத்த அரசு போராடுவது – பொதுமக்கள் வேதனை.

மும்பையில் உள்ள டாட்டா சமூக அறிவியல் கழகத்தின் கல்லூரி 86 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை வரவேற்றுள்ளனர். ஆனால், அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கு இவர் வந்தால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததால், அது திடீரென்று கால வரை இன்றி தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மாணவர்களுக்கும் நேற்று மின்னஞ்சல் மூலமாக செய்திகள் கல்லூரி சார்பாக அனுப்பி […]

Continue Reading

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்ந்து, இரு மாநிலங்கள் இடையே ,இது அரசியலாக்கும் நோக்கம் என்ன? காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை, இரு மாநிலங்களும் மதிக்கிறார்களா?

காவிரி நதி நீர் பிரச்சனை கர்நாடகாவும், தமிழ்நாடும் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ,அவ்வப்பது செய்து வருவது, காவிரி நதிநீர் மேலாண்மை சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது முக்கிய காரணம் . மேலும்,அதே போல் கர்நாடக அரசு காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை மதிக்காமல்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடகா மதிக்காமல், செயல்படுவது இந்தியாவின் சட்டத்திற்கு விடப்படும் சவால்கள். இது இரண்டுமே தவறான கருத்துக்களை, அரசியல் மோதலாக தான் இருந்து வருகிறது. இதில் டெல்டா விவசாயிகள் ஒரு பக்கம் […]

Continue Reading

கரூரில் விஜய் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்த போதே தவறான முடிவு – மக்கள் அதிகாரம் மீடியா .

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஒருவருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க உத்தரவு வழங்கி அதற்கான அரசாணையும் பிறப்பித்தார். அப்போதே எமது பத்திரிகை செய்தியில் இது தவறான முடிவு என்று செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும்,இப்பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்று கூட தெரிவித்து இருந்தோம்.தவிர, தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசாணையை ரத்து செய்துள்ளது. இதில் நீதிமன்றம் மயிரிழையில் தீர்ப்பில் தப்பித்து இருக்கிறது. முதலில் தற்காலிக பணி […]

Continue Reading